Friday, November 28, 2014

அசோகர் ஏன் மரம் நட்டார்!

அசோகர் மரம் நட்டார்னு சமூக அறிவியல் பாடத்துல ஒரு வரி வரும்.. நமக்கு அசோகர் பத்தி தெரிஞ்ச அதிகபட்ச வரலாறே அது தான். ஏன் மரம் நட்டாருன்னு நாமளும் கேட்ருக்க மாட்டோம்.. கேட்டாலும் வாத்தியார்களுக்கு பதில் தெரியாது!

இல்ல குத்து மதிப்பா.. அப்போ எல்லாரும் நடை பயணமா தான் போவாங்க அவங்க இளைப்பாறன்னு தான் பொதுவா பதில் சொல்லுவாங்க.. ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல.
அசோகர் தன் கடைசிகாலத்தில் புத்த மதத்தை தழுவினார். புத்தர் மரத்தடியில் தான் பிறந்தார். மரத்தடியில் தான் ஞானம் பெற்றார். மரத்தின் கீழ் தான் உயிர்விட்டார். புத்த மதத்தை பரப்பும் நோக்கில் தான் அசோகர் மரம் நடச்சொன்னார்! இல்லன்னா வேலை மெனக்கெட்டு ஏன் அப்டி சொல்லப்போறாரு?

அப்போ எல்லாரும் என்ன இன்னைக்கி மாதிரி மரம் வெட்டிகிட்டு இருந்தாங்களா? இல்ல இன்னைக்கி மாதிரி மரம் நடுவிழான்னு நடத்திகிட்டு இருந்தாங்களா? கங்கை சமவெளியில் அதற்கான அவசியமே இல்லை.

அதே போல அசோகரின் அரசு வெறும் மரம் நடுவதற்கான உதவி மட்டும் தான் செய்யும்.. மக்கள் தான் மரம் நட்டு பராமரிக்க வேண்டும். அது தான் அசோகரின் உத்தரவு. என்னவோ அசோகரே தெருத்தெருவா மரம் நட்ட மாதிரி தான் பேச வேண்டியது! இதையெல்லாம் பாடபுத்தகத்துல வெச்சா வாய்க்கா தகராறு ஆயிரும்.
நாம குத்து மதிப்பா தெரிஞ்சி வச்சிருக்கறதுக்கு பின்னாடி நிறைய அரசியல் இருக்குன்னு ரொம்ப நாள் கழிச்சி தான் தெரியவருது!

Tuesday, November 25, 2014

தற்கொலை தேவி - 3

அந்த எண்ணுக்கு கால் செய்தேன்.. பிஸி என்று வந்தது. யாரோடோ பேசிக்கொண்டிருப்பாள் போல. திரும்பவும் பத்து நிமிசம் கழிச்சி பேசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. எப்படி மறந்தேன் என்றே நினைவில்லை.

போன் எடுத்து கால் செய்யலாமென்று பார்த்த போது ஒரு மிஸ்டு கால், அவள். ஒரு நிமிடம் பதட்டம். மேல் மூச்சு கீழ் மூச்செல்லாம் லேசாக வாங்கியது. என்ன பேசலாம்? ஒரு நொடி தயார் செய்துகொண்டேன்.

ரிங் போகிறது. நீஈஈஈஈஈஈண்ட ரிங்க்............................

எதிர்முனையில் ஒரு ஆண்குரல்.. சுமார் 40 வயது இருக்கும் என யூகிக்க முடிந்தது.. என் குரல் கேட்டதுமே "யாருங்க நீங்க." என்று அதட்டியது.

"நான் ப்ரியாவோட ப்ரண்டு"

"எத்தன பேர்டா இப்டி களம்பிருக்கீங்க?"

"சார் அட்சுவலி ஐ டோன்னோ. வாட் ஹாப்.. பட் த திங் இஸ்" (எதாவது பிரச்சினை என்றால் இப்படி தான் இங்கிலிஷில் பேச வேண்டும்)

"ஏன் சாருக்கு தமிழ் தெரியாதா?"

"நோ சார்.. அதாவது.. தட் ஐ டோன்ட் எக்ஸ்பெக்ட் திஸ்.. லைக் யூ நோ.. யூ நோ வாட்.. சாரி சார் ஐ திங்க் திஸ் இஸ் ராங்க் நம்பர் யூ நோ"

"மூடிட்டு போன வைடா" என்ற எதிர்முனை காலை கட் செய்துவிட்டது.

அவள் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

Monday, November 24, 2014

தினத்தந்தி செய்தி!

காலையில் தினத்தந்தி பார்த்துக்கொண்டிருந்தேன்.. ஒரு செய்தி பார்த்து அதிர்ச்சியானேன்.. தாம்பரம் அருகே இரண்டு அக்காக்கள் சேர்ந்து தம்பியை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.. அதற்கு காரணம் தம்பிக்கு கல்யாண ஆசை வந்து மணமகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அது அந்த சகோதரிகளுக்கு பிடிக்கவில்லை.

"நீ கல்யாணம் பண்ணிகிட்டா நாளை வர்ற பொண்ணு உன்னையும் எங்களையும் பிரிச்சிடுவா" என்பதாக சண்டை போட்டிருக்கிறார்கள்! இந்த அக்காக்களுக்கு திருமண வயது கடந்து விட்டது. இருவருக்கும் திருமணம் செய்யவே விருப்பம் இல்லையாம்.

பொறுத்து பொறுத்து பார்த்த தம்பி நாமளாவது கல்யாணம் பண்ணிக்குவோம் என தனக்கு வரன் தேடத்துவங்கி இருக்கிறார். அதுவும் இந்த அக்காக்களுக்கு தெரியாமல். அட்சுவலி இந்த பையனுக்கு 7 வயது இருக்கும்போதே அம்மா அப்பா இறந்திருக்கிறார்கள். அக்காக்கள் தான் இவனை வளர்த்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த பையனுக்கு சைதாபேட்டை அருகே ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இவன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துவிடக்கூடாது.. பாஸ்போர்ட் கிடைக்க கூடாது என்பதற்காக அக்காக்கள் இவன் மீது போலீஸில் கம்ப்ளெயிண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். வக்கீலிடம் இது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள்.

"என்னமா இப்டி பண்றீங்க" என அவர் அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டாராம். இனி நம்மால் எதுவுமே செய்ய முடியாது என தெரிந்தபின் தம்பியை கொன்றுவிட்டு இவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்! ராத்திரி வேலைக்கு போய்விட்டு தம்பி கதவை தட்டியிருக்கிறார்.
கதவை திறந்த அக்காக்களில் ஒருவர் இரும்பு அயர்ன் பாக்ஸால் தம்பியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். பின் கத்தியால் தம்பியை குத்தியிருக்கிறார்.

தம்பி தப்பித்து ஓடி வெளியே வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். விபரமறிந்த போலீஸ் பேட்ரோல் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியே லைட் அடித்து பார்த்த போது (இருட்டாக இருந்ததால்) உள்ளே ஒரு பெண்மணி ரத்தம் பீறிட படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த அக்காக்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பு : சமீபகாலங்களில் சினிமாவுக்கே செல்வதில்லை. 5 ரூபாய் செலவு செய்து தினத்தந்தி படித்துவிடுகிறேன். படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது!

தற்கொலைச்செல்வி - 2

அவளின் எண் எனக்கு whatsupல் ரிசீவ் ஆகி இருந்தது.. நான் எதோ சும்மா வெளாட்டுக்கு கேட்டேன்.. அதுக்குன்னு உண்மையாவே நம்பர் அனுப்புவாய்ங்களா? அவ்ளோ நல்ல ஆளோடையா பழகிருக்கோம். தெரிஞ்சிருந்தா கூச்சப்படாம முன்னாடியே கேட்டு வாங்கி சாப்டிருக்கலாம்.
ஆனா என்ன பேசுவது? எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. இன்னும் பயிற்சி வேண்டுமோ?

கால் செய்தேன்.. எதிர்முனை பெண்குரல் எதோ யோசனையோடு எடுத்து "ஹலோ" என்றது..

"நீங்க இன்னும் சாகலியா?"

"ஹலோ யார் நீங்க?"

"நானா.. உங்க நண்பியோட நண்பி... ச்சீ.. சாரி நண்பியோட நண்பன்"

"சரி எதுக்கு கால் பண்ணீங்க?"

"வேற எதுக்கு.. ஒரு பெண்ணோட உயிர காப்பாத்த.. நீங்க கடந்த 48 மணி நேரத்துல மட்டும் 4 தடவை தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணதா சமீபத்திய சர்வே சொல்லுது"

"கலாய்ச்சது போதும்.. மேட்டருக்கு வாங்க"

"மேட்டரா?" ?(ச்சே.. எவ்ளோ நல்லவனா இருக்காய்ங்க.. என்னுடைய லேட்பிக்கப் தனத்தை நினைத்து வியந்துகொண்டேன்)

"மேட்டர்லாம் தப்புங்க.."

"ஹலோ ஒரு பொண்ணுகிட்ட எப்டி பேசறதுன்னு தெரியாது"

"அது தெரிஞ்சா நான் ஏங்க உங்க கிட்டல்லாம் பேசப்போறேன். எனக்குன்னு ஒரு அழகான ஆள் செட் பண்ணி.. அது கூட பேசின்னு இருப்பேன். என் நம்பர் எப்பவும் பிசியாவே இருந்துட்டு இருக்கும். எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்.. ஆனா நீங்க தற்கொலை பண்ணிக்க போய்.. உங்க வீட்ல எல்லாம் feel ஆகி.. உங்க பழைய காதலன் மனசு மாறி பிறகு feel ஆகி.. அல்லது உங்க வருங்கால காதலன் உங்களுக்காக feel ஆகி"

"ஹலோ.. நீங்க என்ன பேசறீங்கண்ணே புரியல.. நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்.. அட்சுவலி எனக்கு ஆளே கிடையாது..(இதை சொன்னபோது என் முகம் பிரகாசமானது ) உங்களுக்கு யார் என் நம்பர் குடுத்தாங்க.. நீங்க ஏன் இப்டிலாம் பேசறீங்க?"

எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது.. ஒரு முறை புரியாதவாறு மொபைலை பார்த்தேன்.. "சாரி தப்பான நம்பருக்கு பேசிட்டேன்னு நினைக்கறேன்.. பட் உங்க வாய்ஸ் க்யூட்டா இருக்கு.. நீங்க ஏன் RJவா ட்ரை பண்ண கூடாது"

"அப்டியா தேங்கஸ்.. நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன்.. உங்ககிட்ட அப்றமா பேசறேன்..bye"

எனக்கு வாட்ஸ்ப்பில் வந்திருந்த மெசேஜை பார்த்தேன்.. தோழி நம்பர் மாற்றி அனுப்பிவிட்டாராம்! தட் சண்டேன்னா ரெண்டு மொமண்ட்!

தற்கொலைச்செல்வி!

தோழி ஒருவர் நான்கைந்து முறை கால் செய்திருந்தார்.. என்னவென விசாரித்தேன்! "friend.. லவ் மேட்டர். ரொம்ப depressed ஸ்டேட்ல இருக்காப்டி.. தற்கொலை பண்ணிக்குவாங்களோன்னு பயம்மா இருக்கு"

"பயப்படாத அப்டிலாம் எதுவும் நடக்காது"

"இல்ல ஒருவேள எதாவது பண்ணிகிட்டா"

"சாவட்டும்.. 110 கோடில ஒண்ணு குறைஞ்சா ஒண்ணும் கெட்டு போயிறாது"

"இல்லடா அவங்க அம்மா அப்பாவ பத்தி நினைச்சா தான் பயம்மா இருக்கு"

"இது மாதிரி தறுதலைய பெத்தா அப்டி தான்.. என்னைய கேட்டா ஒரு மாசம் முன்னாடி தற்கொல பண்ணிருக்கலாம்.. அம்மா ஜெயிலுக்கு போன சோகம் தாங்காம தற்கொல பண்ணிகிட்டான்னு சொல்லி 3 லட்ச ரூவா குடுத்துருப்பாய்ங்க"

"டேய் வெளாடாதடா.. எதாவது பண்ணு.. நான் வேண்ணா நம்பர் தர்றேன்.. நீ அவகிட்ட பேசி கவுன்சிலிங்க் பண்றியா?"

"யூ மீன் அவள்???"

"ஆமாடா..ஏன்?"

"பொண்ணா?"

"ஆமா?"

"பெண்கள் சாகக்கூடாது! நம்பர் குடு நான் பாத்துக்கறேன்" # ஓவர் ஓவர்!

Sunday, November 23, 2014

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரி சைக்கிள் பயணம்!

அனைவருக்கும் சமமான கல்வி வழங்கக்கோரிய போராட்டமும் பரப்புரையும் இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒரு பயணமாக நடத்துகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடக்கும் இந்த போராட்டம் நவம்பர் 3 ஆம் தேதி போபாலில் நிறைவடைகிறது. போபால் விஷவாயுக்கசிவு நடந்து இந்த டிசம்பரோடு 30 வருடம் ஆகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி போபால் மக்களோடு அவர்களின் நினைவுகூடலில் கலந்துகொள்கிறோம்.
சைக்கிள் பயணம் குறித்த திட்டமிடல்
 கல்வியில் தனியார் மயம் மக்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை சந்தித்து போபால் செல்வதற்கு முன் அவர்களுடன் ஒரு நாள் உரையாட திட்டமிட்டிருந்தோம்.

அந்த ஒரு நாளாக நேற்று அமைந்தது. காலை 7 மணிக்கு இளந்தமிழகம் அமைப்பை சேர்ந்த தோழர் நாசர் வாழ்த்தி பேசிய பின் சைக்கிள் பயணம் துவங்கியது.சுமார் 18 பேர் கொண்ட குழுவாக கிளம்பி தாம்பரம் ரயில்வே மைதானத்திற்கு சென்றோம். ஞாயிற்றுகிழமை என்பதால் நிறைய பேர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களிடம் நோட்டீஸ் விநியோகித்தோம்.
சைக்கிள் பயணம் துவங்கிகுறது
சைக்கிள் பயணத்தை ஒட்டி

அங்கே கிறிஸ்துராஜா நடுநிலைப்பள்ளி இருக்கிறது. அது தான் தாம்பரத்தின் முதல் பள்ளிக்கூடம். இங்கே படித்த பலரும் இன்று மிக முக்கியமான பதவியில் இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ரயில்வே நிர்வாகம் இந்த பள்ளியை இடிக்க திட்டமிட்டிருக்கிறது. தண்டவாளம் போடப்போகிறார்களாம். மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பின் அது அப்போதைக்கு கைவிடப்பட்டிருக்கிறது. அப்போது போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் இப்போது அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். (அவர் வெள்ளை சட்டை போட்டிருந்தார். சட்டை பேக்கட்டினுள் வைக்கப்பட்டிருந்த அட்டையில் அம்மா படம் பொறிக்கப்பட்டிருந்தது வெளியில் தெரிந்தது) அவர் எங்கள் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். 


தாம்பரம் ரயில்வே மைதானத்தில்
கிறிஸ்துராஜா பள்ளி
பிறகு பூண்டிபஜார் டீக்கடையில் அங்கிருந்தவர்களிடம் பேசினோம், முழக்கமிட்டோம், டீ, வடை சாப்பிட்டோம். பிறகு ஏரிக்கரை தெரு டீக்கடையில் பேசினோம். அதன்பின் வழக்கறிஞர் இந்திராவின் வீடு வழியே சென்றபோது அவர் எங்களுக்கு வாழ்த்து வழங்கி பேசினார். அரண் அமைப்பில் இருக்கும் தோழர் மதுவின் வீடு வழியே சென்ற போது, வலுக்கட்டாயமாக உட்காரவைத்து நெல்லிக்கனி சாறு கொடுத்தார். அந்த பாணம் வாய்க்குள் சென்ற போது உடம்பெல்லாம் சிலுப்பிக்கொண்டு புதிய உற்சாகம் கிளம்பியது.
தோழர் வெஸ்ட்லிக்கு நினைவுப்பரிசு வழங்கியபோது

வழியில் தோழர் வெஸ்ட்லி எங்களை வாழ்த்தினார்.அவருக்கு நினைவுபரிசு வழங்கினோம்.நினைவுப்பரிசை வழங்கியவர் பள்ளி முழுவதும் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபகாலமாக தமிழ்வழியில் படித்ததாலேயே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பாரதி சொன்னார். எங்கள் கூட்டத்திலேயே நானும் அந்த பையனும் மட்டும் தான் தமிழ்வழியில் படித்தவர்கள். எனக்கு அவர் போல் எந்த வித மன உளைச்சலும் இல்லை. நான் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். காரணம் நான் படித்து முடித்த உடனேயே வேலைக்கு சென்றுவிட்டதாக இருக்கலாம். தமிழ்வழிக்கல்வியில் படித்த ஒருவருக்கு தன்னம்பிக்கை வரவேண்டுமென்றால் அவருக்கு வேலை கிடைக்க வேண்டி இருக்கிறது
தோழர் பிரேமா வாழ்த்திய பின்

அடுத்து தோழர் பிரேமா  வீடு வழியே சென்ற போது அவர் எலுமிச்சை சாறு கொடுத்து உபசரித்தார். வழியெல்லாம் சந்திக்கும் எல்லோரும் எதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பின்னர் தோழர் பிரேமாவோடு கண்ணகி தெரு குடிசை மாற்றுவாரியத்திற்கு சென்றோம். அங்கிருந்தவர்களிடம் பேசினோம். 

"நீங்க தமிழ்வழிக்கல்வியில் படிக்க சொல்றீங்க.. ஆனா எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இங்கிலிஷ் மீடியத்துல படிக்கறாங்க.. நாங்க எங்க பசங்கள தமிழ்மீடியத்துல படிக்க வெச்சா அவங்க மதிக்க மாட்றாங்க.. இதுக்காகவே கடன உடன வாங்கியாவது அவங்கள இங்கிலிஷ்ல படிக்க வைக்க வேண்டி இருக்கு.. என்னப்பா பண்றது" என்று ஒரு குடும்பத்தலைவி தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார். 

இன்று இஸ்ரோவில் மங்கள்யான் அனுப்பிய விஞ்ஞானிகள் எல்லோரும் தாய்வழிக்கல்வியில் படித்தவர்கள். இதையெல்லாம் சொன்னால் "என்னப்பா பண்றது. எங்க பசங்க முன்னேறனும்ல.. தமிழ்ல படிச்சா முன்னேறாது" என்று சொன்னார்கள். சொல்லப்போனால் பிரிட்டிஷ்காரன் இருந்தபோதுகூட நாம் தாய்வழிக்கல்வியில் தான் படித்தோம். இப்போது தான் இவ்வளவு கொடுமையாகி இருக்கிறது.

நம்மிடம் அவர்கள் ஏன் தாய்வழிக்கல்வியில் படிக்க வேண்டும் என்பதற்கான போதுமான தரவுகள் இல்லை. இன்னும் இதில் உழைக்க வேண்டி இருக்கிறது. இன்னொன்று அவர்கள் பார்த்த அரசுப்பள்ளிக்கூடங்களின் தரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வழக்கறிஞர் சங்கர் வாழ்த்தியபோது

பிறகு தாம்பரம் சேனட்டோரியம் ஆட்டோஸ்டாண்ட் பகுதிக்கு சென்றோம். அதன்பிறகு வழக்கறிஞர் சங்கர் எங்களை வாழ்த்தி பேசினார். "இன்னைக்கி ரெண்டு கிலோ மீட்டர் பைக்ல போறதுக்கே ஒரு மாதிரி இருக்கு, நீங்கள்லாம் போபால் வரைக்கும் சைக்கிள்ல போகப்போறீங்க என்பதை நினைக்கும் போது பெருமையா இருக்கு" என்றபோது நாங்கள் திருதிருவென விழித்தோம். அவர் தவறாக புரிந்துகொண்டுவிட்டார் போல. 

பிறகு மேற்கு தாம்பரத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேசினோம். எங்கள் போராட்டங்களில் பங்கெடுக்கும் ஆல்வின் என்பவரின் வீடு அந்த பகுதிக்கு பக்கத்தில் தான் இருந்தது. அவர் தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அவரின் அம்மா எங்களை பார்த்து மிகுந்த உற்சாகம் அடைந்தார். "நல்ல வேள நம்ம பையன் நல்ல குரூப்ல தான் சேர்ந்திருக்கான்" என்பது போன்ற பெருமிதம் அவரின் முகத்தில் காணப்பட்டது.

தோழர் ஜீவா மணிக்குமாருக்கு நினைவுப்பரிசு வழங்கல்
மதிய உணவை தோழர் தயாளன் கவனித்துக்கொண்டார். பின் மேற்கு தாம்பரத்தில் இருக்கும் தோழர் ஜீவாவின் வீட்டிற்கு சென்றோம். ஜீவா துவங்கி வைத்த அவ்வை பள்ளிக்கூடத்தை இப்போது அவரின் மகன் மணிக்குமார் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினோம். அவர் தன் அப்பாவுக்கும் இப்போது இருப்பர்வர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பொருத்திபார்த்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தோழர் காளீஸ்வரனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்

பின் மாற்று ஊடகத்தை சேர்ந்த தோழர் காளீஸ்வரன் எங்களை வாழ்த்தி பேசினார். பின் காந்தி நகர் சென்றோம். அங்கிருந்த ஆப்ரஹாம் தோழர் எங்களை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த பகுதி மக்களோடு சுமார் ஒன்றரை மணி நேரம் செலவிட்டோம். பின் தாம்பரம் கடைவீதிக்கு சென்றோம். அங்கே மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த சலீம் தோழர் எங்களை வாழ்த்தி பேசினார். அங்கிருந்த நூலகம், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகித்தோம். பின் தி.க தோழர்கள் எங்களை வாழ்த்தினர். 

இறுதியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சானட்டோரியம் பகுதி ரயில்வே நிலையத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த தாத்தா ஒருவர் எங்கள் நோட்டீஸை பார்த்துவிட்டு ஆர்வமாகி எங்களுக்கு டாட்டா குளுக்கோஸ் நீர் வாங்கித்தந்தார். (நாங்கள் அந்த டாடா நீருக்கு எதிரானவர்கள் என்ற போதும் அவரின் அன்பால் ஏற்றுக்கொண்டோம்). அவர் இது போன்ற போராட்டங்களின் தேவை குறித்து பேசினார்.


வீடு வரும் போது மணி மாலை 7.20 ஆகியிருந்தது. அரங்கக்கூட்டத்திற்கும் மக்கள் சந்திப்பிற்கும் உண்டான வித்தியாசத்தையும் இதன் மூலம் புரிந்துகொண்டோம். அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதித்து கலைந்தோம்.

மதிய உணவு இடைவெளியின் போது ஆடு ஒன்றிடம் போராட்டம் பற்றி விவாதித்துகொண்டிருந்தேன்.. அந்த ஒளிப்பதிவு



Thursday, November 20, 2014

நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன்! யாராவது தீடீரென friend ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்! நாம தான் அப்பாவி ஆச்சே.. உடனே அக்சப்ட் பண்ணுவேன்.. அந்த ஆசாமியும் சும்மா இல்லாம "ப்ரோ நீங்க செம்மையா எழுதறீங்க.. உங்க பதிவு எல்லாம் சூப்பர்"ன்னு சொல்லுவாரு!

அவ்வளவு சிறப்பாவா எழுதறோம்.. இத்தன லைக் விழுதுன்னா எதுவும் இல்லாமையா! என என்னை நானே ரெண்டு ஸ்டெப் உயர்த்திக்கொள்ளுவேன்! பெரிய எழுத்தாளர் யாரையாவது பார்த்தால் "ஆமா இந்தாளு எழுதறதுக்கு பேர்லாம் இலக்கியம்னா அப்பறம் நான் எழுதறதுக்கு பேர் என்னவாம்? போய்யா சூப்பு" என்று நினைத்துக்கொள்ளுவேன்! 

நேற்று ஒருத்தன் என்னுடைய fake idயின் இன்பாக்ஸுக்கு வந்து "நீங்க செம்மையா எழுதறீங்க..வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு போயிருக்கான்" நான் அந்த ஐடில வெறும் குட்மார்னிங் ஸ்டேட்டஸ் மட்டும் தான் போட்ருக்கேன்! உண்மை என்னன்னா இவய்ங்க எல்லாருக்கும் ஒரே டெம்ப்ளேட் வச்சிருக்காய்ங்க.. "நட்பில் இணைந்தமைக்கு நன்றி,," "வருக தோழமை.. அன்பை பறிமாறுக"ன்னு.. அதுல ஒண்ணு தான் "உங்க பதிவெல்லாம் சூப்பர்"னு சொல்றது!
இது தெரியாம இலக்கியவாதியயெல்லாம் பகைச்சிகிட்டனேடா!

மாதவிடாய்

ஒரு முறை facebookல் stayfree பக்கத்திற்கு லைக் போட்டிருந்தேன்! சாட் பாக்ஸூக்கு வந்த தோழி ஒருவர் அதை காப்பி பேஸ்ட் செய்து "what's this" என்றார்! "this is also one format of feminism" என்றேன்!

உனக்கு எல்லாமே வெளாட்டா போச்சு.. நாங்க எவ்ளோ கஷ்டபட்றோம்னு உனக்கு தெரியுமா? என்றெல்லாம் பொங்கினார்! நான் லைக் போட்டதால் அவருக்கு என்ன பிரச்சினை? அது அவரை ஏன் அவ்வளவு காயப்படுத்தியது என்பதையெல்லாம் என்னால் விளங்கிகொள்ளவே முடியவில்லை!

ஒரு முறை மெடிக்கல் ஷாப்பில் stayfreeயை தனியே ஒரு பேப்பருக்குள் மடித்து கடைக்காரர் கொடுத்த போது, இதுக்கு தான் ஏற்கனவே இவ்ளோ பெரிய கவர் போட்டு குடுத்துருக்கானே.. இவன் எதுக்கு தனியா பேப்பர்ல மடிச்சி குடுக்கறான் என யோசித்துக்கொள்வேன்!

பாய்ஸ் ஹாஸ்டலிலேயே படித்துவிட்டு, பசங்களோடு மட்டுமே பழகும் சந்தர்ப்பம் வாய்த்த எனக்கு மனநல மருத்துவர் ஷாலினி எழுதிய "பெண்ணின் மறுபக்கம் புத்தகம்" பெண்களை பற்றியும் அவர்களின் உலகம் பற்றியும் ஒருவிதமான நல்ல புரிதலை ஏற்படுத்தியது!

அதே காலக்கட்டத்தில் தான் கீதா இளங்கோவன் எடுத்த "மாதவிடாய்" ஆவணப்படம் பார்த்தேன்! ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது! ஒரு பக்கம் நாம் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை பற்றி விவாதிக்கிறோம்.. அவர்களும் ஜீன்ஸ் போட்டுக்கொள்வது தான் பெண் சுதந்திரம் என்பதாக புரிந்துகொள்கிறார்கள்!

ஆனால் அவர்களுக்கென முறையான கழிப்பறை வசதி இல்லை. சானிடரி நாப்கின்களை பாதுகாப்பாக அகற்றும் எந்த முறையும் நம்மிடம் இல்லை.. இன்னமும் சானிடரி நாப்கின்கள் சென்று சேராத எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன! இதற்கெல்லாம் என்ன செய்யப்போகிறோம்.. இது பற்றி எந்த பெரிய விவாதமும் நடந்தாக தெரியவில்லை!

மாதவிடாய் என்பது ஒரு சாதாரண நிகழ்வு, அதற்கு எதற்கு வயசுக்கு வந்த டே கொண்டாடுகிறார்கள்? அதற்கு போஸ்டர், கட்டவுட், பாலாபிஷேகம் செய்யாத குறை தான்! என்னோடு கல்லூரியில் படித்த தோழிகளோ, வேலை பார்த்தவர்களோ எப்போதாவது விடுப்பு எடுத்தால் "என்ன ஆளையே காணோம்" என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்பார்கள்!

"உடம்புக்கு என்ன?" என மடக்கிபிடித்து விசாரித்தால் "வயித்துவலி" என்பார்கள்! உனக்கு மட்டும் அடிக்கடி வயித்துவலி வருது என காமெடியாக கடந்து சென்ற எவ்வளவோ தருணங்கள் இருக்கின்றன.. உண்மையில் அது மாதவிடாய் நாள் என்பதை புரிந்துகொண்ட நாள் அதிர்ச்சியானது! இவர்கள் ஏன் இதை மறைக்க வேண்டும்! மறைக்கிற அளவுக்கு இது என்ன கொலைகுத்தமா?
உடை அடிப்படையில் எவ்வளவோ fashion ஆகிவிட்ட பலரும் கூட "வயித்துவலி" குரூப்புகளாகவே இருப்பது தான் கொடுமை! உண்மையில் இவர்கள் எதை மார்டனாக நம்புகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது!

கீதா இளங்கோவன் இயக்கியுள்ள நம்பிக்கை மனுஷிகள் என்ற ஆவணப்படத்தை நாளை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கீதா அக்காவும் Ilangovan Balakrishnan அண்ணனும் வெளியிட இருக்கிறார்கள்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
(நான் இப்போது அந்த ஆவணப்படத்தை தான் youtubeல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. நாளை இது பற்றி எழுதுவேன்!)

Tuesday, November 18, 2014

முல்லா கதை!

முல்லா கதைகளில் எனக்கு பிடித்த ஒரு கதை இருக்கிறது! ஒரு முறை முல்லாவுக்கு ஆணி அடிப்பதற்காக சுத்தியல் தேவைப்பட்டது! வீடு முழுக்க தேடினார். கிடைக்கவே இல்லை! சரி பக்கத்து வீட்ல போய் கேப்போம்னு, பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டப்போனார்!

திடீரென எதோ ஒரு உள்ளுணர்வு தடுத்தது! "காலங்காத்தாலயே சுத்தியல் கேக்க வந்துட்டான் பாரு"ன்னு அவன் நினைச்சிட்டா?" நாம அப்றமா வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்!

மத்யானம் போய் கதவை தட்ட சென்றார் "இப்டி மட்ட மத்தியானமா வந்து சுத்தியல் கேப்பாங்க" அப்டினு நினைச்சிகிட்டா?

ராத்திரி போய் கதவை தட்ட சென்றார் "பொண்டாட்டியோட நிம்மதியா தூங்கிட்டு இருக்கும்போது தான் வந்து உயிர வாங்குவாய்ங்க"ன்னு நினைச்சிகிட்டா?

இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றது! ஒரு நாள் எதோ ஒரு வேகத்தில் பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டி விட்டார்..அவன் கதவைத்திறந்ததுமே "யோவ் போய்யா மயிறு.. யார்க்கு வேணும் உன் சுத்தி.. உலகத்துல எங்கயுமே கிடைக்காத பிரசித்தி பெற்ற சுத்தின்னு நினைப்பு.. உன்னவிட சிறப்பான ஒரு சுத்தி வாங்கி உன் மூஞ்சில கரிய பூசறேன்யா" என்று சென்றுவிட்டார்!

தற்கொலைக் கடிதம்!

பதட்டப்படாதீர்கள்! நான் எடுக்கும் முடிவுக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்! நான் இதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தேன்.. இப்போது தான் அது நடந்திருக்கிறது! பத்து தூக்க மாத்திரைகள் கைவசம் இருக்கின்றன!

நான் ஒரு கோழை.. எனக்கு கத்தி எடுத்து கழுத்தறுத்துக்கொள்வதென்றால் பயம். தூக்கில் தொங்கி, கழுத்தெழும்பு உடைந்து கண் பிதுங்கி கோரமாக சாக துணிச்சல் இல்லை. இப்போது தூங்கிக்கொண்டே சாகும் ஒரு வலியற்ற சாவு கிடைத்திருக்கிறது!
என் சாவுக்கு யாரும் காரணமில்லை.. போலீஸ் வந்து கேட்டால் தற்கொலை என்றே சொல்லுங்கள்! என் அம்மா அப்பாவை நினைத்து தான் பயமாக இருக்கிறது! அவள் யாரையாவது திருமணம் செய்து தொலையட்டும்! எங்கிருந்தாலும் வாழ்க! 

* * *

* * *

* * *

சுரேஷ் இப்படி எழுதி facebookல் போட்டு பதினைந்து நொடிகளில் இரண்டு லைக் விழுந்திருந்தது! ஒரு ஆசாமி "நச் பதிவு தோழி" என்று கமெண்டியிருந்தார்!

பிரபல பதிவர்

பிரபல பதிவர்கள் மேல நம்மாட்களுக்கு ஆரம்பத்திலிருந்தே செம்ம காண்டு இருக்கு! இவய்ங்க என்ன நம்ம ஸ்டேட்டஸூக்கு லைக் போட மாட்றாய்ங்க? மனசுல பெரிய இவன்னு நெனப்பு.. நான் போட்றேன்லடா மயிறு. நீ மட்டும் என்னடா பெரிய புடுங்கியா.. என்றெல்லாம் பச்சையாக எழுதி ஸ்டேட்டஸ் போடாவிட்டாலும் கொஞ்சம் மானே தேனே பொன்மானேவெல்லாம் சேர்த்து நடுவில் "பிரபல" என்ற வார்த்தையை மட்டும் தேத்தி ஒப்பேத்திக்கொள்கிறார்கள்!

உதாரணத்திற்கு பிரபல பதிவர் ஒருவரை எடுத்துக்கொள்வோம்! அவருக்கு 5000 நண்பர்கள் இருக்கிறார்கள்! ஒரு ப்ரொபைலை அவர் போய் பார்த்து அவர்களின் ஸ்டேட்டஸை தேடிக்கண்டுபிடித்து அதில் காலை வணக்கம் தவிர்த்து எதோ ஒரு உருப்படியான பதிவுக்கு லைக் போட குறைந்தபட்சம் ஒரு நிமிடம் ஆகும்! 

அப்படி கணக்கிட்டு பார்த்தால் 5000 நண்பர்களின் அக்கவுண்டையும் ஒரு எட்டு எட்டி பார்க்க 5000 நிமிடம் ஆகும்! ஒரு மணி நேரத்திற்கு 60 நிமிடம்! மொத்தம் 83.33 மணி நேரம் தேவை! அதாவது 4 நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்தால் தான் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க முடியும்!

இந்த நாளு நாட்களில் ஆபீஸ் போகணும், அதுக்கு குளிச்சி பல்லு வலக்கி,மூச்சா போயி, ஆய் போயி, சாப்பிட்டு தூங்குவது, கொஞ்சமாக எச்சி துப்பிக்கொள்வது, ஆளோடு கடலை போடுவது, சாட் பாக்ஸில் fake ஐடி உதட்டை கடிப்பது தவிர்த்துவிட்டு எப்படி பார்த்தாலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 மணி நேரம் கிடைக்கும்! இதில் தங்கள் சொந்த ஸ்டேட்டஸுக்கு யோசிப்பது, யோசித்து எதுவும் தோன்றாவிட்டால் பேப்பரில் தலைப்பு செய்தி பார்த்து எதாவது தேத்துவது!

இதெல்லாம் போக கிடைக்கும் 2 மணி நேரத்தில் டேக் செய்யப்பட்ட மிக முக்கியமான பதிவுகளுக்கு பதிலளிப்பது.. மிக "நெருக்கமான" நண்பர்களின் பதிவுகளுக்கு பதிலளிப்பது, அழகிகளின் போட்டோக்களின் அடியில் "nice" சொல்வது என போய் விட்டால் எங்கிருந்து உங்க ஸ்டேட்டஸ தேடி கண்டுபுடிச்சி லைக் குடுக்கறதாம்?

இதுல வேற "வரவர நீங்க என்ன கண்டுக்கவே மாட்றீங்க"ன்னு பொண்டாட்டிங்க தொல்ல வேற! டேய் புடிக்கலன்னா மூடிட்டு ப்ளாக் பண்ணிட்டு போங்கடா.. இனி எவனாவது பிரபல பதிவர்னு ஸ்டேட்டஸ் போட்டீங்க.. கொன்னு கொன்னு!

(பிரபல பதிவர் ஒருவரோடு பேசிய போது கிடைத்த தகவல் அடிப்படையில் எழுதபட்டது)

Sunday, November 16, 2014

முத்தத்திருவிழா!

காலை எனக்கு whatsupல் வந்த அந்த மெசேஜை நினைத்தாலே கிளுகிளுப்பாக இருந்தது! ஐஐடி நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்! "முத்த திருவிழா நடத்துகிறோம்.. உங்கள் காதலியோடு வரவும்" என்ற அந்த மெசேஜை பார்த்த உடனே கொஞ்ச நெஞ்ச தூக்க கலக்கமும் தூரே போய்விட்டது!

என்னதான் காதலியாக இருந்தாலும் எப்படி எல்லோர் முன்னாடியும் முத்தம் கொடுப்பது? யாராவது போட்டோ எடுப்பாங்களோ? வீடியோ எடுத்து யூட்யூப்ல போட்டுட்டா? அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா? கொஞ்சம் பீதியாகவே இருந்தது!

மொதல்ல அவ ஒத்துக்குவாளா? அன்று தியேட்டரில் முத்தம் கொடுக்க நெருங்கிய போது மூக்கில் விழுந்த குத்து ஏனோ நினைவுக்கு வந்தது! நமக்கு வாய்த்த காதலிகள் தான் எவ்வளவு திறமைசாலிகள்!

"அட்சுவலி முத்தம் குடுத்தப்போ how do u feel?" டைம்ஸ் ஆப் இண்டியா பெண்மணி என்னை பேட்டி எடுப்பது ஒரு முறை கண்ணில் வந்து போனது! பேஸ்புக் போராளிகளை ஒரு முறை யோசித்துக்கொண்டேன்! காறி துப்புவாங்களோ? ப்ளாக் பண்ணிட்டா?

ஒரு முத்தத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இழக்கலாம்! அவளுக்கு கால் செய்தேன்! "ஹம் தேரே பினு அபி ரே நஹி சக்தே.. தேரே பினா......." ஆஷிகி பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது! என்னையும் அறியாமல் வெட்கபட்டேன்!

"ஹலோ.. என்ன?" எதிர்முனை கடுமை காட்டியது!

"ஒண்ணு சொல்லுவேன்.. கோச்சிக்க கூடாது"

"என்ன?"

"அது ஒண்ணும் இல்ல.. அது வந்து.."

"ம்ம்ம்"

"இல்ல.. வேணாம்.. ஈவ்னிங்க் பேசிக்கலாம்"

"காண்டேத்தாம சொல்ல வந்தத சொல்லு"

"அட்சுவலி.. ஐ நீட் எ கிஸ்.. யூ நோ.. நாட் பார் மை ஓன் பர்பஸ்.. இட்ஸ் அ காஸ் பார் சொசைட்டி"

"டேய்.. ஓடிரு.. நானே செம்ம காண்டுல இருக்கேன்"

"வொய் புஜ்ஜி? வாட் ஹாப்"

"தெரிஞ்சி என்ன பண்ண போற"

"என்னடா அம்மு.. நான் உன் லவ்வர் தானே.. என்கிட்ட கூட சொல்ல கூடாதா?"

"உனக்கென்ன இப்போ கிஸ் தானே வேணும்" அவள் புத்திசாலி.. நேரே பாயிண்டுக்கு வந்துவிட்டாள்!

"but i have no mood to give u kiss"

"உனக்கு மூட் வரணும்னா என்ன பண்ணனும்" ப்ரம்மாஸ்திரத்தை ஏவினேன்!

"ஒண்ணும் பண்ண வேணாம் மூடிட்டு போறியா"

"வொய்டா செல்லக்குட்டி.. உன் புருசன் தானே கேக்கறேன்"
 
"ஓடிருடா.."

குரல் கொஞ்சம் கடுமையானது! ச்சே.. வேற யாரையாவது காதலிச்சிருக்கலாம்! நமக்கு மட்டும் ஏன் இப்படி? பேசாம பேஸ்புக்ல இதையே ஸ்டேட்டஸா போட்டா? ஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு!

பேஸ்புக்கில் யாராவது சிக்குகிறார்களா என தேடிக்கொண்டிருந்தேன்! ஒரு ஆசாமி சாட் பாக்ஸில் வந்து.. intersteller பாத்துட்டீங்களா? யாருக்குமே புரியலியாமே? என்று மொக்கை போட்டுகொண்டிருந்தார்! யோவ் ஏன்யா என் நிலைமை புரியாம காண்டேத்திகிட்டு!
துபாயிலிருந்து ஒரு fake id இன்பாக்ஸூக்கு வந்து டார்லிங்க் என்றது! முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் அவர் போட்டிருந்த மரம் நடுங்கள் பதிவை ஷேர் செய்ய சொல்லி கேட்டிருந்தார்! ரொம்ப முக்கியம்!

ஐஐடி நண்பர் கால் செய்தார்! "என்ன ப்ரோ? எப்ப வர்றீங்க" என்றார்!

"இல்ல ப்ரோ.. அட்சுவலி ஒரு சின்ன ப்ராப்ளம் ஆயிருச்சி.. ஆள் மக்கர் பண்ணுது..சோ.. முத்தம் குடுக்கறதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிங்கண்ணா பத்து நிமிசத்துல அங்க வந்துடுவேன்"
எதிர்முனை துண்டிக்கப்பட்டது! உண்மையில் முத்தம் கிடைப்பதே எவ்வளவு போராட்டமானது!

Wednesday, November 12, 2014

சிவநேசன் என்றொரு வார்டன்!

whatsappல் ஒரு வீடியோ வந்திருந்தது.. முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒரு வாத்தியார் மாணவர் ஒருவரை ஜெயில் வார்டன் மனநிலையில் தாக்கும் ஒரு வீடியோ.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேருக்கு பகிருங்கள் என்ற கோரிக்கையோடு வந்திருந்த வீடியோ அது! நாமெல்லாம் வாத்தியாரிடம் அடியே வாங்காத சமூகத்திலிருந்தா வந்தோம்? நாம பாக்காத அடியா? மிதியா?

என்ன அப்போதெல்லாம் facebookஓ whatsappஒ இல்லை அவ்வளவே.! இப்போதெல்லாம் மாணவர்கள் வாத்தியார்களை facebookலும் whatsappலும் டீல் செய்துகொள்கிறார்கள்! பவர் ஸ்டாருக்கு தனியே ஆரம்பிக்கும் பேஜ் போல இவர்களுக்கும் ஒன்றை ஆரம்பித்து மைம் உருவாக்கி கலாய்த்து நொங்கெடுக்கிறார்கள்!

நான் படித்த போதெல்லாம் எல்லா அடியையும் பல்லை கடித்துக்கொண்டு வாங்கிக்கொண்டு "மவனே டிசி மட்டும் கைல கிடைக்கட்டும்.. உன் சங்க கடிச்சி துப்பறேன்" என்று நினைத்துக்கொள்வோம்!
பள்ளியில் நான் ஹாஸ்டலில் படித்தபோது சிவநேசன் என்றொரு வார்டன் இருப்பார்! பயங்கர கருப்பாக இருப்பார்! சாரி.. கருப்பா பயங்கரமா இருப்பார்! study hallக்கு அவர் வருகிறார் என்றாலே எவ்வளவு பெரிய ரவுடியும் கப்சிப் ஆகி விடுவான்!

அவரிடம் சிக்குகிறவன் டெல்லி ஜூவில் புலியிடம் மாட்டிய குட்டிபையன் போல கூனி குறுகி எவ்வளவு தெய்வங்களை வேண்டினாலும் காப்பற்றப்படாதவனாக சிக்கி சின்னாப்பின்னமாவான்! அவரின் அடியை வாங்கிவிட்டால் உலகில் எப்படிப்பட்ட அடியையும் தாங்கி விடும் தெம்பு வந்துவிடும்!

பத்தாவது முடிச்சி டிசியை கையில் வாங்கிய கையோடு அவரை பழி வாங்க திட்டமிட்டவர்கள் ஏராளமானவர்கள்! ஆனால் அவர் அன்னைக்கி மட்டும் தலைமறைவாகி விட்டாரோ, அல்லது டிசி வாங்கிய சந்தோசத்தில் அவரை மறந்துவிட்டார்களோ என்னவோ.. சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் அவரை நான் பார்த்த போது நல்லபடியாகவே இருந்தார்! என்னிடம் மிகுந்த மரியாதையோடு பேசினார்!

"உங்களோட அடிய வாங்கிய பிறகு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய அடி வாங்குனாலும் வலிக்கவே வலிக்காது சார்" என்ற போது அவர் வெட்கபட்டார்! உண்மையில் இவரா நம்மை அடித்தார்? ராத்திரி கனவில் வந்த அந்த கொடிய உருவம் இவருடையதா? என்ற சந்தேகம் அப்போது வந்தது!

வாழ்க்கையில் மறக்கமுடியாத காயத்தை கொடுத்த பலரும் ஒரு கட்டத்தில் நல்லவர்களாகவே தெரிகிறார்கள்!