Wednesday, November 20, 2013

SEO என்றால் என்ன?

நேற்று ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி என ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்!! அதைப்படித்துவிட்டு நண்பர் ஒருவர் நிறைய கேள்விகளைக்கேட்டார்.. அது அப்படியே social media marketing என்ற தளம் நோக்கி நகர்ந்தது!! 

அது ரொம்ப சுவாரசியமாகவும், புதுமையானதாகவும் இருந்ததாகவும் சொல்லி “பேசாம இதைப்பத்தி தொடர்ச்சியா எழுதுனீங்கன்னா நிறைய பேர் தெரிஞ்சிக்குவாங்கள்ல.. நாமளும் உருப்படியா எதோ பண்ண் மாதிரி இருக்கும்” என்றார்! 

முன்பு ஒருமுறை என் வலைத்தளத்தில் (swaravaithee.blogspot.in ) வலைதளங்கள் உருவாக்கம், Search engine optimization (SEO) பற்றிய அடிப்படைகள், அப்படியே social media marketing என தொடர்ச்சியாக எழுதும் எண்ணம் இருந்தது!! இரண்டு மூன்று பதிவுகள் எழுதிவிட்டு பின் சோம்பேறித்தனத்தின் காரணமாக விட்டுவிட்டேன்!! 

SEO என்பது ஒரு இணையதளத்தை கூகிளின் முதல்பக்கத்தில் கொண்டு வருவதற்கு செய்யப்படும் சில உத்திகள்! இன்று எதுவாக இருந்தாலும் இணையத்தில் தான் தேடுகிறார்கள்!! உதாரணமாக நான் ஒரு இன்வர்டர் பிசினஸ் செய்வதாக வைத்துக்கொள்வோம்! அதிகபட்சம் என் பிசினஸ் பற்றி என் ஏரியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்! 

விளம்பரத்திற்காக பேப்பரில் வரி விளம்பரமோ, யெல்லோ பேஜஸிலோ என்னைப்பற்றி கொடுப்பேன்!! இது பொதுவான அட்வர்டைஸிங்க்.. காரணம் நான் கொடுக்கும் விளம்பரத்தை இன்வர்டர் தேவையானவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் பார்க்கும் வகையில் தான் இது உதவும்!! 

ஆனால் கூகிளில் “inverters in chennai" என்று தேடுபவர்கள்.. தங்களுக்கு inverter தேவை என்பதாலேயே தேடுகிறார்கள்! அப்போது நம் இணையதளம் search resultல் முதல் பக்கத்தில் இருக்கும்போது நம் பக்கத்திற்கு அவர்கள் வர வாய்ப்பிருக்கிறது! 10 பேர் வருகிறார்களென்றால் அவர்களில் 8 பேர் நிச்சயமாக நமக்கு கால் செய்வார்கள்!! இது டைரக்ட் மார்கெட்டிங்க்! 

ஒரு தகவல்! உலகெங்கும் 7 லட்சம் வெப்சைட்டுகள் இருக்கின்றன! அவர்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்கள் தளத்திற்கு SEO செய்கிறார்கள்!! அப்படியென்றால் மார்கெட் எவ்வளவு பெரியதென யோசித்துக்கொள்ளுங்கள்!!

ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி  

ஃபேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவது எப்படி!

நண்பர் ஒருவருக்கு சொன்ன சில டிப்ஸை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!! எனக்கு தெரிந்து நிறைய லைக் வாங்கியவர்கள் இப்படி தான் வாங்கியிருக்க வேண்டும்!! நான் இப்போது பெரிய ஃபேஸ்புக் பிரபலமாக இருக்கும் ஒருவரை அனலைஸ் செய்ததை வைத்து சொல்கிறேன்!! 

(இதெல்லாம் ஒரு டாபிக்னு ஸ்டேட்டஸா போடறீங்க.. என்று நல்லவர் போல நடிக்கும் நண்பர்கள் இந்த பதிவை தவிர்க்கவும்.. உங்களால முடியாதுன்னு தெரியும்) 

அதிக லைக் வாங்குவது ரொம்ப சிம்பிள்.. அதற்கு பெரிய அறிவு ஜீவித்தனமோ, அதி புத்திசாலித்தனமோ தேவையேயில்லை.. ஆண் பெண்ணாகி ஃபேக் ஐடியாக வேண்டிய அவசியமும் இல்லை!! 

ஃபேஸ்புக்கின் கான்சப்ட் தெரிந்திருந்தால் போதும்.. இது ஒரு சோசியல் நெட்வோர்க்.. எனவே கொஞ்சம் சோசியலாக மூவ் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.. அவ்வளவு தான் சிம்பிள்!! 

அதென்ன சோசியலாக.. எல்லோருகிட்டயும் நம்பர் வாங்கி பேசணுமா? தேவையேயில்லை! எல்லோரோடும் கொஞ்சி குலாவ வேண்டிய அவசியமில்லை.. ஆனால் எல்லோர் பதிவிலும் ஒரு பார்வை இருக்க வேண்டும்!! 

300 லைக் வாங்குகிறவர்களை விட்டுவிடுங்கள் பாவம்.. அவர்களுக்கு யார் லைக் போடுகிறார்களென்பது அவர்களுக்கே தெரியாது!! ஆனால் 3 லைக் மட்டுமே வாங்குகிறவர்கள் முக்கியமானவர்கள்!! “பார்றா நம்மளையும் மதிச்சி ஒருத்தன் லைக் போடறான்” என அவர்களை உங்கள் பக்கம் திரும்ப வைக்க இது உதவும்!! பெரும்பாலும் நாம் போடும் லைக்கை விட கமெண்ட் போடுவது நிறைய உதவும்! நிறைய பேரால் பார்க்கப்படும்! 

சோசியல் நெட்வொர்க்கின் பலமே interaction எனப்படுகிற உரையாடல் தான்!! தொடர்ந்து ஒரு பிரபலத்தின் பக்கத்தில் நாம் கமெண்ட் போடுவதன் மூலம் அவர் பக்கத்திற்கு வருபவர் “இவர் கமெண்டெல்லாம் நல்லாயிருக்கே..” என நம் பக்கத்துக்கு வந்து பார்ப்பார்..பின்னர் நாம் எழுதுவதை தொடருவார்! அவ்வளவு தான்! 

எழுதும்போது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றை பற்றி எழுதலாம்.. அரசியல் தெரியுமென்றால் அரசியல், கதையென்றால் கதை..!! கவிதை, ஜோக் என எதை வேண்டுமானாலும் பகிரலாம்! காமெடியாக எழுதுபவர்கள் நிறைய பேரை எளிதில் அடைய முடியும்!! 

பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட அணியில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவார்கள்..உதாரணமாக தி.மு.க அணி, ஆதிமுக அணி, மதிமுக அணி என்றெல்லாம் தனித்தனியாக இருக்கிறார்கள்.. ஆனால் அடி விழும்போது நமக்கும் விழும்! 

நிறைய லைக் வாங்குவதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும்.. நேரம் செலவிட வேண்டி வரும்.. அது முடியாதவர்கள் என்னை மாதிரி ஸ்டேட்டஸ் போட்டமா போனோமான்னு இருப்பாங்க அவ்ளோ தான்!!

SEO மற்றும் ஆன்லைன் மார்கெட்டிங்க் பற்றி தமிழில் தெரிந்துகொள்ள

Thursday, November 14, 2013

வேலையால் இழந்தது அதிகம்!!

நேற்று கம்யூனிச நண்பர் ஒருவரோடு போனில் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் இருவருக்கும் தெரியாமலே ஒரு முக்கியமான தலைப்புக்குள் நுழைந்துவிட்டிருந்தோம்.. இந்தியாவில் வேலை எப்படி மாறியிருக்கிறது என்பது பற்றிய நீண்ட விவாதம் அது!!

சொல்லப்போனால் இந்தியர்களுக்கு வாழ்க்கை வேறு வேலை வேறு இல்லை.. வேலைக்காக நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.. “ நான் பேப்பர் படிச்சே 3 வருசம் ஆச்சி” என என் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது.. நண்பர்களை இழந்திருக்கிறோம்.. புதிய நண்பர்கள் கிடைத்திருப்பது போல தெரியும்.. ஆனால் அவர்கள் வேலை சார்ந்த நண்பர்கள்.. அலுவலகம் மாறும் போது நண்பர்களும் மாறுவர்.. 

கார்பரேட்டில் வேறு டீமுக்கு மாறும்போது வேறு நண்பர்களுக்கு மாறுவோம்.. வேலைக்காக சரியான சாப்பாட்டை இழந்திருக்கிறோம்.. குடும்பம்.. குழந்தைகளின் படிப்பு.. ஏன் மனைவியைகூட வெறும் சமைத்து போடும் மெசினாகவும், செக்ஸ் மெசினாகவும் பார்க்க வைத்தது கூட வேலை தான்!! 

இப்படியாக 58 வயது வரை வேலை பார்த்துவிட்டு, திடீரென ரிட்டெயரான ஒருவரை கவனித்திருக்கிறீர்களா? 20 நாள் ஹாஸ்பிட்டலில் பெட் ரெஸ்டில் இருந்துவிட்டு திடீரென ஒரு நாள் டிஸ்சார்ஜ் ஆகும் ஒருவர், ரோட்டில் நடக்கும் போது குழந்தை போல புதிதாக நடக்க முயற்சிப்பாரே... அது போல இருக்கும்!

சொல்லப்போனால் மனிதனிடம் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட வாழ்க்கை என்பது இருந்ததில்லை.. விலங்குகள் போல தினம் தினம் உணவு தேடி அலைந்தான்.. அதனால் வாழ்க்கை சுவாரசியமாக போய்க்கொண்டேயிருந்தது.. ஒரே இடத்தில் வாழ திட்டம் போட்டு, அவன் இருக்கும் இடத்திலேயே உணவு உற்பத்தியை துவங்கினான்..ஆரம்பத்தில் உணவு மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது.. இப்போது அதைத்தாண்டிய கவலைகளே நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.. 

இப்படியாக ஒரு மணி நேரம் பேசியும் முடியாமல் நீண்டுகொண்டே போன பேச்சு நிறைய கேள்விகளை கிளறிவிட்டிருக்கிறது!! முடிவிலா யோசனையில் முழுதாக நுழைந்திருக்கிறேன்!!

nhm writer வைரஸ் காட்டுகிறதா?

இரண்டு நாட்களுக்கு முன்பு nhm writer மக்கர் செய்தது.. என்ன முயன்றும் ஏதும் செய்யமுடியாத நிலை... காரணம் avg ஆண்டிவைரஸ் nhm writerல் இருக்கும் "nhmy.dll" ஃபைல் ஒரு ட்ரோஜன் வைரஸ் என தீர்மானித்திருந்தது.. இது avgயின் லேட்டஸ்ட் அப்டேட் காரணமாக இருக்கலாம்!! 

ஒரு கட்டத்தில் avgஐ uninstall செய்யலாமா? nhm writerஐ uninstall செய்யலாமா என்ற நிலை வந்தபோது.. உயிர் முக்கியமா.. விரல் முக்கியமா என்ற நிலை வந்தால் என்ன முடிவெடுப்போமோ அந்த முடிவை தான் எடுத்தேன்!! ஆம்.. nhm writerஐ தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு.. Anbalagan Veerappan அண்ணனின் ஸ்டேட்டஸ் பார்த்து google transilierationக்கு தாவினேன்! அது டவுன்லோட் செய்யவே தாவு தீர்ந்தது!! 

திரும்ப மொதல்லேர்ந்து தமிழ் டைப்பிங்க் கற்று கொள்ளும் மனநிலையை அது வழங்கியது.. முன்பு மாதிரி எழுதவோ கமெண்ட் போடவோ முடியவில்லை.. பழைய படி எழுத ரொம்ப நாள் ஆகும் என தெளிவாக தெரிந்தது.. nhm writer நிறுவனரான பத்ரியை அனுகலாமா என்று யோசித்தேன்.. அவர் ஒரு முறை தெரியாத்தனமாக “எந்த பிரச்சினைன்னாலும் என்னை அணுகுங்க” என்று சொல்லியிருந்தது தான் காரணம்!! 

ஆனாலும் அவர் டிவியில் எல்லாம் வந்து பயங்கர பாப்புலராகி விட்டதால், நமக்கெல்லாம் பதிலளிப்பாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது!! எதுக்கு வம்பு.. என கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டேன்.. 

நேற்று திடீரென nhm writer உருவாக்கியவர்களில் ஒருவரே சேட் பாக்ஸுக்கு வந்து, nhm writerன் அப்டேட்டட் வர்சனான nhm2.0 வை பரிந்துரைத்தார்!! ( நம்ம ஸ்டேட்டஸ் பாத்து தான் வந்துருக்காரு.. ஏழுகிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன் ஸ்டேட்டஸ் போட்டால் என்ற காமெடி தான் நினைவுக்கு வந்தது.. கண்டுகாதீங்க.. coincidenceஆக இருக்கலாம்) 

வெற்றிகரமாக nhm writer 2.0 மிக கச்சிதமாக வேலை செய்கிறது!! சேட் பாக்ஸுக்கு வந்து உதவிய நண்பருக்கு நன்றிகள் (அவரை டேக் செய்தால் அடி விழுமான்னு தெரியல) இனி நம் ஸ்டேட்டஸ் புரட்சி வழக்கம் போலவே தொடரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்!! 

http://software.nhm.in/products/writer லிங்கிற்கு சென்று nhm writerஐ தரவிறக்கம் செய்து வழக்கம் போலாவே ஸ்டேட்டஸ் புரட்சி வாழ்க்கைக்கு திரும்புமாறு நண்பர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!!

Saturday, November 9, 2013

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரலாமா?

நேற்று அவசர அவசரமாக ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காட்சி பார்த்தேன்.. ஒரு சின்ன குழந்தை (7 வயதுக்குள் இருக்கும்) கடையில் எதையோ காட்டி “அது வேணும்” என்பதாக அடம் பிடித்துக்கொண்டிருந்தது!! 

அந்தப்பா அந்த குழந்தைக்கு எதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தை எதையுமே கேட்கத்தயாராகயில்லை.. அந்தப்பாவுக்கு அந்த பொருளை வாங்கித்தருவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. 


ந்த பொருள் அவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவே இருந்தது.. ஆனால் அவர் அந்த குழந்தைக்கு சொன்ன சமாதானம் “அது நமக்கு வேணாம்டா செல்லம்.. நீ ரெண்டு நாள் அத வெச்சி வெளாடிட்டு அப்பறம் தூக்கி போட்டுடுவ.. போன தடவை இப்டி தான் ஒண்ணு வாங்கி தந்தேன்.. அத இப்போ என்ன பண்ண?”


“அது ஒடஞ்சி போச்சிப்பா” இப்படியாக நீண்ட உரையாடல் போய்க்கொண்டிருந்தது.. நான் பேருந்து வந்துவிடவே ஏறிக்கொண்டுவிட்டேன்.. பேருந்தில் எனக்கு இந்த சம்பவம் பற்றி நீண்ட சிந்தனை போய்க்கொண்டே இருந்தது!!

அந்த குழந்தை ஆசையாக கேட்கிறது.. (டெக்னிகலாக want என்பார்கள்) அவர் அது அவசியமா தேவையா என தர்க்கம் செய்கிறார் (டெக்னிகலாக need என்பார்கள்).. குழந்தைகளுக்கு need பற்றி யோசிக்கிற அளவுக்கு அனுபவ அறிவு போதாது.. அவர்களுக்கு அப்போதைக்கு எது தோன்றுகிறதோ, எதன்மீது உடனடி ஆசையோ அது வேண்டும்.

அந்த குழந்தையை தப்பு சொல்ல முடியாது.காரணம் நமக்கு ஒவ்வொரு வயதிலும் ஒரு ஆசை வரும்.. குழந்தையாக இருக்கும்போது சாக்லேட் நிறைய சாப்பிடலாம் போல தோன்றும். ஆனால் அதுவே பெரியவனாக ஆனபிறகு நமக்கு யாராவது சாக்லேட் கொடுத்தாலும், அதை அலட்சியமாக வாங்கி பேக்கெட்டில் போட்டுவிட்டு பிறகு யாருக்காவது தூக்கிக்கொடுத்துவிடுவோம்..

ஆனால் குழந்தைக்கு அந்த வயதில் பூர்த்தியாகாத அந்த ஆசை பின் எப்போது கிடைத்தாலும் அதில் பெரிய ஆர்வம் இருக்கப்போவதில்லை!! ஆனால் அந்த அப்பா அதே பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்!! அதற்காக குழந்தை செல்போன் கேட்கிறது என்றால் வாங்கித்தர முடியாது!! அது need வரிசையில் வந்து விடும்!!

குழந்தை வளர்ப்பு புத்தகம் இந்த பிரச்சினையை இப்படி ஹேண்டில் செய்யச்சொல்கிறது!! தினம்தோறும் அந்த குழந்தைகென குறிப்பிட்ட தொகை ஒதுக்கி அதன் கையில் கொடுத்து விடுங்கள்!! 5ரூ என வைத்துக்கொள்வோம்!! அது அந்த காசை எதற்கு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளட்டும்.. end of the day அதை என்ன செய்தாய் என்று மட்டும் அந்த குழந்தையிடம் கேட்டுவிட்டு விட்டுவிடுங்கள்..

ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த 5 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட அனுமதியில்லை என்பதில் தீர்மானமாக இருங்கள்.. உதாரணமாக குழந்தை ஆசைப்படும் பொருள் விலை ரூ50 என்றால், தனக்கு கிடைக்கும் 5ரூபாயை பத்து நாள் சேர்த்து வைத்து அந்த பொருளை வாங்க பழக்குங்கள்..

இதன் மூலம் அந்த குழந்தைக்கு சேமிக்கும் பழக்கம் வரும்.. பணம் கையாளும் திறன் வரும்.. எந்த பொருளையும் சேமிப்பதன் மூலம் வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கை வரும். ஒரு வேளை வாங்கிய பொருள் வேஸ்ட் என்றால் அடுத்த பொருள் வாங்க இதே போல காத்திருந்து வாங்க வேண்டி வரும் என்பது புரியும்!! அதனால் அனாவசியமான பொருள்களை காலப்போக்கில் குழந்தைகளே தவிர்க்க ஆரம்பிப்பார்கள்!!