Monday, November 24, 2014

தினத்தந்தி செய்தி!

காலையில் தினத்தந்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியானேன்.. தாம்பரம் அருகே இரண்டு அக்காக்கள் சேர்ந்து தம்பியை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.. அதற்கு காரணம் தம்பிக்கு கல்யாண ஆசை வந்து மணமகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அது அந்த சகோதரிகளுக்கு பிடிக்கவில்லை.

"நீ கல்யாணம் பண்ணிகிட்டா நாளை வர்ற பொண்ணு உன்னையும் எங்களையும் பிரிச்சிடுவா" என்பதாக சண்டை போட்டிருக்கிறார்கள்! இந்த அக்காக்களுக்கு திருமண வயது கடந்து விட்டது. இருவருக்கும் திருமணம் செய்யவே விருப்பம் இல்லையாம்.

பொறுத்து பொறுத்து பார்த்த தம்பி நாமளாவது கல்யாணம் பண்ணிக்குவோம் என தனக்கு வரன் தேடத்துவங்கி இருக்கிறார். அதுவும் இந்த அக்காக்களுக்கு தெரியாமல். அட்சுவலி இந்த பையனுக்கு 7 வயது இருக்கும்போதே அம்மா அப்பா இறந்திருக்கிறார்கள். அக்காக்கள் தான் இவனை வளர்த்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த பையனுக்கு சைதாபேட்டை அருகே ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இவன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துவிடக்கூடாது.. பாஸ்போர்ட் கிடைக்க கூடாது என்பதற்காக அக்காக்கள் இவன் மீது போலீஸில் கம்ப்ளெயிண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். வக்கீலிடம் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள்.

"என்னமா இப்டி பண்றீங்க" என அவர் அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டாராம். இனி நம்மால் எதுவுமே செய்ய முடியாது என தெரிந்தபின் தம்பியை கொன்றுவிட்டு இவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்! ராத்திரி வேலைக்கு போய்விட்டு தம்பி கதவை தட்டியிருக்கிறார்.
கதவை திறந்த அக்காக்களில் ஒருவர் இரும்பு அயர்ன் பாக்ஸால் தம்பியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். பின் கத்தியால் தம்பியை குத்தியிருக்கிறார்.

தம்பி தப்பித்து ஓடி வெளியே வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். விபரமறிந்த போலீஸ் பேட்ரோல் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியே லைட் அடித்து பார்த்த போது (இருட்டாக இருந்ததால்) உள்ளே ஒரு பெண்மணி ரத்தம் பீறிட படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த அக்காக்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பு : சமீபகாலங்களில் சினிமாவுக்கே செல்வதில்லை. 5 ரூபாய் செலவு செய்து தினத்தந்தி படித்துவிடுகிறேன். படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

No comments: