Saturday, December 24, 2011

இந்தியன் தாத்தா(அண்ணா ஹசரே(?))வின் மவுசு குறைஞ்சிபோச்சா



கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா ஹசரே உண்ணாவிரதம் இருந்த போது அவரது போராட்டத்த்தில் ஒரு நாளில் சராசரியாக கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை முப்பதாயிரம்.ஆனால் சமீபத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த போது வெறும் பதினெட்டாயிரம் பேரே கூடினர்.

“இதை பார்த்தாலே தெரியல!! அண்ணா ஹசரேக்கு மவுசு குறைஞ்சி போச்சின்னு” என்கிறார்கள் ஹசரே எதிர்ப்பாளர்கள்.

“மாப்புள அவரு பா.ஜ.க ஆளுடா!! அதனால தான் இப்படி என்கிறார்கள் என் நண்பர்கள்..
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது? என இதை பற்றி மொக்கையாக ஒரு ப்ளாக் போடலாம் என அக்கம் பக்கம் விசாரித்து அலசலாயினேன். 

ஆரம்பத்தில் அண்ணா ஹசரே உண்ணா விரதம் இருந்த போது யாருக்குமே அவரைப்பற்றி முழுசாக தெரியவில்லை என்பது தான் உண்மை.அது மட்டுமல்லாமல் இந்தியன் தாத்தா, இன்னொரு காந்தி என கொடுக்கப்பட்ட ஏகப்பட்ட பில்ட்டப்களும், “அவரை எப்படி ராசா இருக்கற திகார்ல கொண்டு போய் அடைக்கலாம்?” என்ற கேள்விகளும், காங்கிரஸ் ஆட்சி மீதான கடுப்புகளும், ஸ்பெக்ட்ரம் விவகாரமும் சேர்ந்துகொள்ள, போதும் போதாததற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக என்.டி.டிவிக்கள் பொழுதுக்கும் நடத்திய விவாதத்தை பார்த்து லேக்கியம் விக்கிரவனுக்கு கூடிய கூட்டத்தை விட அதிகமாக ஆட்கள் கூடிய போது, “ஒருவேளை ஆட்சிய புடிச்சிடுவாய்ங்களோ” என அத்தனை கட்சிகளும் வாய் பிளந்தார்கள்.

ஹசரே கூட்டம் கூட்டி, உண்ணா விரதம் இருந்ததோடு நிறுத்தி கொண்டிருக்கலாம், அதை விட்டுவிட்டு “நான் சொல்லறது தான் சட்டமாக்கும்” என்ற ரீதியில் “ஜன்லோக்பாலை ஆதரிக்காத எம்.பி வீடுகளை கேரோ செய்யுங்கள்” என்றும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு இணையாக  காங்கிரசுக்கு எதிராக களம் இறங்கி பிரச்சாரம் செய்ததையும் பார்த்த பலரும்
‘மாப்புள இவனுங்க காமெடி பீஸ் மாப்ள” என்ற கணக்காக என வேடிக்கை பார்க்கதுவங்கி விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு பின்னால் கூடிய இளைஞர்களின் மனோநிலையை பல்ஸ் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.அவர் எப்படி சுதந்திரப்போராட்ட காந்தி அல்லவோ, அதே போல அவருக்கு பின்னால் சென்றவர்களும் காந்தியின் followers அல்ல.காந்திக்கும், அவரை பின்பற்றியவர்களுக்கும் பொறுமை இருந்தது, ஆனால் நம்மவர்கள் பாஸ்ட்பூட் மனோநிலை “கொலைவெறி” ரசிகர்கள்.அவர் போன வேகத்தை பார்த்தவர்கள் “அன்னாவின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்தவுடனே அரசு கண்ணைமூடிக்கொண்டு ஜன்லோக்பாலை சட்டமாக்கி விடுவார்கள், அந்த சட்டம் அமுலுக்கு வந்த அடுத்த அரைமணிநேரத்தில் இந்தியா வல்லரசாகி விடும்” என்ற வெற்றிகொடிகட்டு வேக மாயக்கற்பனையில் மூழ்கி இருந்தார்கள்.

அவர்கள் “ஏற்கனவே இருக்கும் சட்டங்களே ஊழலை ஒழிக்க போதுமானவை” என்பதை ஏற்றுகொள்ள தயாராக இல்லை. 

இது ஒருபுறமிருக்க அன்னாவின் மீதும் அவர் கூட்டத்தின் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலருக்கும் திகிலாக இருந்தது.இவர் சொன்ன லோக்பாலில் கார்பரேட்கள் இல்லை, இதற்கு காரணம் இவரது உண்ணாவிரதத்திற்கு ஒரு கார்பரேட் நிறுவனம் “ஐம்பது லட்ச ரூபாய் வழங்கி இருந்தது” என்பது தான் என்றபோது அது சர்ச்சைகுள்ளானது.அன்னா ஹசாரே தனக்கு சொந்தமான தொண்டு நிறுவனத்து பணத்தை தன் பிறந்தநாள் கொண்டாட பயன்படுத்தியது, அரவிந்த் கேய்ஜிரிவால் நிறுவனத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் வெளிநாட்டு பணம் குவிந்தது, கிரண்பேடி ஊரில் இருக்கும் தொண்டுநிறுவனத்திடம் எல்லாம் பணத்தை பிடுங்கி தன் தொண்டு நிறுவனத்தை வளர்த்தது, என்பன போன்ற ஹசரே குழுவினரின் தினசரி ஆக்டிவிட்டிக்கள் அவரை, திமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்த வடிவேலுவாக்கியது. 

இவை எல்லாம் தான் அவர் பின் செல்லும் கூட்டத்தை குறைக்க காரணம் என்கிறார்கள் சிலர்.

தன் மீதும் தன் குழுக்களின் மீதும் படிந்துள்ள கரையை துடைக்கவேண்டிய கறை ஹசரேவுக்கு உள்ள நிலையில், மீண்டும் அதே போன்ற கூட்டத்தை இவரால் சிறைநிரப்பும் கூட்டத்திற்கு கூட்ட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இந்த பதிவை எழுதும் இந்த நேரத்தில் டிவியில் ஓடும் “இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது” என்ற வடிவேலு காமெடி ஹசாரேவுக்கும் பொருந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tuesday, October 18, 2011

அங்கீகரிக்கப்பட்ட தீபாவளி





சென்ற தீபாவளிக்கு முந்தைய நாட்களை என்னால் மறக்கவே முடியாது.குறிப்பாக எப்பொழுதுமே தீபாவளிக்கு முந்தைய சில நாட்களிலேயே பணபற்றாகுறை துவங்கி விடும்.காரணம் டிரஸ் எல்லாம் எடுத்து, கண்ட மேனிக்கு வெளியூர் சென்று, என்று ஒரே கும்மாளம் தான்.ஆனால் சென்ற தீபாவளியில் தான் நான் முதன் முதலாக வேலைக்கு சேர்ந்திருந்தேன்.ஆனால் இரண்டு மாத சம்பள பாக்கி.பய புள்ள குடுக்கமாட்டேனுடானுங்க.நானும் சும்மா இல்லாம "நானா சம்பாதிச்ச காசுல தான் டிரஸ் வாங்குவேன்ன்னு” ஒரு பிட்ட வேற வீட்டுல போட்டுருந்தேன்..எங்க அப்பா பதிலுக்கு "அப்ப இந்த தீபாவளிக்கு டிரஸ்ஏ எடுக்க போறது இல்லையா?" என்று வெந்த புண்ணில் வேலை வேறு பாய்ச்சினார்.

தீபாவளி நெருங்க நெருங்க, அவர் சொன்னது உண்மை ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு லேசாக வர துவங்கி இருந்தது.தீடீரென எனக்கு எங்கள் கல்லூரி தமிழ் துறை தலைவரிடமிருந்து கால் "வைத்தி.. நாம ரொம்ப நாலா பட்டிமன்றம் போடலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தோம்ல. நமக்கு சரியான அடிமைகள் சிக்கிடாங்க"...

தலைப்பு "அதிக சந்தோசத்தை தருவது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையா? திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையா?" நான் "திருமணத்திற்கு முந்தைய வாழ்கையே" என்பதை தேர்ந்தெடுக்கலாம் என்று எத்தனித்த வினாடியே என்னை "திருமணத்திற்கு பிந்தைய வாழ்கையே" என்ற அணியில் சேர்த்திருந்ததாக அவர் கூறி கடுபெற்றினார்.“அய்யயோ தோத்து போயிடுவோமே, கைல பாயிண்டே இல்லையேஎன்று தான் யோசித்து கொண்டிருந்தேன்..ஆனால் நான் கலக்கபோவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளுக்காக தயாரித்து வைத்திருந்த காமெடிகள் கைகொடுத்தன( நான் கலக்கபோவது யாரில் பங்கு கொள்ளவெல்லாம் இல்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலக்க போவது ஜூனியர் தேர்வு நடந்த போது சீனியர்கும் சேர்த்தே ஆள் எடுத்தார் Directot தாம்சன்..சீனியர்ஐயும்,ஜூனியர்ஐயும் மோத விடுவதாக பிளான்..ஆனால் ஏனோ திட்டம் ரத்தானது.என்னையும் அழைக்கவில்லை)

சரி பட்டிமன்றத்திற்கு வருவோம்..ராசிபுரம் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பட்டிமன்றம்.பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட எல்லோருமே mphil படித்தவர்கள்.அதனால் பத்திரிகையில் என் பெயருக்கு அருகிலும் mphil சேர்த்திருந்தார்கள்."எதுக்கு சார் இப்படி" என்று கேட்டதற்கு.."என்சாய்" என்றார்.நான் இன்று வரை bca வை வைத்தே காலம் தள்ளி வருகிறேன் என்பது வேறுவிசயம்.ஆனால் வெளியில் யாராவது கேட்டால் "இன்ஜினியரிங் என கூறி கொள்ள தவறுவது இல்லை"..

திருமணத்திர்க்கு பிந்தைய வாழ்கையே மகிழ்ச்சிகரமானது என்ற தலைப்பில் நான் பேசியதாவது.."பாருங்க... எல்லாம் கல்யாணம் பண்ணி ஒரே குஜாலா இருக்காங்க.ஆனா கேவலம்.. எங்களால லவ்கூட நிம்மதியா முடியல.மனச திறந்து பேச ஒரு பொண்ணு நம்ம கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
திருமணத்திற்கு முன்பு உங்களுக்கு அப்பா..ஆனா திருமணத்திற்கு பின்பு நீங்களே அப்பா.திருமணத்திற்கு முன்பு வயிறு நிறைய நீங்கள் சாப்பிட்டாலும் கிடைக்காத சந்தோசம், திருமணத்திற்கு பின்பு, நீங்கள் பசியோடு தூங்கி "ஹப்பாடா நம்ம பையன் வயிறு நிறைய சாப்பிட்டு தூங்குகிறான்" என்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான்.திருமணத்திற்கு பின்பு தான் நீங்கள் புத்தர், திருமணத்திற்கு பின்பு தான் நீங்கள் ஸ்ரீராமர்..என்று கூறி எங்கள் அணிக்கு வலு சேர்த்தேன்"நாங்களே வென்றோம்.

இந்தபட்டிமன்றம் தான் என்னுடைய முதல் பட்டிமன்றம்.அதற்கு முன்பு பள்ளி  கல்லூரிகளில்  பல பட்டிமன்றங்களில்பங்கு பெற்றிருந்தாலும், பொது வெளியில் மக்கள் மத்தியில் இது தான்முதல் முறை.அவர்கள் எனக்கு சால்வைஅணிவித்து நினைவு பரிசு வழங்கி  கவுரவித்தது என் வாழ்நாளின் மிகப்பெரிய அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.இருபது வயதில் இவ்வளவு பெரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்ததை என்னால் எழுபது வயதிலும் மறக்க முடியாது.
கடைசியில் அவங்கள் கொடுத்த ஐநூறு ரூபாய் தான் நான் கலை உலகில் கால்பதித்து பெற்ற முதல் பரிசு.எத்தனையோ கல்லூரிகளில் பேச்சுபோட்டியில் மூன்றாவது பரிசு கூட வாங்க முடியவில்லையே என ஏங்கி தவித்த காலங்களை எல்லாம் அந்த ஒரே ஒரு நொடி காலி செய்து விட்டது எனலாம்.


 எப்பொழுதுமே தீபாவளியில் நான் ஊரில் இருப்பேன் என் கையில் காசு இருக்காது,கொண்டாட முடியாது.ஆனால் இப்பொழுது காசு இருக்கிறது.நான் ஊருக்கு செல்ல முடியாது.கொண்டாட முடியாது.."என்ன வாழ்க்கடா"