அப்போது புதியதலைமுறை நியூ இயர் ஸ்பெசல் புத்தகத்துக்காக ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அது தான் எனக்கான 2012ஐ துவக்கி வைத்தது. நான் எழுதிய சில உருப்படியான கட்டுரைகளில் அதுவும் ஒன்று. நண்பர் ஒருவர் கண்டுபிடித்த கருவி பற்றியது அது. எடிட்டிங் எல்லாம் முடிந்து புத்தகம் என் கைக்கு வந்த போது அதிர்ச்சி. அதில் என் பெயர் இல்லை.
”என்ன பாஸ் கட்டுரைல எங்க வாத்தியார் பெயரே வரலை” என்று அந்த கண்டுபிடிப்பாள நண்பர் போன் செய்த போதுகூட எனக்கு சிரிப்பு தான் வந்தது. “பாஸூ அதுல என் பெயரே வரலை” என அவரிடம் சொல்லவில்லை. ஆனால் இதற்காக நான் சண்டை போடவில்லை. காரணம் இருந்தது. அந்த வாரம் எடிட்டிங்கில் இருந்தவர் என் மதிப்பிற்குரியவர். சொல்லப்போனால் என் நண்பர். அவர் வேண்டுமென்றே இதை செய்யக்கூடியவர் அல்லர்.எனக்கான வழிகாட்டியே அவர் தான்.
சொல்லப்போனால் இந்த விசயத்தில் என்னைவிட அதிகமாக கவலைப்பட்டவரும் அவர் தான்.எடிட்டருக்கு இது தெரிந்தால் என்ற கவலைக்கும் மேலே சில கவலைகள் இருந்திருக்கலாம்.இன்னொன்று சண்டை போடுவதால் எதுவும் மாறப்போவதில்லை. புத்தகம் முழுவதும் அச்சாகிவிட்டது. மறுநாள் கடைகளுக்கு போய்விடும்.எனக்கும் சண்டை போடுவது ரொம்ப போராக மாறிவிட்டிருந்தது. பள்ளி கல்லூரிகளிலேயே அதிக சண்டைகளையும் பாலிடிக்ஸ்களையும் நிகழ்த்தியாகிவிட்டது.
”இந்த வருடம் நமக்கு பெருசா எதோ கிடைக்கப்போகுது மக்கா” என பெயர் வெளியிடப்படாத அந்த புத்தகம் என் மனதில் சொல்லிக்கொண்டே இருந்தது. இந்த வருடம் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அது விதைத்திருந்தது. பெரும்பாலும் இது போன்ற மனக்கசப்பு (?!) ஏற்பட்டால் யாரும் தொடர்ந்து எழுத மாட்டார்கள். எனக்கு ஏனோ எழுத தோன்றியது. என்னுடைய உழைப்பு என்பதையும் தாண்டி இந்த வருடத்திற்கான “சிறந்த பத்திரிக்கையாளர் விருதை” அதுதான் வாங்கிக்கொடுத்திருக்கக்கூடும். பரிசு வாங்கும் அந்த தினத்தின் போது இந்த சம்பவத்தை சொல்லி அவருக்கு நன்றி சொல்ல என்னுடைய கேணத்தனமான மனம் முந்தியது. ஆனாலும் அது அவரை காயப்படுத்தும் என்ற எண்ணம் என்னைதடுத்துவிட்டது.இந்த கணம் வரை அந்த சம்பவத்தை நானோ அவரோ நினைவு படுத்தியதில்லை.
இப்படியாக துவங்கிய இந்த வருடம் இது போல மறக்கமுடியாத பல நிகழ்வுகளின் மூலம் சந்தோசத்தையும் அதிர்ச்சியையும் வாரி வாரி வழங்கி இருக்கிறது. சந்தோசம் என்றாலும் இழப்பு என்றாலும் அது பெரியதாகவே இருந்திருக்கிறது. மூன்றுவருட கனவான ஜிம்முக்கு போகும் பிரவேசம் ஜனவரி மாதம் துவங்கியது.அதுவே மேமாதம் தொப்பையாக சரிந்தது என சில சந்தோசங்கள் சங்கடமாகி இருக்கின்றன. திரும்ப அந்த தொப்பையை குறைக்க படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஆசை ஆசையாக சேர்ந்த வேலை ”இது நமக்கானது இல்லை” என தைரியமாக தூக்கி எறிந்த போது இருந்த சந்தோசம், HRரிடம் ஐடிகார்டை கொடுத்துவிட்டு வெளியே வந்து அந்த பெரிய கட்டிடத்தை திரும்பி பார்த்த போது காணாமல் போயிருந்தது. எழுத்து என்பதே போரிங்கான விசயம் என நினைத்திருந்த என்னை எழுத்தாளனாக ஒரு கூட்டத்தை ஏற்கச்செய்திருக்கிறது.
ஃபேஸ்புக் என்னுடைய நிறைய நேரத்தை குடித்திருப்பதாக உணர்கிறேன்.ஆனால் எனக்கே தெரியாமல் என்னை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் ஷார் மார்கெட் உட்பட நான் எடுத்த பல புதிய முயற்சிகள் நிறைய அனுபவத்தையும், துணிச்சலையும் கொடுத்திருக்கிறது.என்னுடைய தாகம் உள்ளூர் சினிமாவை தாண்டி உலக சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.
2013க்கான பொறுப்புகள் கூடி இருக்கிறது.அது பயத்தை கூட்டி இருக்கிறது. பல நாள் கனவான fastrack வாட்சும் பேக்கும் சாத்தியமான அதே நேரம் அதை தொலைத்துவிட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என்ற பரிதவிப்பு என எல்லாமே இந்த வருடம் எனக்கு கொடுத்த அனுபவங்கள். எல்லா அனுபவங்களுமே எனக்கு கற்றுகொடுத்த பாடம் இவைதான்.
”சந்தோசமோ, சங்கடமோ அது நம்மை பாதிக்காத வரை தான் முன்னேற்றமெல்லாம்”. புதிய கனவுகளையும், பொறுப்புகளையும் எதிர் நோக்கி 2012க்கு சொல்கிறேன் Good bye.
”என்ன பாஸ் கட்டுரைல எங்க வாத்தியார் பெயரே வரலை” என்று அந்த கண்டுபிடிப்பாள நண்பர் போன் செய்த போதுகூட எனக்கு சிரிப்பு தான் வந்தது. “பாஸூ அதுல என் பெயரே வரலை” என அவரிடம் சொல்லவில்லை. ஆனால் இதற்காக நான் சண்டை போடவில்லை. காரணம் இருந்தது. அந்த வாரம் எடிட்டிங்கில் இருந்தவர் என் மதிப்பிற்குரியவர். சொல்லப்போனால் என் நண்பர். அவர் வேண்டுமென்றே இதை செய்யக்கூடியவர் அல்லர்.எனக்கான வழிகாட்டியே அவர் தான்.
சொல்லப்போனால் இந்த விசயத்தில் என்னைவிட அதிகமாக கவலைப்பட்டவரும் அவர் தான்.எடிட்டருக்கு இது தெரிந்தால் என்ற கவலைக்கும் மேலே சில கவலைகள் இருந்திருக்கலாம்.இன்னொன்று சண்டை போடுவதால் எதுவும் மாறப்போவதில்லை. புத்தகம் முழுவதும் அச்சாகிவிட்டது. மறுநாள் கடைகளுக்கு போய்விடும்.எனக்கும் சண்டை போடுவது ரொம்ப போராக மாறிவிட்டிருந்தது. பள்ளி கல்லூரிகளிலேயே அதிக சண்டைகளையும் பாலிடிக்ஸ்களையும் நிகழ்த்தியாகிவிட்டது.
”இந்த வருடம் நமக்கு பெருசா எதோ கிடைக்கப்போகுது மக்கா” என பெயர் வெளியிடப்படாத அந்த புத்தகம் என் மனதில் சொல்லிக்கொண்டே இருந்தது. இந்த வருடம் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அது விதைத்திருந்தது. பெரும்பாலும் இது போன்ற மனக்கசப்பு (?!) ஏற்பட்டால் யாரும் தொடர்ந்து எழுத மாட்டார்கள். எனக்கு ஏனோ எழுத தோன்றியது. என்னுடைய உழைப்பு என்பதையும் தாண்டி இந்த வருடத்திற்கான “சிறந்த பத்திரிக்கையாளர் விருதை” அதுதான் வாங்கிக்கொடுத்திருக்கக்கூடும். பரிசு வாங்கும் அந்த தினத்தின் போது இந்த சம்பவத்தை சொல்லி அவருக்கு நன்றி சொல்ல என்னுடைய கேணத்தனமான மனம் முந்தியது. ஆனாலும் அது அவரை காயப்படுத்தும் என்ற எண்ணம் என்னைதடுத்துவிட்டது.இந்த கணம் வரை அந்த சம்பவத்தை நானோ அவரோ நினைவு படுத்தியதில்லை.
இப்படியாக துவங்கிய இந்த வருடம் இது போல மறக்கமுடியாத பல நிகழ்வுகளின் மூலம் சந்தோசத்தையும் அதிர்ச்சியையும் வாரி வாரி வழங்கி இருக்கிறது. சந்தோசம் என்றாலும் இழப்பு என்றாலும் அது பெரியதாகவே இருந்திருக்கிறது. மூன்றுவருட கனவான ஜிம்முக்கு போகும் பிரவேசம் ஜனவரி மாதம் துவங்கியது.அதுவே மேமாதம் தொப்பையாக சரிந்தது என சில சந்தோசங்கள் சங்கடமாகி இருக்கின்றன. திரும்ப அந்த தொப்பையை குறைக்க படாத பாடு பட வேண்டி இருந்தது.
ஆசை ஆசையாக சேர்ந்த வேலை ”இது நமக்கானது இல்லை” என தைரியமாக தூக்கி எறிந்த போது இருந்த சந்தோசம், HRரிடம் ஐடிகார்டை கொடுத்துவிட்டு வெளியே வந்து அந்த பெரிய கட்டிடத்தை திரும்பி பார்த்த போது காணாமல் போயிருந்தது. எழுத்து என்பதே போரிங்கான விசயம் என நினைத்திருந்த என்னை எழுத்தாளனாக ஒரு கூட்டத்தை ஏற்கச்செய்திருக்கிறது.
ஃபேஸ்புக் என்னுடைய நிறைய நேரத்தை குடித்திருப்பதாக உணர்கிறேன்.ஆனால் எனக்கே தெரியாமல் என்னை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வருடம் ஷார் மார்கெட் உட்பட நான் எடுத்த பல புதிய முயற்சிகள் நிறைய அனுபவத்தையும், துணிச்சலையும் கொடுத்திருக்கிறது.என்னுடைய தாகம் உள்ளூர் சினிமாவை தாண்டி உலக சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.
2013க்கான பொறுப்புகள் கூடி இருக்கிறது.அது பயத்தை கூட்டி இருக்கிறது. பல நாள் கனவான fastrack வாட்சும் பேக்கும் சாத்தியமான அதே நேரம் அதை தொலைத்துவிட்டு அது கிடைக்குமா கிடைக்காதா என்ற பரிதவிப்பு என எல்லாமே இந்த வருடம் எனக்கு கொடுத்த அனுபவங்கள். எல்லா அனுபவங்களுமே எனக்கு கற்றுகொடுத்த பாடம் இவைதான்.
”சந்தோசமோ, சங்கடமோ அது நம்மை பாதிக்காத வரை தான் முன்னேற்றமெல்லாம்”. புதிய கனவுகளையும், பொறுப்புகளையும் எதிர் நோக்கி 2012க்கு சொல்கிறேன் Good bye.