"தண்டனைகள் கடுமை ஆனா தான் தப்புகள் குறையும்" எதோ ஒரு விஜயகாந்த் படத்தை பார்த்து நண்பர் சொன்ன வரிகள் தான் இவை.
ஆனால் பெரும்பாலும் சின்ன வயதிலிருந்தே நமக்கு யாராவது தண்டனை கொடுக்கும் போது மட்டும் "சார் இந்த ஒரே ஒரு தடவை மன்னிச்சிடுங்க சார்.இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேன்" என்ற பதில்களே தொடந்து சொல்லி வந்திருக்கிறோம்.
அது என்ன அடுத்தவனுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்டினி,நமக்கு வந்தா மட்டும் ரத்தம்? என்ற கூக்குரல்கள் தொடர்ந்து கேட்ட வண்ணமே உள்ளன.
அன்னா ஹசரேவின் போராட்டத்துக்கு இடையில் தமிழகத்தில் நடந்த ஒரு போராட்டம் தான் "மூன்று பேருக்கு தூக்கை ரத்து செய்".
முதலில் இந்த பிரச்சினை பற்றி பார்ப்போம்.பேரறிவாளன் திராவிட கழகத்தில் உதவியாளர்,மற்றும் எழுத்தாளர்,ஒரு இஞ்சினியர் கூட.ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ஒன்பது ரூபாய் எவரரேடி பட்டரி வாங்கி கொடுத்தாராம்.அது பெட்டி கடைலயே விக்குது.
இதுக்கெல்லாமா தூக்கு தண்டனை தருவாங்க.பேரறிவாளன் பிரச்சினையை பொருத்த வரை தமிழ் சினிமாவில் காட்டபடுவது போல போலீஸ் அடித்து சித்தரவதை படுத்தி தான் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியது என்கிறார்கள்.
சாந்தன் பொருத்தவரை, சாந்தன் என்ற திருச்சியை சேர்ந்த நபர் இறந்து போய் விட்டார்,அதே பெயரை கொண்ட இவர் வழக்கில் ஜோடிக்கப்பட்டு சிக்க வைக்க பட்டார்.
முருகன் நளினியின் கணவன்,அதனால் வசமாக மாட்டி கொண்டார்.
ஈழ பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை சிக்க வைக்க சிதம்பரம் நகர்த்திய காய் தான் இந்த மூன்று பேருக்கு தூக்கு விவகாரம் என்கின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.
"தூக்கு தண்டனை வேண்டாம்" என எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்கள் சொல்வதெல்லாம் "உலகின் நூற்று முப்பத்து நான்கு நாடுகளில் மரண தண்டனை என்ற ஒன்றே ரத்து செய்யப்பட்டுவிட்டது.மரண தண்டனை வழங்க கடவுள் தவிர யாருக்கும் உரிமை இல்லை" என்பது தான்.
ஆனால் இதற்கு எதிராக இருப்பவர்களின் தீர்மானம்."குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் முன்னாள் பிரதமர் கொலை தொடர்புடையவர்கள்.அவர்கள் விடுதலை ஒரு மோசமான முன்னுதாரனமாகிவிடும்" என்பதே.
என்னுடைய நிலைப்பாடை கடைசியில் பதிவு செய்து விடுகிறேன்.
"இந்த மூன்று நபர்களுக்கு தூக்கு வேண்டாம் என்று சொல்பவர்கள், நாளை அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் போது போராடுவார்களா? உயிர் ஒன்று தானே!"
இந்தியாவில் மரண தண்டனைகள் பல்வேறு வடிவத்தில் காணப்படுகிறது.
சில சமயம் போலீஸ்கள் என்கௌன்ட்டர் என்ற பெயரில் நிகழ்த்துகிறார்கள்.பெரும்பாலான என்கவுன்ட்டர்கள் போலியானவை என்கின்றன சர்வேக்கள்.என்கவுன்ட்டர் மீதான விசாரணை முடிவுகளும் அதையே தான் சொல்கின்றன.
சில மாதங்களுக்கு முன் கோவையில் குழந்தையை ஒருவன் கடத்தி கொலை செய்த போது,அவனை பிடித்த போலீஸ் அவனை என்கவுன்ட்டர்இல் போட்டு தள்ளியதை கோவையே கொண்டாடியது நினைவிருக்கலாம்.
ஊழலுக்கு எதிராக அன்னாவுக்கு பின்னால் திரண்டவர்கள் அளவு கூட மரணதண்டனைக்கு எதிராக மக்கள் கூடாதது வேதனை அளிக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்கிறேன்.
தன்னை சுட்ட கோட்சேவை மக்களே அடித்து கொள்ளவேண்டும் என காந்தி நினைக்கவில்லை.
"இவர்கள் என்ன செய்கிறார்கள் என அறியாமல் செய்கிறார்கள்.இவர்களை மன்னியும்" என்று இறைவனை பார்த்து இயேசு சொன்னார்.
"கண்ணுக்கு கண் தான் மாற்று என்றால் உலகமே குருடாகிவிடும்" என்ற காந்தியின் நிலைப்பாடு தான் என்னுடையது.
மரண மேடையில் கோட்சே நின்றாலும் கசாப் நின்றாலும்,பேரறிவாளன் நின்றாலும்,
"மரண தண்டனை தவறு" என்றே என் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஒருவனுக்கு மரண தண்டனை தர கடவுளை தவிர எந்த ஊழல் அரசுக்கும் அருகதை இல்லை.
அமெரிக்காவிலும்,அரபு நாடுகளிலும் கடுமையான தண்டனைகள் இருக்கிறது,ஆனால் தவறுகள் குறைந்த பாடில்லை.
தண்டனைகள் தவறு செய்தவரை திருத்த உதவ வேண்டுமே தவிர.உயிர் பறிப்பதாக இருக்க கூடாது.
"பகைவனையும் அருள்வாய் நன்னெஞ்சே"
ஆனால் பெரும்பாலும் சின்ன வயதிலிருந்தே நமக்கு யாராவது தண்டனை கொடுக்கும் போது மட்டும் "சார் இந்த ஒரே ஒரு தடவை மன்னிச்சிடுங்க சார்.இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேன்" என்ற பதில்களே தொடந்து சொல்லி வந்திருக்கிறோம்.
அது என்ன அடுத்தவனுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்டினி,நமக்கு வந்தா மட்டும் ரத்தம்? என்ற கூக்குரல்கள் தொடர்ந்து கேட்ட வண்ணமே உள்ளன.
அன்னா ஹசரேவின் போராட்டத்துக்கு இடையில் தமிழகத்தில் நடந்த ஒரு போராட்டம் தான் "மூன்று பேருக்கு தூக்கை ரத்து செய்".
முதலில் இந்த பிரச்சினை பற்றி பார்ப்போம்.பேரறிவாளன் திராவிட கழகத்தில் உதவியாளர்,மற்றும் எழுத்தாளர்,ஒரு இஞ்சினியர் கூட.ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ஒன்பது ரூபாய் எவரரேடி பட்டரி வாங்கி கொடுத்தாராம்.அது பெட்டி கடைலயே விக்குது.
இதுக்கெல்லாமா தூக்கு தண்டனை தருவாங்க.பேரறிவாளன் பிரச்சினையை பொருத்த வரை தமிழ் சினிமாவில் காட்டபடுவது போல போலீஸ் அடித்து சித்தரவதை படுத்தி தான் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கியது என்கிறார்கள்.
சாந்தன் பொருத்தவரை, சாந்தன் என்ற திருச்சியை சேர்ந்த நபர் இறந்து போய் விட்டார்,அதே பெயரை கொண்ட இவர் வழக்கில் ஜோடிக்கப்பட்டு சிக்க வைக்க பட்டார்.
முருகன் நளினியின் கணவன்,அதனால் வசமாக மாட்டி கொண்டார்.
ஈழ பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை சிக்க வைக்க சிதம்பரம் நகர்த்திய காய் தான் இந்த மூன்று பேருக்கு தூக்கு விவகாரம் என்கின்றார்கள் அரசியல் நோக்கர்கள்.
"தூக்கு தண்டனை வேண்டாம்" என எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்கள் சொல்வதெல்லாம் "உலகின் நூற்று முப்பத்து நான்கு நாடுகளில் மரண தண்டனை என்ற ஒன்றே ரத்து செய்யப்பட்டுவிட்டது.மரண தண்டனை வழங்க கடவுள் தவிர யாருக்கும் உரிமை இல்லை" என்பது தான்.
ஆனால் இதற்கு எதிராக இருப்பவர்களின் தீர்மானம்."குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் முன்னாள் பிரதமர் கொலை தொடர்புடையவர்கள்.அவர்கள் விடுதலை ஒரு மோசமான முன்னுதாரனமாகிவிடும்" என்பதே.
என்னுடைய நிலைப்பாடை கடைசியில் பதிவு செய்து விடுகிறேன்.
"இந்த மூன்று நபர்களுக்கு தூக்கு வேண்டாம் என்று சொல்பவர்கள், நாளை அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் போது போராடுவார்களா? உயிர் ஒன்று தானே!"
இந்தியாவில் மரண தண்டனைகள் பல்வேறு வடிவத்தில் காணப்படுகிறது.
சில சமயம் போலீஸ்கள் என்கௌன்ட்டர் என்ற பெயரில் நிகழ்த்துகிறார்கள்.பெரும்பாலான என்கவுன்ட்டர்கள் போலியானவை என்கின்றன சர்வேக்கள்.என்கவுன்ட்டர் மீதான விசாரணை முடிவுகளும் அதையே தான் சொல்கின்றன.
சில மாதங்களுக்கு முன் கோவையில் குழந்தையை ஒருவன் கடத்தி கொலை செய்த போது,அவனை பிடித்த போலீஸ் அவனை என்கவுன்ட்டர்இல் போட்டு தள்ளியதை கோவையே கொண்டாடியது நினைவிருக்கலாம்.
ஊழலுக்கு எதிராக அன்னாவுக்கு பின்னால் திரண்டவர்கள் அளவு கூட மரணதண்டனைக்கு எதிராக மக்கள் கூடாதது வேதனை அளிக்கிறது.
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்கிறேன்.
தன்னை சுட்ட கோட்சேவை மக்களே அடித்து கொள்ளவேண்டும் என காந்தி நினைக்கவில்லை.
"இவர்கள் என்ன செய்கிறார்கள் என அறியாமல் செய்கிறார்கள்.இவர்களை மன்னியும்" என்று இறைவனை பார்த்து இயேசு சொன்னார்.
"கண்ணுக்கு கண் தான் மாற்று என்றால் உலகமே குருடாகிவிடும்" என்ற காந்தியின் நிலைப்பாடு தான் என்னுடையது.
மரண மேடையில் கோட்சே நின்றாலும் கசாப் நின்றாலும்,பேரறிவாளன் நின்றாலும்,
"மரண தண்டனை தவறு" என்றே என் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஒருவனுக்கு மரண தண்டனை தர கடவுளை தவிர எந்த ஊழல் அரசுக்கும் அருகதை இல்லை.
அமெரிக்காவிலும்,அரபு நாடுகளிலும் கடுமையான தண்டனைகள் இருக்கிறது,ஆனால் தவறுகள் குறைந்த பாடில்லை.
தண்டனைகள் தவறு செய்தவரை திருத்த உதவ வேண்டுமே தவிர.உயிர் பறிப்பதாக இருக்க கூடாது.
"பகைவனையும் அருள்வாய் நன்னெஞ்சே"