Saturday, December 1, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

நான்கு நண்பர்கள். எல்லோருமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சுவாரசியமான விளையாட்டு. ஹீரோ விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. எல்லாம் மறந்து விடுகிறது.

எல்லாம் என்றால்.. மறுநாள் ரிஷப்சன் என்பதும், அதற்கடுத்த நாள் கல்யாணம
 நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

் என்பதும். இடைபட்ட ஒராண்டு காலம் நடந்த சம்பவங்களெல்லாம் மறந்துவிடுகிறது!!

ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் லவ்ஸ்.. அது தான் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு.பொண்ணு வீட்டுல எதிர்ப்பு.. “எனக்கு எல்லாமே மறந்துடுச்சி” என்பதை சாக்காக வைத்து ஹீரோயினை கலட்டி விட்டுடுவார் என புத்திசாலித்தனமாக (?!) நாம் யோசித்தால், கதை வேறு வகையில் ட்ராவல் ஆகிறது. காரணம் ஹீரோவுக்கு தான் எல்லாம் மறந்துடுச்சே.. ஞாபகம் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்க வாய்ப்பிருக்கு.

ரைட்டு விடு. அவர் தலைல அடிபட்டுடுத்து.எல்லாம் மறந்துடுத்து. கூட விளையாடுனவங்கள சும்மா விடுவானுங்களா? அவர்களை ஹீரோவே பழி வாங்குகிறார். “என்னாச்சி. கிரிக்கெட் விளையாடுனமா? பால் மேல போச்சா.. நா கேட்ச் பிடிக்க போனனா? ஓ.. மிஸ் ஆயிடுச்சா.. நான் கீழ விழுந்துட்டேன்.. தலைல இங்க அடிபட்டுடுச்சி (பின்னந்தலையில் கை வைத்து அந்த இடத்தை காட்டுகிறார்) இங்க தான் Medulla oblongata வில அடிபட்டிருக்கும்(இது என்ன டாபர் ஆம்லா கேச தைலம் மாதிரி இருக்குன்னு பாக்கறீங்கலா.. அது அப்படி தான் கண்டுக்காதீங்க) அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்”

இந்த வசனத்தை அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரே மாதிரியான மாடுலேசனில் படம் முழுக்க பேசி தன்னோடு விளையாடியவர்களை பழி வாங்குகிறார். நம்மையும் (!).. அங்கன அடிபட்டா அப்படி தானாம். எல்லாம் மறந்து போயிடுமாம். ”இப்பிடி எல்லாத்தையும் மறந்துட்டு வந்து நிக்கிறியே.. எடுபட்ட சிறுக்கி” என்பதாக மற்ற மூன்று நண்பர்கள் தங்கள் தலையில் அடித்துக்கொண்டு, அவ்வப்போது செவுத்தில் முட்டிக்கொண்டு தங்கள் நண்பனின் ரிசப்சனையும், திருமணத்தையும் வெற்றிகரமாக நடத்தினார்களா என்பது தான் கதை.

மூணே நாள் கதையை படமாக சுவாரசியமாக சொல்ல வேண்டும், அது தான் சவால். சில வசனங்களையே வைத்துக்கொண்டு ஹீரோ தடுமாறுவார் என்று பார்த்தால் பின்னிப்பொடல் எடுக்கிறார். கூட இருக்கும் நண்பர்கள் அவரை தூக்கி சாப்பிடுகிறார்கள். கேமராமேன் வேறு, நம்மை கதையோடு கழுத்தை பிடித்து தறதறவென இழுத்துக்கொண்டு போகிறார். போதாதற்கு BGM.. Sound mixing ஆசாமிகள் நம்மை பாடாய் படுத்துகிறார்கள்..

இப்ப என்ன ஆச்சின்னு அதுக்குள்ளாற இண்டர்வல் என நாம் தலையை பிய்த்துக்கொள்வது தான் மிச்சம். அந்த மூன்று நண்பர்களும் குடுக்கிற சேட்டை இருக்கிறதே.. அப்பப்பா.. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.சந்தானத்தையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் போல..

“இது யாரு மச்சி மொக்க பீஸா கீது” என ஹீரோவோடு சேர்ந்து நாமும் ஹீரோயினை கலாய்த்தால், அவர் நேரில் செம்ம அழகாக கீறார். படத்துக்கு பாட்டே தேவையில்லை. ஆனாலும் ஒரு ப்ரோமோ சாங்க் போட்டுக்கறாங்கோ..பகவதி பெருமாள் அண்ணன் பட்டய கெளப்பீருக்காப்ல.(அதான் பக்ஸ்னு படத்துல வருவாரே. நேர்லயும் நாங்க அவரை அப்படி தான் கூப்புடுவோம்).இயக்குனர் பாலாஜி தரணிதரனின் இத்தகு சேவை நாட்டுக்கு தேவை. மத்தபடி படத்த ஒரு தடவைக்கு மேல பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தியேட்டரை அனுகவும்..(டிக்கட் உள்ளவரை மட்டுமே)

No comments: