Thursday, November 20, 2014

நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன்! யாராவது தீடீரென friend ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்! நாம தான் அப்பாவி ஆச்சே.. உடனே அக்சப்ட் பண்ணுவேன்.. அந்த ஆசாமியும் சும்மா இல்லாம "ப்ரோ நீங்க செம்மையா எழுதறீங்க.. உங்க பதிவு எல்லாம் சூப்பர்"ன்னு சொல்லுவாரு!

அவ்வளவு சிறப்பாவா எழுதறோம்.. இத்தன லைக் விழுதுன்னா எதுவும் இல்லாமையா! என என்னை நானே ரெண்டு ஸ்டெப் உயர்த்திக்கொள்ளுவேன்! பெரிய எழுத்தாளர் யாரையாவது பார்த்தால் "ஆமா இந்தாளு எழுதறதுக்கு பேர்லாம் இலக்கியம்னா அப்பறம் நான் எழுதறதுக்கு பேர் என்னவாம்? போய்யா சூப்பு" என்று நினைத்துக்கொள்ளுவேன்! 

நேற்று ஒருத்தன் என்னுடைய fake idயின் இன்பாக்ஸுக்கு வந்து "நீங்க செம்மையா எழுதறீங்க..வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு போயிருக்கான்" நான் அந்த ஐடில வெறும் குட்மார்னிங் ஸ்டேட்டஸ் மட்டும் தான் போட்ருக்கேன்! உண்மை என்னன்னா இவய்ங்க எல்லாருக்கும் ஒரே டெம்ப்ளேட் வச்சிருக்காய்ங்க.. "நட்பில் இணைந்தமைக்கு நன்றி,," "வருக தோழமை.. அன்பை பறிமாறுக"ன்னு.. அதுல ஒண்ணு தான் "உங்க பதிவெல்லாம் சூப்பர்"னு சொல்றது!
இது தெரியாம இலக்கியவாதியயெல்லாம் பகைச்சிகிட்டனேடா!

No comments: