Friday, December 14, 2012

தண்ணி பார்ட்டிகள்

 குடிகாரர்களுடனான என்னுடைய அனுபவம் படுசுவாரசியமானது. சவாலாதும் கூட. குடிகாரர்கள் பற்றி எதாவது சொல்ல வந்தாலே யாராவது படுவேகமாக என்பக்கத்தில் வந்து “தண்ணி அடிக்காதவன்லாம் நல்லவனும் இல்ல. தண்ணி அடிக்கறவனெல்லாம் கெட்டவனும் இல்லை” என போதையில் உளறத்துவங்கி விடுகிறார்கள்.

சமகாலத்தில் உட்கார்ந்து யோசிக்கும்போது “நாம மட்டும் தான் குடிக்காம இருக்கோமோ” என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு நண்பர்கள் எல்லோரும் படுவேகமாக குடிபழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ”ஆமா நீ மீடியால இருக்க.. அங்க அப்படி தான் இருப்பாங்க” என்பதாக எனக்கு பதிலளிக்குமுன்.. ”வெளியேயும் அப்படிதான் இருக்காங்க” என்பது தான் அதிர்ச்சியான நிலவரம்.
”அப்புறம் இன்னிக்கி நைட்டு ட்ரீட்டா” என்பதாக யாராவது வாயைத்திறந்தால் அதில் பீரும் விஸ்கியும் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. வள்ளுவர் சமகாலத்தில் வாழ்ந்திருந்தால் கூட “பீரின்றி அமையாது ட்ரீட்” என்றிருப்பார்.


 நான் தண்ணி அடிக்காததால் நல்லவன் என்றோ, யோக்கியன் என்றோ பதிவு செய்யும் எண்ணம் எனக்கிங்கில்லை. ஆனால் தண்ணி பார்ட்டிகளுடனான என்னுடைய அனுபவமெல்லாம் சலிப்பூட்டுபவையாகவே இருந்திருக்கின்றன. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கின்றன.
அப்போது திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் 12வது படித்துக்கொண்டிருந்தேன். பத்தாம் தேதிக்குள் ஹாஸ்டல் மெஸ்ஸூக்கு பணம் கட்டியாக வேண்டும்.  இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.இந்த முறை மெஸ்பில் 900. என்னிடம் 100ரூ குறைந்தது.10ஆம் தேதி வியாழக்கிழமை. கட்டவில்லையென்றால் 11ம் தேதி மாலை பாரபட்சமில்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் “பணத்தை கட்டிவிட்டு ஹாஸ்டல்ல தங்கிக்கலாம்” என்பது தான் அவர்கள் சித்தாந்தம்.

“டேய் நீ கொஞ்சம் பொறுமையா இருடா. நான் ஞாயித்திகிழமை திருச்சிக்கு வர்ரேன். பணம் கட்டிடலாம். வார்டன்கிட்ட சொல்லு. ஒண்ணும் பண்ண மாட்டாய்ங்க.” என்பதாக என் அப்பா போனில்.
எவன்கிட்டயாவது 100ரூ வாங்கி கட்டிடலாம் என்பதாக யோசித்து நண்பர்களிடம் கேட்டால் “போடா என்கிட்டயே இல்லை” என்றார்கள் ஆளாளுக்கு. இவ்வளவு பெரிய களேபரமும் 10ம் தேதி மாலை ஸ்டெடி ஹாலில். ராத்திரி சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு 11 மணி ஆகி இருக்கும். 1மணிக்கு என் பக்கத்தில் ஒருவன் வந்து “நவுந்து படுடா” என்று தொல்லை குடுத்தான். அவன் படுத்த போது எதோ விசித்திரமான வாடை. காரணம் தண்ணி. (குவாட்டர் என்பதாக அறிக)

 நமக்கு 100 ரூ குடுக்க கைல இவனுங்களுக்கு பணம் இல்லை 1000ரூவாய்க்கு தண்ணி. சரி விடு பொழைச்சி போறாய்ங்க என்றால். இதில் இன்னொரு சுவாரசியமான விசயம் அவங்க கட்ட வேண்டிய மெஸ் பணத்தில் வாங்கிய சரக்கு தான் அது. சுமார்  5 பேர். அதில் 3 பேருக்கு முன்பின் தண்ணீர் பருகிய அனுபவமில்லை. அதனால் மூர்ந்து பார்த்து வாய்வழியே மூச்சா போயிருக்கிறார்கள். அந்த வாடையை காலையில் ஸ்மெல் செய்த வார்டன் அவர்களை கூப்பிட்டு பாராட்டுவிழா (?!) நடத்தி ஹாஸ்டலை விட்டு வழியனுப்பி வைத்ததோடு அந்த கதையை முடித்துக்கொள்வோம்.
அடுத்து கல்லூரி. விடுதியில் கூட தங்கி இருந்த மாணவனுக்கு உதவித்தொகையாக 5000 ரூபாய் வந்தது. என்னையும் கூட்டிக்கொண்டு நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற(!?) பார் என்று அழைத்து சென்றான். “எனக்கு உடம்பு ரொம்ப ஒல்லியா இருக்கா. அதான். பீர் சாப்ட்டா உடம்பு ஏறிடும். உனக்கு தெரியாதா?” என்பதாக ரெண்டு கட்டிங் உள்ளே தள்ளினான். என்னுடைய வேலை அவனுக்கு வைக்கும் சைட் டிஷ்ஷை காலி செய்வது (அம்புட்டு நல்லவனாடா நீ)

”சார் சைட் டிஷ் லிமிட் தான்.. சார்” என்று பார்காரன் சொல்லும்வரை என் சேவை தொடர்ந்தது. அதனால் அவ்வப்போது அவனோடு சைட்டிஸ்ஸுக்காக செல்வேன்.
மூன்றாவது திருச்சி. ரூம் மேட் ரொம்ப தங்கமான மனுசன். சனிக்கிழமை இரவு ஆனால் நிறைய சைட்டிஷோடு தண்ணி வாங்கியாருவார். அவர் ரெண்டு லார்ஞ் உள்ளே தள்ளி இருக்கும் போது பாதி சைட்டிஸ் காலியாகி இருக்கும். ரூமில் நாங்க ரெண்டு பேர் தான். ரூமில் ஒரே ஒரு கட்டில் தான் இருக்கும். மற்ற நாட்களில் யாரும் அதை பயன்படுத்த மாட்டாமல் நிமிர்த்தி வைத்திருப்போம். சனிக்கிழமை மட்டும் அதற்கு வேலை வந்துவிடும். நான் அதன் மேலே படுத்துக்கொள்வேன்.

காரணம் ரூம் மேட். அவர் தண்ணி அடித்து முடித்தவுடன் முழு போதையில் தரையில் கவிழ்ந்தால் சூரியன் போல 360 டிகிரியில் சுற்றி வருவார். நான் கீழே படுத்திருந்தேன். செத்தேன். அவர் உருளும் போது என் மூக்கில் காலைத்தூக்கி போடுவார். அந்த முரட்டுதனமான காலை சில நிமிடங்கள் செலவு செய்து தூக்க வேண்டி வரும். அதனால் தூக்கம் ஸ்பாயில் ஆகிவிடும் என்பதற்காக தான் கட்டில் ஏற்பாடு.

ஆனால் ரொம்ப தெளிவாக இருக்கிறேன். தண்ணி அடிக்ககூடாது என்பதில் மட்டுமல்ல. எக்காரணத்தை முன்னிட்டும் இத்தகைய நண்பர்கள் தண்ணி அடிக்கும்போது “மச்சி வேணாம்டா வீணா போய்டாதீங்க” என சொல்லி அவர்கள் மூடை ஸ்பாயில் பண்ணக்கூடாது என்பதில்.
காரணம் நமக்கு தொழில் சைட்டிஷ், இவர்களை வேடிக்கை பார்த்தல்

No comments: