Friday, November 28, 2014

அசோகர் ஏன் மரம் நட்டார்!

அசோகர் மரம் நட்டார்னு சமூக அறிவியல் பாடத்துல ஒரு வரி வரும்.. நமக்கு அசோகர் பத்தி தெரிஞ்ச அதிகபட்ச வரலாறே அது தான். ஏன் மரம் நட்டாருன்னு நாமளும் கேட்ருக்க மாட்டோம்.. கேட்டாலும் வாத்தியார்களுக்கு பதில் தெரியாது!

இல்ல குத்து மதிப்பா.. அப்போ எல்லாரும் நடை பயணமா தான் போவாங்க அவங்க இளைப்பாறன்னு தான் பொதுவா பதில் சொல்லுவாங்க.. ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல.
அசோகர் தன் கடைசிகாலத்தில் புத்த மதத்தை தழுவினார். புத்தர் மரத்தடியில் தான் பிறந்தார். மரத்தடியில் தான் ஞானம் பெற்றார். மரத்தின் கீழ் தான் உயிர்விட்டார். புத்த மதத்தை பரப்பும் நோக்கில் தான் அசோகர் மரம் நடச்சொன்னார்! இல்லன்னா வேலை மெனக்கெட்டு ஏன் அப்டி சொல்லப்போறாரு?

அப்போ எல்லாரும் என்ன இன்னைக்கி மாதிரி மரம் வெட்டிகிட்டு இருந்தாங்களா? இல்ல இன்னைக்கி மாதிரி மரம் நடுவிழான்னு நடத்திகிட்டு இருந்தாங்களா? கங்கை சமவெளியில் அதற்கான அவசியமே இல்லை.

அதே போல அசோகரின் அரசு வெறும் மரம் நடுவதற்கான உதவி மட்டும் தான் செய்யும்.. மக்கள் தான் மரம் நட்டு பராமரிக்க வேண்டும். அது தான் அசோகரின் உத்தரவு. என்னவோ அசோகரே தெருத்தெருவா மரம் நட்ட மாதிரி தான் பேச வேண்டியது! இதையெல்லாம் பாடபுத்தகத்துல வெச்சா வாய்க்கா தகராறு ஆயிரும்.
நாம குத்து மதிப்பா தெரிஞ்சி வச்சிருக்கறதுக்கு பின்னாடி நிறைய அரசியல் இருக்குன்னு ரொம்ப நாள் கழிச்சி தான் தெரியவருது!

1 comment:

விஸ்வப்ரியா said...

Good analysis. . True that there is no need for trees at that time. .