Monday, December 29, 2014

TCS ஆட்குறைப்புக்கு எதிராக ஒன்றிணைக்கும் அமைப்பு FITE

நேற்று ஒரு பதிவு இட்டிருந்தேன். 25 ஆயிரம் பேரை ஐடி நிறுவனங்கள் வேலையைவிட்டு நீக்கியதற்கு உங்களால போராட முடியவில்லையே என்று. அதற்கு இளந்தமிழகம் அமைப்பில் இருந்து ஒருவர் என்னை தொடர்புகொண்டார். இளந்தமிழகம் அமைப்பு இந்த பிரச்சினையை ஒட்டி மிகத்தீவிரமாக இயங்குவதாக தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் தமிழ் நாசர் எனக்கு டிசிஎஸ் layoffக்கு எதிரான facebook eventல் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனக்கு அது பற்றி நிறைய கேள்விகள் இருந்ததால் நேரில் பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். (அவர் என்னோடு போபால் வந்தவர்.)
நேற்று மாலை 3.30க்கு அதிகாரப்பூர்வமாக Forum for IT employees (FITE) என்ற அமைப்பு துவங்கப்பட்டிருக்கிறது. ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான தொழிற்சங்கம் போல இது இயங்கும்.

இது பற்றி அமைப்பில் இருக்கும் நண்பரிடம் பேசினேன். டிசிஎஸ் ஈவண்டுக்கு உலகம் முழுக்க இருக்கும் சுமார் 200 பேர் மேல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.பிப்ரவரி இறுதிக்குள் 25 ஆயிரம் பேரை வெளியேற்ற வேண்டும் என்பது தான் டிசிஎஸ்சின் இலக்கு. அதற்குள் இந்த போராட்டத்தை மிகப்பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பது தான் திட்டம் என தெரிவித்தார்.
சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், ஐடி நிறுவனம் ஒன்று தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். இழப்பீடு கூட பெற்றார். பத்திரிக்கையில் படித்தேன்.

எனவே நிச்சயமாக நம்மால் சட்டப்பூர்வமாக ஜெயிக்க முடியும். நிறுவனங்கள் புத்திசாலித்தனமாக "நாங்களா டெர்மினேட் பண்ணா நிறைய problem வரும். நீங்களே பேப்பர் போட்டுட்டு போயிட்டா பிரச்சினையே இல்ல" என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள். "நீங்களே அனுப்புங்க.. நான் பாத்துக்கறேன்" என்று சொல்வது தான் புத்திசாலித்தனம்!
FITE அமைப்பு நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது (பட உதவி : visai.in)

இப்போதைக்கு வேலையை விட்டு அனுப்பப்பட்டவர்களை போலவே வேலையில் இருப்பவர்களும் ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே கார்பரேட்டுகளுக்கு எதிராக நாம் வெல்ல முடியும். "இல்ல எனக்கு தான் வேலை இருக்கே. நான் ஏன் போராடணும்.. எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கு என்ன? அவனுக்கு திறமை இல்ல. அதனால வேலைய விட்டு அனுப்பறாய்ங்க" என்றெல்லாம் டுபாக்கூர் விட்டால் உங்களை எந்த அந்நிய சக்தியாலும் காப்பாற்ற முடியாது

FITE அமைப்பை தொடர்புகொள்ள http://fite.org.in/contact-us/

(குறிப்பு : டிசிஎஸ் layoffக்கு எதிரான பெட்டிசனில் கையெழுத்திட்டு ஆதரவை தெரிவியுங்கள் நண்பர்களே
https://www.change.org/p/international-labour-organization-… )

தொடர்புடைய பதிவுகள் : http://www.visai.in/2014/12/30/launched-forum-for-it-employees/

Saturday, December 27, 2014

PK திரைப்படம் விமர்சனம்

இன்று தான் PK திரைப்படம் பார்த்தேன். மதத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை என்பது தான் ஒன்லைன். அதை எவ்வளவு நேர்த்தியான கதை மூலம் சொல்லமுடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

வேற்றுகிரகத்திலிருந்து வருகிறார் அமீர்கான். அவருடைய கிரகத்தை தொடர்புகொள்ள ஒரு செயின் மாதிரி வைத்திருக்கிறார். அதை எவனோ திருடிவிடுகிறான். அதை எப்படி தேடிகண்டுபிடிப்பதென தெரியாமல் போலீஸை அணுகுகிறார்.

"யோவ் இவ்ளோ பெரிய சிட்டில யாரன்னு போய் தேடுவேன்.இதெல்லாம் கடவுள் தான் கண்டுபுடிச்சி தர முடியும்." என்கிறார். எல்லோரும் இதையே சொல்கிறார்கள். எனவே கடவுளை தேடி பயணத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு மதத்தினர் கோவிலுக்கும் செல்கிறார். சாமியாரிடம் செல்கிறார்.. அவர்களின் அபத்தமான பதில்களில் திருப்தி பெறாமல், எதிர்கேள்வி கேட்கிறார்..

உண்மையில் கடவுளை தேடி செல்லும் எல்லோருக்கும் இது போன்ற அபத்தமான பதில்களே வரும். கடைசியில் மொக்கையாக அன்பே கடவுள், நாம தான் கடவுள், எல்லோருமே கடவுள் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். அறிவியல் பூர்வமாக அணுகுவதென்றால் "கடவுள் துகள்" ( God particle or God Damn Particle) என்றெல்லாம் செல்லுவோம்.


உண்மையில் இரண்டு கடவுள் இருக்கிறார். ஒன்று கடவுள், இன்னொன்னு நீங்கள் உருவாக்கியவர். என்பதாக படம் முடிகிறது.

(குறிப்பு : கடவுளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பது போலவே எனக்கும் ஒரு ஒன்லைன் தோன்றியிருக்கிறது.. கம்யூனிசத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொடர்பில்லை என்பதே)

Sunday, December 7, 2014

போபால் பயணத்துளிகள் - 2

போபால் மக்கள் எளிமையாக இருக்கிறார்கள். குறிப்பாக உணவுப்பொருள்களெல்லாம் நல்ல தரத்தோடும், விலை மலிவாகவும் கிடைக்கிறது. டீ எல்லா கடையிலும் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நம்மூர் டீகளில் தான் கலப்படம் செய்துவிடுகிறார்கள். பாலில் தண்ணியை வாரி கொட்டி விடுகிறார்கள். அங்கே டீ வெறும் 5 அல்லது 6 ரூபாய்க்கு கிடைக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் பகிர்ந்த அனுபவம்.

* வெளியில் ஒரு கடைக்கு 5 பேர் சகிதம் சாப்பிட சென்றிருக்கிறார்கள். மொத்தமாக 175 ரூபாய் ஆகி இருக்கிறது. என்னண்ணே மொத்தமா இவ்ளோ பேர் சாப்பிட்டிருக்கோம், தள்ளுபடி எதுவும் இல்லையா? என்றிருக்கிறார்கள். அப்ப 170 ரூபாய் குடுங்க போதும் என்றிருக்கிறார்.

* ஒருவர் வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கியிருக்கிறார். கடைக்காரர் 40ரூபாய் விலை சொல்லியிருக்கிறார். என்னண்ணே அநியாய விலையா இருக்கு. என்றவுடன் அப்ப 30 ரூபா குடுங்க போதும் என்றிருக்கிறார். திடீரென எதோ யோசித்தவர் அந்த சீப்பு பழத்தோடு நாலு பழம் எக்ஸ்ட்ரா கொடுத்து இப்ப 40 ரூபாய் கொடுங்கள் என்றிருக்கிறார்.

* ஒரு கடையில் சப்பாத்தி சாப்பிட்டோம். வெறும் 3 ரூபாய் தான். softஆக பஞ்சு மாதிரி இருந்தது. சிக்கன் சன்னா வைத்தார்கள். நான்கு பீஸ். ஒவ்வொரு பீஸையும் கடித்தால் பஞ்சு மாதிரி இருக்கிறது. நல்ல பதமாக வேக வைத்ததாக இருந்தது. 5 பேர் வயிறு நிறைய சாப்பிட்டும் 130 ரூபாய் தான் ஆனது

* அங்கிருந்த போது நியூ மார்கெட் பகுதியில் இருந்த தியேட்டருக்கு நண்பரோடு சென்றோடு சென்றேன். zid திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சென்னை தேவி தியேட்டர் போல மிகப்பெரியதாக இருந்தது. நாங்கள் வியாழக்கிழமை சென்றோம். இரவுக்காட்சி. வெறும் 40 பேர் தான் இருந்தார்கள். நம்மூர் போலவே பேன்ட் பாக்கெட்டையும் சட்டை பாக்கெட்டையும் அமுக்கி பார்த்து தான் உள்ளே அனுப்புகிறார்கள் ( ஆண்களுக்கு மட்டும்) நண்பர் ஒருவரிடம் சிகரெட் வைத்திருக்கிறீர்களா என தீவிரமாக விசாரித்தே உள்ளே அனுப்பினார்கள்.

உள்ளே ஒரு குரூப் எல்லா சீட்டிலும் பான்பராக் துப்பி வைத்திருந்தார்கள். இரவு 9 மணிக்கு படம் போட்டு 11.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்கள். அந்த இரவிலும் எல்லோரும் சாதாரணமாக ரோட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மூர் போல 10 மணிக்கே இழுத்து போத்திக்கொண்டு பொண்டாட்டியை கட்டிபிடித்து தூங்குவதில்லை. குறிப்பாக யாரும் ட்ராபிக் ரூல்ஸை மதிப்பதே இல்லை. ட்ராபிக் போலீஸையும் மதிப்பதில்லை. ரோட்டில் எல்லோரும் கொலை வெறியோடு தான் பைக்கை செலுத்துகிறார்கள். 3 பேராக அசால்டாக செல்கிறார்கள்.

ரோடு க்ராஸ் பண்ணுபவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டே செல்ல வேண்டி இருக்கிறது!

போபால் பயணத்துளிகள் - 1

சென்னையிலிருந்து போபாலுக்கு பதிவு செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங்கிலேயே இருந்தது. அதனால் ஜெனரல் டிக்கெட் எடுத்து unreservedல் அடித்து பிடித்து ஏறி உட்கார்ந்துகொண்டோம்!
ராத்திரி 12 மணி இருக்கும்.. அர்ஜன்டாக மூச்சா வந்தது.. "இவனுங்க கிட்ட மல்லு கட்டி பாத்ரூம் போறதுக்கு அடக்கிகிட்டே இருந்துடலாம்" என்றார் நண்பர்!

ஆத்தரத்த அடக்கலாம்.. ஆனா மூத்தரத்த அடக்கமுடியுமா? ஒவ்வொரு இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள வழியிலும் ஆசாமிகள் உட்கார்ந்திருந்ததால், நான் ஒவ்வொரு சீட்டின் தலைமாட்டிலும் கால் வைத்து பாத்ரூம் நோக்கி முன்னேறினேன்!

பாத்ரூமுக்கு வெளியே பத்து பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கால் வைக்கவே இடம் இல்லை.. ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டேன். :O ஏற்கனவே உள்ளே ஒரு ஆள் ஆக்கிரமித்திருந்தார். நான் இரண்டு சீட்டுக்கு நடுவே கால் வைத்து பாத்ரூமுக்கு தாவலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்!

மனதை திடப்படுத்திக்கொண்டு தாவ முயற்சித்தேன். முடியாமல் நடுவில் ஒரு பக்கம் காலை வைத்து, பாத்ரூமில் ஒரு காலை வைக்கும்போது ஒரு ஆசாமியின் முகத்தில் என் கால் பட்டு, அதில் இருந்த நீர் பட்டு, அவர் தூக்கம் கலைந்து எழுந்து.. எதெதோ திட்டினார். இந்தியாவின் இன்னொரு முகத்தை அங்கே தான் பார்த்தேன்!

67 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் நாம் அடைந்திருக்கும் அதிக பட்ச வளர்ச்சி அது!

- - - - - - - - - -

இங்கிருந்து ரயிலில் செல்லும்போது டிடிஆரிடம் பேசி ரிசர்வில் இடம் பிடித்துக்கொண்டோம். ஏற்கனவே அங்கே நான்கைந்து நண்பர்கள் தட்கலில் புக் செய்து வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் ஆர்.எஸ்.எஸ்காரர். அவ்வப்போது இவர்கள் அவரை சீண்டும் விதமாக இந்துத்துவா திணிப்பு, மோடி என்றெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள்.

இத்தனைக்கும் அவர் இவர்களுக்கு இட்லி கொடுத்தார், அவர் கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்துகொண்டார், அவர் மனைவியும் நல்ல விதமாகவே நடத்தினார்.
அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வந்தேன். இவர்களின் எந்த பேச்சுமே அவரை கோபப்படுத்தியதாகவோ,அவர் உணர்ச்சி வசப்பட்டதாகவோ கூட நினைவில்லை. நான் எச்.ராஜாவை அவரோடு பொருத்தி பார்த்துக்கொண்டேன்!

- - - - - - - 

போபாலில் (மத்திய பிரதேசம்) கடந்த பதினைந்து ஆண்டுகளாக பா.ஜ.க அரசு தான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் நடத்தக்கூடிய வகுப்புகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு பாடத்தில் கீதையை சேர்த்திருக்கிறார்கள். பா.ஜ.க இன்னும் பத்து ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பொருத்தி பார்த்துக்கொள்கிறேன்!

- - - - - - - -

போபால் போய்விட்டு இன்று காலை (டிசம்பர் 6) தான் சென்னை வந்தடைந்தேன்! ரயிலில் மிகச்சிறந்த குரூப் அமைந்துவிட்டது.. வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம். நேற்று காலை 9 மணிக்கு ரயில் ஏறியதுமே பேசத்துவங்கியவர்கள் தான்.. மதியம் 3 மணி வரை தண்ணி கூட குடிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம்.. ( தண்ணி காசு குடுத்து வாங்ககூடாதாம்.. )
நாங்கள் முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து எங்களிடம் பதறியடித்து ஓடிவந்த ஆசாமி.. "யார் சார் நீங்கள்லாம்.. என்னென்னவோ விசயங்களையெல்லாம் பேசறீங்க.. எதாவது காலேஜ் பசங்களா?" என்றார்!
"சார் சீரியசா பேசிகிட்டு இருக்கோம். உங்கள்ட்ட அப்றமா பேசறோம்" என சொல்லி அனுப்பி வைத்துவிட்டோம்! ‪#‎தட்‬ இந்த அவமானம் தேவையா மொமண்ட்!

 - - - - - -

காலையில் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

"போபால்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்த?" என்றார்

"ரூம் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்"

"நான் அதை கேக்கல.. அங்க போன நினைவா எதாவது பொருள் வாங்கிட்டு வந்தியா"

"நினைவை ஏன் பொருளோடு தொடர்புபடுத்துகிறீர்கள். போதுமான நினைவை மனதில் சுமந்து வந்திருக்கிறேன்" என்றேன்! # எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு!