Sunday, December 7, 2014

போபால் பயணத்துளிகள் - 1

சென்னையிலிருந்து போபாலுக்கு பதிவு செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங்கிலேயே இருந்தது. அதனால் ஜெனரல் டிக்கெட் எடுத்து unreservedல் அடித்து பிடித்து ஏறி உட்கார்ந்துகொண்டோம்!
ராத்திரி 12 மணி இருக்கும்.. அர்ஜன்டாக மூச்சா வந்தது.. "இவனுங்க கிட்ட மல்லு கட்டி பாத்ரூம் போறதுக்கு அடக்கிகிட்டே இருந்துடலாம்" என்றார் நண்பர்!

ஆத்தரத்த அடக்கலாம்.. ஆனா மூத்தரத்த அடக்கமுடியுமா? ஒவ்வொரு இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள வழியிலும் ஆசாமிகள் உட்கார்ந்திருந்ததால், நான் ஒவ்வொரு சீட்டின் தலைமாட்டிலும் கால் வைத்து பாத்ரூம் நோக்கி முன்னேறினேன்!

பாத்ரூமுக்கு வெளியே பத்து பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கால் வைக்கவே இடம் இல்லை.. ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டேன். :O ஏற்கனவே உள்ளே ஒரு ஆள் ஆக்கிரமித்திருந்தார். நான் இரண்டு சீட்டுக்கு நடுவே கால் வைத்து பாத்ரூமுக்கு தாவலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்!

மனதை திடப்படுத்திக்கொண்டு தாவ முயற்சித்தேன். முடியாமல் நடுவில் ஒரு பக்கம் காலை வைத்து, பாத்ரூமில் ஒரு காலை வைக்கும்போது ஒரு ஆசாமியின் முகத்தில் என் கால் பட்டு, அதில் இருந்த நீர் பட்டு, அவர் தூக்கம் கலைந்து எழுந்து.. எதெதோ திட்டினார். இந்தியாவின் இன்னொரு முகத்தை அங்கே தான் பார்த்தேன்!

67 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில் நாம் அடைந்திருக்கும் அதிக பட்ச வளர்ச்சி அது!

- - - - - - - - - -

இங்கிருந்து ரயிலில் செல்லும்போது டிடிஆரிடம் பேசி ரிசர்வில் இடம் பிடித்துக்கொண்டோம். ஏற்கனவே அங்கே நான்கைந்து நண்பர்கள் தட்கலில் புக் செய்து வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் ஆர்.எஸ்.எஸ்காரர். அவ்வப்போது இவர்கள் அவரை சீண்டும் விதமாக இந்துத்துவா திணிப்பு, மோடி என்றெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள்.

இத்தனைக்கும் அவர் இவர்களுக்கு இட்லி கொடுத்தார், அவர் கொண்டுவந்த உணவுகளை பகிர்ந்துகொண்டார், அவர் மனைவியும் நல்ல விதமாகவே நடத்தினார்.
அவரை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வந்தேன். இவர்களின் எந்த பேச்சுமே அவரை கோபப்படுத்தியதாகவோ,அவர் உணர்ச்சி வசப்பட்டதாகவோ கூட நினைவில்லை. நான் எச்.ராஜாவை அவரோடு பொருத்தி பார்த்துக்கொண்டேன்!

- - - - - - - 

போபாலில் (மத்திய பிரதேசம்) கடந்த பதினைந்து ஆண்டுகளாக பா.ஜ.க அரசு தான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் நடத்தக்கூடிய வகுப்புகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு பாடத்தில் கீதையை சேர்த்திருக்கிறார்கள். பா.ஜ.க இன்னும் பத்து ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பொருத்தி பார்த்துக்கொள்கிறேன்!

- - - - - - - -

போபால் போய்விட்டு இன்று காலை (டிசம்பர் 6) தான் சென்னை வந்தடைந்தேன்! ரயிலில் மிகச்சிறந்த குரூப் அமைந்துவிட்டது.. வழி நெடுக பேசிக்கொண்டே வந்தோம். நேற்று காலை 9 மணிக்கு ரயில் ஏறியதுமே பேசத்துவங்கியவர்கள் தான்.. மதியம் 3 மணி வரை தண்ணி கூட குடிக்காமல் பேசிக்கொண்டிருந்தோம்.. ( தண்ணி காசு குடுத்து வாங்ககூடாதாம்.. )
நாங்கள் முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து எங்களிடம் பதறியடித்து ஓடிவந்த ஆசாமி.. "யார் சார் நீங்கள்லாம்.. என்னென்னவோ விசயங்களையெல்லாம் பேசறீங்க.. எதாவது காலேஜ் பசங்களா?" என்றார்!
"சார் சீரியசா பேசிகிட்டு இருக்கோம். உங்கள்ட்ட அப்றமா பேசறோம்" என சொல்லி அனுப்பி வைத்துவிட்டோம்! ‪#‎தட்‬ இந்த அவமானம் தேவையா மொமண்ட்!

 - - - - - -

காலையில் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

"போபால்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்த?" என்றார்

"ரூம் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன்"

"நான் அதை கேக்கல.. அங்க போன நினைவா எதாவது பொருள் வாங்கிட்டு வந்தியா"

"நினைவை ஏன் பொருளோடு தொடர்புபடுத்துகிறீர்கள். போதுமான நினைவை மனதில் சுமந்து வந்திருக்கிறேன்" என்றேன்! # எப்டியெல்லாம் சமாளிக்க வேண்டியது இருக்கு!


No comments: