Tuesday, November 18, 2014

தற்கொலைக் கடிதம்!

பதட்டப்படாதீர்கள்! நான் எடுக்கும் முடிவுக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்! நான் இதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தேன்.. இப்போது தான் அது நடந்திருக்கிறது! பத்து தூக்க மாத்திரைகள் கைவசம் இருக்கின்றன!

நான் ஒரு கோழை.. எனக்கு கத்தி எடுத்து கழுத்தறுத்துக்கொள்வதென்றால் பயம். தூக்கில் தொங்கி, கழுத்தெழும்பு உடைந்து கண் பிதுங்கி கோரமாக சாக துணிச்சல் இல்லை. இப்போது தூங்கிக்கொண்டே சாகும் ஒரு வலியற்ற சாவு கிடைத்திருக்கிறது!
என் சாவுக்கு யாரும் காரணமில்லை.. போலீஸ் வந்து கேட்டால் தற்கொலை என்றே சொல்லுங்கள்! என் அம்மா அப்பாவை நினைத்து தான் பயமாக இருக்கிறது! அவள் யாரையாவது திருமணம் செய்து தொலையட்டும்! எங்கிருந்தாலும் வாழ்க! 

* * *

* * *

* * *

சுரேஷ் இப்படி எழுதி facebookல் போட்டு பதினைந்து நொடிகளில் இரண்டு லைக் விழுந்திருந்தது! ஒரு ஆசாமி "நச் பதிவு தோழி" என்று கமெண்டியிருந்தார்!

No comments: