Tuesday, July 22, 2014

2000ரூவா தப்பிச்சிங்க் மொமண்ட்!

கொஞ்ச நேரம் முன்பு யாரோ கதவை தட்டினார்கள்! திறந்து பார்த்தால் கோர்ட் சூட் போட்டு ஒருத்தர் நின்று கொண்டிருந்தார்! கூடவே இரண்டு கல்லூரி மாணவர்கள்! 

கோட் சூட் ஆசாமி.. மலையாளி தமிழ் பேசுவது போல பேசினார்! ஆனால் ஆளைப்பார்த்தால் மலையாளி போல தெரியவில்லை! யாரா இருந்தா என்ன? எப்டியும் இன்னும் மூன்று நிமிடத்தில் கதவை சாத்திவிட தானே போறோம் என்றெண்ணி 

“என்ன பாஸ்” என்றேன்!

தலையணை சைஸ் உள்ள புத்தகம் ஒன்றை நீட்டி.. “இந்த புத்தகம் நோளைக்கி லாஞ்ச் ஆகப்போகுது.. இந்த புத்தகத்தோட ஸ்பெசாலிட்டி என்னன்னா.. அதிக விஷமுள்ள பிராணி எதுன்னு சொல்லுங்க பாப்போம்” என்றார்!

“பாம்பு” என்றேன்!

பக்கத்தை திருப்பி காட்டி “ஜெல்லி ஃபிஷ் ப்ரோ.. அடுத்து தான் பாம்பு.. அதுவும் கடல் பாம்பு.. அதிக விஷமுள்ள பத்து பிராணி பற்றிய தகவல் இந்த பக்கத்தில் இருக்கு.. இது மாதிரி எல்லாவற்றை பற்றியும் டாப் 10 விசயம் இந்த புத்தகத்தில் இருக்கு.. இந்த புக் உங்களுக்கு ஆஃபர்ல ஃப்ரீ” என்றார்!

”ஃப்ரீயா” என்று வாயை பிளந்தேன்! இது போலவே ஒரு டிக்சனரி.. என்சைக்ளோபீடியா எல்லாமே இலவசமாம்! ஒவ்வொன்றின் பின்னாலும் விலை 1900, 1800 என்று எழுதியிருந்தது! impulse என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது!

“இப்டி 3 புக்கையும் இலவசமா குடுத்தா கம்பெனி துண்ட போட்டுட்டு போயிட மாட்டாங்களா ப்ரோ?” என்றேன்!

“இல்ல ப்ரோ.. இந்த புக்கை வாங்குனா அந்த மூணு புக்கும் ஃப்ரீ” என்று முரட்டுத்தனமான ஒரு புக்கை எடுத்தார்.. அதன் விலை 1900 மட்டுமேவாம்!

“எங்க பரம்பரையில எவனுக்குமே படிக்க தெரியாது ப்ரோ..” என்று காலில் விழுந்து கெஞ்சாத குறையாக சொல்லி வழியனுப்பிவைத்தேன்!

(இரண்டாயிரம் ரூபாய் கைய விட்டு போகபாத்துச்சி.. விடுவனா )

Sunday, July 20, 2014

விஜய் அவார்ட்ஸ் - reputation management

இயக்குனர் ராம் பேசி முடித்ததுமே விஜய் டிவி கொஞ்சம் மானே தேனே பொன் மானேவெல்லாம் போட்டு சமாதனம் சொல்லி “ராமுக்கு நன்றி” என்று சொன்னது எனக்கு தெரிந்து தமிழ் ஊடகத்திலேயே புதிது!

முன்பு கலைஞர் பாராட்டு விழா நடந்த போது அஜீத் பேசிய பேச்சு ஊடகங்களிலும் வெளிவட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பியபோது எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள்! விஜய் தொலைக்காட்சியும் அப்படியே செய்யும் என்று தான் பெரும்பாலானவர்கள் கணித்திருந்தார்கள்!

ஆனால் விஜய் டிவி இதை மிக லாவகமாக கையாண்டிருக்கிறது! இணைய மார்கெட்டிங்கில் இதை reputation management என்பார்கள்! ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் போஸ்ட் போட்டு எந்த brandஐ வேண்டுமானாலும் காலி செய்துவிடலாம் என்ற நிலை வந்த போது இந்த reputation management என்ற துறை உருவானது! கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த துறை அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது!

சோசியல் மீடியா இவ்வளவு பலம் பெறாத காலத்தில் இணையத்தில் யாரைப்பற்றியாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் எதாவது complaint forum தளத்தில் எழுதுவார்கள்! ”ஏர்டெல்காரன் என்கிட்ட காசு புடிங்கிட்டான்” என்பது மாதிரி எழுதினால் அதற்கு கீழே airtelன் நோடல் அதிகாரி யாராவது 24 மணி நேரத்தில் சரி செய்து தருகிறோம் என்று பதிலளித்திருப்பார்கள்! கஷ்டமர் கேர்கள் கை கொடுக்காத நேரத்தில் இது உதவும்.. ( நான் சில முறை முயற்சித்திருக்கிறேன்)

 நிறுவனங்களில் இதற்கென ஒரு டீம் இருக்கும்.. அவர்கள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ நிறுவனம் பற்றி யாராவது தவறாக தகவல் பரப்புகிறார்களா என பார்த்துக்கொண்டே இருப்பார்கள்! அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எழுதுகிறார்களா என பார்ப்பார்கள்! (இதற்கு சில டூல்கள் இருக்கிறது)

அவதூறு என்றால் சம்பந்தப்பட்ட நபரையோ தளத்தையோ அணுகி நீக்க சொல்வார்கள்! பாதிக்கப்பட்டவர் என்றால் பாதிக்கப்பட்டவரை அணுகி பாதிப்பை சரிகட்டுவார்கள்! சரி செய்த பிறகு அதையே ஒரு போஸ்டாக போட சொல்லி விளம்பரமாக மாற்றும் உத்தியும் உண்டு :) விஜய் டிவி செய்தது இதில் ஒரு வகை!