Monday, May 5, 2014

இணையத்தின் மூலம் பணம் உண்மையா - 4

இணையத்தில் சம்பாதிக்க சின்னசின்னதாக எவ்வளவோ வாய்ப்புகள்  நாம் தினம்தோறும் கேள்விபட்டுக்கொண்டேயிருக்கிறோம். எஸ்.எம்.எஸ் அனுப்பினால் காசு.. ரீசார்ஜ் பண்ணால் காசு. ஆள் சேத்துவிட்டால் காசு. எழுதினா காசு.. லைக் பண்ணா காசு.. நின்னா காசு உக்காந்தா காசு. என ஏகபட்ட முறைகள் இருந்தாலும் நான் பரிந்துரைக்கும் முறை ஒன்று தான்!

ஒரு தளம் ஒன்று துவங்கி அதில் நேரத்தை செலவிடுங்கள். உதாரணமாக எழுதலாம். தமிழோ.. ஆங்கிலமோ. எனக்கு தெரிந்த ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள், பல்கலைக்கழகத்தில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் இதெல்லாம் தொடர்ச்சியாக ஒரு வெப்சைட்டில் போட்டு வைத்தால் என்ன? என்று அவருக்கு தோன்றியது.உடனே ஒரு தளத்தை துவங்கி அதில் அவ்வப்போது இந்த தகவல்களையெல்லாம் தொடர்ச்சியாக பதிவேற்றிக்கொண்டே வந்தார்.

முதலில் பத்து பேர், இருபது பேர் என பார்த்தவர்கள் எண்ணிக்கை, நாளாக நாளாக பல்லாயிரமாக பெருகிறது.இப்போதெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்போது ரிசல்ட் வருமென அண்ணா பல்கலைக்கழகத்தின் தளத்திற்கு சென்று பார்ப்பதற்கு முன்பே இவரின் தளத்திற்கு சென்று தான் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு பாப்புலராகிவிட்டது.இது தான் அவரின் இணையதளம் : http://www.rejinpaul.com/) ஃபேஸ்புக்கில் மட்டுமே இவர் தளத்தை ஒன்றரை லட்சம் பேர் தொடர்கிறார்கள்.

ஆட்கள் அதிகரிக்க அதிகரிக்க விளம்பரத்தின் மூலம் மட்டுமே ஆயிரக்கணக்கில் காசு வருகிறதாம். வெளிநாட்டில் எல்லாம் இந்த முறை ரொம்ப பிரசித்தம். இவர்களை பதிவர்(blogger) என்பார்கள். பயணப்பதிவர்கள் (travel blogger) என்று ஒரு குரூப் இருக்கிறார்கள். வாரம் ஒருமுறை எங்காவது சென்று பயணத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் அங்கே கிடைத்த வித்தியாசமான உணவுகள், மனம் கவர்ந்த மனிதர்கள் என எழுதுவார்கள். கூடவே பயணத்தின் போது எடுத்துக்கொண்ட போட்டோவும் போடுவார்கள்.

இப்படி வாரம் ஒருமுறையோ மாதம் இருமுறையோ, அவரவர் வசதிக்கு தகுந்தவாறு எழுதுவார்கள்.இப்படி எழுதுவதையே முழு நேர வேலையாக வைத்துக்கொண்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்துகிறவதெல்லாம் வெளிநாடுகளில் சர்வசாதாரணம். அங்க ஓகே.. நம்மூர்ல இதெல்லாம் நடக்குமா? என்கிறீர்களா?

இங்கேயும் சிலர் சம்பாதிக்கிறார்கள்.சென்னை, பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் சில கல்லூரி மாணவர்கள் டெக் பதிவர்கள் (techi bloggers) என்ற பெயரில் அவ்வப்போது வரும் தொழில்நுட்பம் பற்றி எழுதி மாதமானால் ஐநூறு டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

என்னை கேட்டால் வெப்சைட் என்பது நிலம் வாங்குவது போல தான்.. வருடம் ஆக ஆக அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். மதிப்பு உயர நாம் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அவ்வளவே.. கடைசியாக ஒன்று.. olx.com வெப்சைட் தெரியுமா? 2006லேயே இந்த தளத்தை துவங்கிவிட்டார்கள். இப்போது டிவியில் விளம்பரம் செய்யுமளவுக்கு இந்த வெப்சைட் வளர்ந்திருக்கிறதென்றால் தினம் தோறும் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று யோசித்துக்கொள்ளுங்கள்..விபரம் அடுத்த வாரம்