Friday, October 26, 2012

ஃபேஸ்புக் ட்விட்டரில் உளறுபவர்கள் உஷார்



ஒருத்தர் பிரபலமாகிட்டார் என்பதாலேயே அவருக்கு ”எல்லாம் தெரியும்” என்ற அடிப்படையில் கேள்வி கேட்பதும்.. அவர் அந்த கேள்விக்கு ஞானசூன்யமாக பதில் சொல்வதும்.. அப்படி அவர் சொல்லும்போது “இது என்னய்யா முட்டாத்தனமா இருக்கு” என்று நாம் புலம்புவதும் கால
ம் காலமாக நடக்கிற ஒன்று தான்!!

கொஞ்சம் பிரபலமாகும் போதே நமக்கு கருத்து சொல்லும் ஆசை வந்துவிடுவது இயல்பு தான்..ஆரம்ப காலத்தில் சில நல்லகருத்துக்கள் சிலவற்றுக்கு அமோக ஆதரவு பெருகும்..(அதாவது அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருப்பது மட்டும் தான் இங்கே நல்லது.அவனுக்கு பிடிக்காத ஒன்று நல்லதாக இருக்கவே முடியாது.. உதாரணம் ரோஸ் ப்யூட்டிஃபுல்னு எல்லாரும் சொல்றாய்ங்க..அதுல அப்புடி என்ன இருக்குன்னு கேட்டுபாருங்களேன்..தெரியும்

பேஸ்புக் ட்விட்டரில் எதோ பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வதும் எழுதுவதும் அப்படிபட்டது தான்.. ஆரம்பத்தில் நமக்கு தெரிந்த எதையாவது சொல்லி வைப்போம் “பாஸு செமயா எழுதறீங்க” என எவனாவது சொல்லிவிட “பாரேன்.. நமக்குள்ளயும் எதோ இருக்கு”ன்னு அடுத்தடுத்து சொல்ல ஆரம்பிப்போம்..

ஒரு கட்டத்தில் எதாவது சொல்வது மட்டுமே நம் வேலையாக மாறிவிடும்.. அது நல்லதோ கெட்டதோ.. நல்லதுக்கு நல்லவிதமான ரெஸ்பான்ஸ் வருகிறதென்றால்.. கெட்டதற்கு அதற்கேற்ற கூலி கிடைக்கும்..அவ்வளவே..

உதாரணமாக நல்லவிதமாக எழுதும்போது போன் செய்து “எப்புடி பாஸ் உங்களால மட்டும் இப்படி முடியுது” என்பவர்கள்.. மோசமாக எதையாவது சொல்லும்போது சானியை கரைத்து வாயில் ஊற்றுவார்கள்.. சாதாரண சாணிகள் சில சமயம் மனித சாணியை மிக்ஸ்பண்ணிக்கொண்டு வரும்.. கருத்து சொல்லும் போது இதையெல்லாம் சகித்து தான் ஆகவேண்டும்..

ஃபேஸ்புக், ட்விட்டர் என்பது ரோட்டில் நின்று கத்துவது போல.. சில சமயம் ஊரேகூடி நம்மை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும்.. சில சமயம் ரோட்டில் சட்டை கிழிய கட்டிஉருள வேண்டி வரும்!!

சரி கருத்து சொல்வதென்று முடிவாகிவிட்டது.. அதற்கு லைக்கு கமெண்டு வாங்கியே ஆகவேண்டுமென்ற வெறியும் வந்தாகிவிட்டது.. நாம் ஒன்று தான் செய்யவேண்டும்.. கேணத்தனமாக எதையாவது எழுதிவிட்டோமா..உடனடியாக அங்கேயே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்., அதைவிட்டுவிட்டு அம்மாகிட்ட போய் கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பதெல்லாம் கேணத்தனம்..

சின்மயி விவகாரத்தில் நடந்திருப்பதும் இது தான்.. ரோட்டில் நின்று கத்தும் போதே மாலைக்கும், செருப்புக்கும் தயாராகிவிட வேண்டும்..தண்ணியை போட்டுவிட்டு எதையாவது உளருபவன் ரோட்டில் போகிற வருகிறவரிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் நிலை தான் நடந்தது.. ரோட்டில் திட்டுகிற எல்லோரையும் பழிக்கு பழி வாங்கத்துடித்தால் கடைசியில் “உன்னை யாரு தண்ணிய போட்டுகிட்டு கத்த சொன்னது என்ற கேள்வி தான் முதலில் வரும்”..வர வேண்டும்!!

#ஆனால் யார் தண்ணி போட்டுகிட்டு கத்துகிறார் என்பதை பொறுத்தே இங்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தான் இங்கே நிதர்சனம்

நாம் செய்யவேண்டிய வேலை இரண்டு

1) ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ பிரபலங்களை பார்த்தவுடன் நாய் கரண்டு கம்பத்தை பார்த்ததும் காலைதுக்குவதை போல ரெக்வஸ்ட் கொடுப்பதை நிறுத்தவேண்டும்.

2)அவர்கள் எதாவது உளறினால் ”யார் பெத்த புள்ளையோ..தானா பொலம்புது” என விட்டுவிடவேண்டும்..

பிரபலங்கள் செய்யவேண்டியது

ஆவுன்னா எதையாவது உளறிக்கொட்டியாக வேண்டிய அவசியத்தை தவிர்ப்பது!!

No comments: