Monday, May 30, 2011

நீயா நானா (29-05-2011)(திருமண வயதில் இருக்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வருங்கால வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும்) Review

நீயா நானா(29-05-2011) ஞாயிற்று கிழமை நடந்த நிகழ்ச்சி குறித்த என்னுடைய கருத்துகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..தனக்கு வரப்போகும் வரன் இப்படி தான் இருக்கவேண்டும் என்ற கனவு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பது வழக்கம்..

இதை  பற்றி தான்இந்த வார நீயா நானாவில் கோபி அலசினார்.. ஏற்கனவே இந்த தலைப்போடு தொடர்புடைய பல தலைப்புகளில் இதைப்பற்றி அலசி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியும் நமக்கு பல புதிய படிப்பினைகளை கற்று கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்..

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பெண்கள் தரப்பில் பொதுவாக சொல்லப்பட்ட சில கருத்துக்கள் இவை தான்.. தனக்குவரப்போகும் கணவன் தன்னை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும், அதிகம் படித்திருக்க வேண்டும்.. ரொம்ப வெள்ளையா இல்லன்னாலும் பரவாயில்லை.. என்பது போன்ற பொதுவான எதிர்பார்ப்புகளையே  வைத்திருந்தனர்..

வழக்கம்  போல ஆண்கள்.. தங்கள் மனைவி கலராக இருக்க வேண்டும்(இவர் அட்ட கரியா  இருப்பாரு)..பெரிய அளவில் வரதட்சணை எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஒருத்தர் உண்மை பேசினார்..வேற என்ன அவங்க ஜாதில 100 பௌன் போடுவாங்கலாம்..(நாங்க பாக்க தானே போறோம்)..ஒருத்தர் பொண்ணு கெடச்சா போதும்கரமாறி பேசுனாரு..(ரொம்ப நல்லவர்..வரவேற்கிறேன்)..

மொத்ததுல எல்லோருக்கும்அவங்கவங்க ஜாதிலையே வரன் வேணுமாம்..ஜாதி ஒழியாது..வாழ்க ஜாதியம்.. ஆளாளுக்கு ரொம்ப அதிகமா தான் ஆசைபடரானுங்க.. 

ஒரு  பொண்ணு குருக்கள கட்டிக்க மாட்டேன் னு சொன்னாங்க..பாவம் அது அவர் உத்தியோகம்..இன்னொருதவங்க பிசினஸ்மானே வேணாம் னு சொல்லறாங்க(ஆனா வர போற புருசன்ட தீபாவளி பொங்கலுக்கு பட்டு பொடவ, தங்க நகை கேளுங்க..)

பெண்  வீட்டு காரர்கள் யாரும் பெண்பார்க்கும் படலத்தின் போது தங்கள் பெண்ணை பையனோட பேச அனுமதிக்க தயாராக இல்லை என்பது ஒருவரின் குற்றச்சாட்டின் போதும் கோபி இது சம்பந்தமாக கை உயர்த்த சொன்ன போதும் தெரிந்து கொண்டோம்..(ஸ்கூல் காலேஜ்அ விட கேவலமா இருக்குய்யா..இன்னுமா நீங்க திருந்தல..)

ஏன்னு கேட்டா அந்த பையன்ட பேசுனா அவள் அவனையே கணவனாக நினைத்து விடுவாளாம்..(இன்னுமா இத இந்த உலகம் நம்புது..??)

அப்புறம் எதுக்கு பல வருடம் காதலித்தவனை மிக எளிதாக மறந்து அப்பா அம்மா பாக்கற பையன கல்யாணம் பண்ணிகறாங்க..பீச் பார்க்குகளில் குடும்பம் நடத்தியும் கூட..(Note this point your honer நான் எல்லோரையும் இங்கே சொல்லவில்லை)

ஒருத்தர் பெரிய குண்டா தூக்கி போட்டாரு..பெண் வீட்டார் "கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அம்மா உங்க கூடவே இருப்பங்கலானுலாம் கேகராங்கலாம்".. (பாவிங்களா பொண்ணு குடுகரதுக்கு முன்னாடியே குடும்பத்த பிரிக்கரத பத்தி எவ்ளோ யோசிகரானுங்க..)

இன்னொரு  குரூப் கூட்டு குடும்பம்னா வேனாம்ன்கறாங்க..(குடும்பம் அழிஞ்சி போனதுக்கு இவர்களே காரணம்..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..).. 

சிறப்பு விருந்தினர் சொன்னது அருமை.."வரன் பற்றிய விசாரனை நலன் விசாரணை போல் இருக்க வேண்டும்...புலன்விசாரணை போல் இருக்க கூடாது.."     அற்புதமான கருத்து..

கோபி சொன்னது தான் உச்ச கட்டம்.. "உலகத்தில் நூறு சதவிதம் உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணுகிற வரன் பிறக்கவில்லை..அப்படியே நீங்கள் உலகிலேயே பெஸ்ட் தம்பதிகளாக இணைந்தாலும்  நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது.."

நிம்மதியான வாழ்க்கை  உங்களுக்கு அமைகிற வரனிலோ, நீங்கள் அமைத்து கொள்கிற வரனிலோ இல்லை..அது உங்கள் இரு மனம் புரிந்து கொள்கிற அற்புதமான வாழ்கையில் இருக்கிறது.."கலர் டிவி பரிசு பெற்ற நண்பர் நமக்கு உணர்த்தியது இதை தான்"


















Sunday, May 22, 2011

ப்ளீஸ் இந்த புத்தகத்ததை வாங்காதீங்க Review


புத்தகத்தின் பெயரே நம்மை வாங்க தூண்டுகிறது..நாமாளுங்கள எதையாவது பண்ணாதனு சொன்னா.. அத தான் பண்ணுவாங்க.. இது தான் உளவியல்.. இதை மிக சரியாக தன் புத்தகத்தின் தலைப்பில் பயன்படுத்தி இருக்கிறார் கோபிநாத்..

இந்த புத்தகத்தின் பெயர் காரணத்தை இவர் கூறும் விதம் மிக அருமை.. இந்த புத்தகத்தை படிக்கும் போது கோபிநாத்தே நம் அருகில் உட்கார்ந்து பேசுவது போல உள்ளது..

"கணக்கு பெரிதாகும் போது நமக்கு ஒரு calculator தேவைப்படுகிறது.. இது எழுத்து calculator" என்ற முகவுரை அருமை..

வாழ்க்கையை எப்படி நாம் பார்க்கிறோம் என்பதே நம் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது என்பதை மிக சிறந்த உதாரணங்களுடன் மிக அருமையான எழுத்து நடை மூலம் சொல்லி இருக்கிறார்..

"சந்தோசத்தை தனக்குள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டு இருக்க மாட்டான்.." என்ற வரி அருமை..

"மூட்டை தூக்குபவன் எத்தனை மூட்டை தூக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர.. மூட்டை தூக்குவதால் ஏற்படும் வலியை பார்க்க கூடாது" என்பது போன்ற வரிகாளால் பல இடங்களில் நம்மை யோசிக்க வைத்திருக்கிறார்..

இந்த புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும் புதிதாக படிப்பதை போன்ற உணர்வே ஏற்படுகிறது.. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு வித சிந்தனையை நமக்குள் தொடர்ந்து இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது.. கோபிநாத் இந்த புத்தகத்தின் மூலம் தன்னால் மிக சிறப்பாக எழுதவும் முடியும் என நிரூபித்து இருக்கிறார்...

மனதுக்கு இருக்கும் அற்புதமான சக்தி பற்றி இவர் கூறும் தகவல் பல சமயங்களில் நான் உணர்ந்ததே...இந்தியன் தொடர்ந்து அடிமையாக வேலை செய்வதை பற்றி கூறி சொந்தமாக பிசினஸ் செய்ய நம்மை தூண்டுகிறார்..

மொத்தத்தில் கோபிநாத் இந்த புத்தகத்தில் புதிதாக எதையும் சொல்ல வில்லை.. புதிய விதத்தில் சொல்லி இருக்கிறார்.. இந்த புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை தாண்டி இன்னும் தொடர்ந்து விற்பனை ஆகிகொண்டிருப்பதே கோபிநாத் எழுத்து இமயம் நோக்கி நகர்கிறார் என்பதை உணர்த்துகிறது...

"தமிழுக்கு ஒரு சிறந்த தன்னம்பிக்கை எழுத்தாளர் கிடைத்துவிட்டார்.." வாழ்த்துக்கள் கோபி..




  

 








Saturday, May 14, 2011

வானம் - திரை விமர்சனம்(Review)

காதலுக்காக எதையும் செய்ய துணியும் பையனாக "எவண்டி உன்ன பெத்தான்.." என்று ஆரம்பத்தில் ரோமன்டிகாக கதையை நகர்தினாலும் படத்தின் இறுதி வரை கதை ஓட்டத்தை இயக்குனர் கிரீஸ் மிக சரியாகவே நகர்த்தி இருக்கிறார்..

அழகான  பெரிய பணக்கார புள்ளையா பாத்து கரெக்ட் பண்ணி செட்டில் ஆகி விட வேண்டும் என்ற மிக உயரிய லட்சியத்தை கொண்டிருக்கிறார் சிம்பு

மிகப்பெரிய கிடாரிஸ்ட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு போட்டியில் பங்கு பெற சென்னை நோக்கி வருகிறது பரத் தலைமையிலான ஒரு குருப்..

தன் மகன் பாண்டியை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன் கிட்னியை நாற்பதாயிரதிற்கு விற்க துணியும் ஒரு தாய்..

தன்  தம்பியை இழந்து..அவனை தேடிசென்னை வரும் அப்பாவி இஸ்லாமியனாக பிரகாஷ்ராஜ்..

விபச்சாரியாக களம் இறங்கும் அழகு அனுஷ்கா..

இவர்கள்  எல்லோரும் எப்படி ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை..

சிம்பு  தன் யதார்த்தமான நடிப்பை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்..வாங்கற சம்பளத்துக்கு அதிகமாக நடிக்கும் வழக்கமான நடிப்பு அவரிடம் இந்த படத்தில் இல்லை.. மற்ற எல்லா கதாப்பதிரங்களுமே தங்கள் பகுதியை மிகச்சிறந்த நடிப்பின் மூலம் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்கள்..

இயக்குனர்  கிரீஸ் நம்மை ஒரு காட்சியில் அழவைத்து அடுத்த ஷாட்டில் சிரிக்க வைக்கும் மிக நுட்பமான திறனை பயன்படுத்தி இருக்கிறார்..


உதாரணத்திற்கு சிம்பு ஒரு காட்சியில் பையன் படிப்பிற்காக கிட்னி விற்கும் அம்மாவிடம் திருடும் போது அந்த அம்மாவின் தவிப்பையும், சிம்பு அதை உணர்ந்து அந்த பணத்தை திருப்பி கொடுக்கும், அந்த காட்சியில் நம்மை அழ வைக்கிறார்.. ஆனால் அடுத்த ஷாட்டில் சிம்பு அங்கேஇருக்கும் குழந்தையிடம் விளையாடும் போது நம்மை சிரிக்க வைக்கிறார்..

எல்லா முஸ்லிமும் தீவிரவாதி அல்ல என்பதை பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் சொல்லுகிறது..

யுவன்ஷங்கர் ராஜா எவண்டி உன்ன பெதான் பாடலில் நம்மை ஆட வைக்கிறார்.. ஆனால் "தெய்வம் வாழ்வது எங்கே..தவறுகளை உணரும் போது அங்கே" என கிளைமாக்ஸ்இல் எல்லோரையும் அழ வைக்கும் தன் இசை ஆற்றலை ஸ்க்ரீனுக்கு ஸ்க்ரீன் பயன் படுத்தி நம்மை புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்..

"மனிதன் போலி நோட்டை உருவாக்குகிறான்..நோட்டு போலி மனிதனை உருவாக்குகிறது" வசனம் மிக அருமை..

மொத்தத்தில் வானம் - "தொட முடியாத உயரம தான்" என்பதை இப்படம் முடிந்தவுடன் நம்மை உணர வைக்கிறது..

தமிழ் சினிமா தன் அடுத்த தளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.. 














Flash news: வடிவேல் தலைமறைவு

Before Election:






May 13 @ 9.00 am














May 13 @ 12.15 pm











இப்பவே கண்ண கட்டுதே...


அடிதடி அரசியல் எங்களுக்கும் காட்ட தெரியும்.. ஆனா பண்ண மாட்டோம்.. பண்ண தெரியாது எங்களுக்கு..

தேர்தல் முடிவு அன்று வெளியான ஜோக்குகள்

Flash News:

காணாமல்  போனவர்கள் பற்றிய அறிவிப்பு:

பெயர்: வடிவேலு
நிறம்  :கறுப்பு
ஊர்  :மதுரை
வயது :40+

இவரை  பற்றிய தகவல் கிடைத்தால் விஜயகாந்திடம் ஒப்படைக்கவும்..

----------------------------
வடிவேல்: ஐயா நீங்கஜெயிசிருவீன்களா?

கருணாநிதி: ஏம்பா இப்படிசந்தேகமா கேக்கற?

வடிவேல்: இல்ல விஜயகாந்த், அவன் வேட்பாளரையே அந்த அடி அடிக்குறான்..அவங்க வின் பண்ணிட்டாங்கன்ன கேட்கவே வேண்டாம்..அடுத்த 5 வருஷம் என்னை ரூம் போட்டு வச்சி அடிப்பானே...
 -----------------------------
Breaking News:

Karunanidhi has applied for re-valuation..

------------------------------
வடிவேல்  விஜயகாந்திடம்:


"நான் உங்கள பத்தி விளையாட்டா பேசுனத எல்லாம் நீங்க நம்பிட்டீங்க!! ஹய்யோ!! ஹய்யோ!!"
---------------------------------
TN Election result 2011:


"The Mummy Returns"
--------------------------------