Sunday, September 23, 2012

சாட்டை – சேட்டை!!



ஒரு அரசுப்பள்ளி.. ”நம்ம ஸ்கூல்ல எதாவது மாற்றம் கொண்டு வரணும்” என்று உணர்ச்சிவசப்பட்டு நரம்பு புடைக்க பேசுகிற தலைமை ஆசிரியர்.அந்த மீட்டிங்கில் அவ்வப்போது அவரை மதிக்காமல் கமெண்ட் கொடுக்கிற உதவித்தலைமை ஆசிரியர்.

அந்த பள்ளிக்கு புதிதாக பிசிக்ஸ் வாத்தியாராக வேலைக்கு சேரும் சமுத்திரக்கனி முதல் முதலில் அந்த மீட்டிங்கேடு தன் எண்ட்ரியை துவங்குகிறார். எல்லா வாத்தியார்களும் “இந்த பசங்கள வச்சி மேய்க்க முடியாது” என அந்த மீட்டிங்கில் புலம்ப.. சமுத்திரக்கனியோ ஃபேஸ்புக் புரட்சியாளர்களைப்போல பிரச்சினையின் பரிமாணம் எதுவும் தெரியாமல் புரட்சிபேசுகிறார்.

எல்லோரும் அவரை எகத்தாளமாக பார்க்க..அவர் தான் விரும்பு மாற்றத்தை அந்த பள்ளியில் எப்படி செயல்படுத்துகிறார் என்பது தான் கதை. நடுநடுவே பசங்களின் காமெடியோடு உதவித்தலைமை ஆசிரியரின் காமெடியும் சேர்ந்துகொள்ள படம் இடைவேளை வரை களைகட்டுகிறது.கசப்பு மருந்தோடு இனிப்பை சேர்ந்து பறிமாறும் இயக்குனரின் இந்த முயற்சி இடைவேளை வரை நன்றாக வேளை செய்திருக்கிறது.சமுத்திரகனியின் புரட்சிவசனங்கள், மற்ற ஆசிரியர்களின் பாலிடிக்ஸை அவர் எதிர்கொள்ளும் விதம் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என படம் முழுக்கவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

“நீங்கள் விரும்பும் மாற்றம் முதலில் உங்களிலிருந்தே துவங்க வேண்டும்” என்ற காந்தியின் வசனம் தான் படத்தின் ஒன்லைன்.
நேற்று தேவி தேட்டரில் ஆள் குறைவாக இருக்கும் போது “தெரியாத்தனமா வந்துட்டோமோ” என்ற எண்ணமே ஆரம்பத்தில் ஏற்பட்டது.படம் இடைவேளை வரும்போது நம்ம ஜட்ஜ்மெண்டு ரொம்ப வீக்கு. படத்த என்ன அருமையா எடுத்துருக்காய்ங்க என்று தோன்றியது.

இண்ட்ரவல் வரை கதை தான் ஹீரோவாக இருந்தது.ஆனால் இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் ஹீரோதன் புரட்சிகரமான கருத்துக்களால் ஹீரோயிசம் பண்ணுகிறார்.உதாரணமாக கலை விளையாட்டு போட்டிகளில் 22 வருடமாக எந்த சாதனையும் செய்திராத இந்த அரசுப்பள்ளி திடீரென தனியார் பள்ளிகளோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுகிறது.

கிளைமேக்ஸில் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் சாதனை புரிவதெல்லாம் ரொம்ப ஓவர்.க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க தியேட்டரில் எல்லோரும் சமுத்திரக்கனியின் பஞ்ச் பொறுக்க முடியாமல் உச் கொட்டுவதை வைத்தே நம்மாட்களின் பொறுமை ரொம்ப சோதிக்கப்படுவது உறுதி செய்யமுடிகிறது.

ஹீரோ போல வரும் பையன் நல்லா நடிச்சிருக்கான். ஒவ்வொருத்தர் ஸ்கூல்லயும் இதுபோல தடியன் யாராவது இருந்திருப்பார்கள்.ஹீரோயின் குடும்பப்பாங்கான ஃபிகராக இருப்பதால் நாமும் அவ்வப்போது ஜொல்லுகிறோம்.ஆனால் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான காதல் சிரிப்பை வரவழைக்கிறது. அந்த காதல் மெச்சூர்டான தளத்தை நோக்கி நகர்வது ஆர்ட்டிட்ஃபீசியலாக இருக்கிறதே தவிர கதையோடு ஒட்டவில்லை.அரதப்பழசான இது போன்ற விக்ரமன் பாணியிலான காதல்கள் தியேட்டரில் எல்லோரையும் கடுப்பேற்றுகின்றன.

எல்லோரும் அளவான நடிப்பை கொடுத்திருப்பது படத்தின் பிளஸ்.சமுத்திரக்கனி மட்டும் சீரியஸாக ஃபேஸை வைத்துக்கொண்டு காமெடி பண்ணுகிறார்.

படம் சொல்லவிரும்பும் சேதி “ மாணவர்களை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆசிரியர்களை தான் மாற்ற வேண்டும்” என்று படம் போதிப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இது அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்தே பொருந்தும். அரசுப்பள்ளி ஆசிரியர்களில் சிலர் ஒருவகை சைக்கோக்களென்றால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேறு நவீன சைக்கோ வகையை சேர்ந்தவர்கள் என்பதை சொல்ல வேறு வகை கதையம்சமுள்ள ஸ்க்ரிப்ட் தேவைப்படுகிறது. அதற்கான ப்ளாட்ஃபார்ம் தற்போது அதிகரித்துள்ளதை இயக்குனர்கள் உணர வேண்டும்.

படத்தின் கேமராவும், இசையும் வலு சேர்த்திருக்கின்றன என்றாலும், படத்தின் பின்னணி இசை, சீரியல்களில் வரும் இசையை போல வழவழ கொழகொழவாக கடுப்பேற்றுகிறது. மற்றபடி படத்தை ஒருமுறை பார்க்கலாம். காமெடி அம்சங்களுக்காக வேண்டுமானால் படம் கிராமங்களில் ஓடலாமே தவிர படத்தின் உட்கரு எல்லோரையும் சேருமா என்பது சந்தேகமே.

No comments: