Monday, June 4, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 5


யார் இந்த அல்டாப் ஆறுமுகங்கள்.அதை தெரிந்துகொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அது ஒரு காலம்.அப்பொழுது அப்பாவியாக இவர்கள் ஃபேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருப்பார்கள். ஃபேஸ்புக் என்றால் என்ன? ஸ்டேட்டஸ் என்றால் என்ன? ஏன் லைக் போடுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவே தெரியாது.
திக்குத்தெரியாத காட்டில் இலக்கின்றி பயணித்திருப்பார்கள்.இன்று இவர்கள் குட் நைட்என்று ஸ்டேட்டஸ் தட்டினால் கூட அதை இருபது கொசுக்கள் லைக்கும்.



ஆரம்பத்தில் இவர்களை உற்று பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும். எல்லா ஸ்டேட்டஸுக்கும் லைக்கை போடுவார்கள். “யார்ரா அது நம்ம ஸ்டேட்டஸையும் மதிச்சி லைக் போடறதுஎன எல்லோரும் இவர்களை பார்த்து திரும்பி, உலகம் இவர்களது ஸ்டேட்டஸை லைக்கும். பிறகு இவர்கள் கமெண்டுவார்கள், அவர்கள் பதிலுக்கு கமெண்டுவார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுடைய ஸ்டேட்டஸுகள் பெரும்பாலோரால் கவனிக்கப்படும்போது நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் அதே ஃபார்முலாவை கடைபிடிப்பார்கள். “இவனை எல்லாம் எதுக்கு மதிக்கணும் என எவனையும் கண்டுகாமல் திரிவார்கள்கேட்டால் பிஸி.. “ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாக,அமெரிக்கால ஒபாமா கூப்டாக என உளருவார்கள்”.

இவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் ஆக்டிவ் யூசர்கள். பெரும்பாலும் அல்டாப்புகளை நண்பர்கள் லிஸ்டில் வைத்துக்கொள்வதால் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக வெளியே தெரியுமே தவிர ஒரு புண்ணியமும் இல்லை. சாதா ஆசாமிகள் தான் நமக்கு லைக்கும் கமெண்டும் போடுவார்கள் என்பதால் இத்தகையவர்களை டார்கெட்டினாலே போதும் நாமும் பிரபலமாகி விடலாம்.

ஃபேஸ்புக்கில் பிரபலமாவது ரொம்ப சிம்பிள்.24 மணி நேர இணைய தொடர்பு. எல்லோருடைய ஸ்டேட்டஸுக்கும் லைக்,கமெண்ட், நமக்கு வரும் எல்லா நண்பர் அழைப்பையும் அக்ஸெப்டுதல், கொஞ்சம் காமெடி,கலாய்ப்புகள், குறிப்பாக எந்த கட்சியும் சாராமல் தனிப்பதிவுகளாக ஸ்டேட்டஸ் போட்டாலே போதும், அடுத்த ஆறே மாதத்தில் ஃபேஸ்புக் உங்களைத்திரும்பி பார்க்கும்.

ஆனால் பிரபலமான பின் ஒரு விலை கொடுத்தாக வேண்டும்.அது ரஜினியானாலும் சரி, நயன்தாராவானாலும் சரி,.. அது என்ன விலை. 

1) நீங்கள் வழக்கம் போல் எல்லோருடைய கமெண்டுக்கும் லைக், கமெண்ட் போடாவிடில் “அவனுக்கு தலைக்கணம் வந்துடிச்சி மச்சி”””’” என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

2) எப்பொழுதும் யாராவது செட்டில் வந்து தொல்லை கொடுப்பார்கள்.

3)கண்ட போட்டோக்களிலும் உங்களை டேக் செய்து வேடிக்கை பார்ப்பார்கள்

4)அவர்களுக்கு பிடித்த குருப்பில் உங்களை சேர்த்து விட்டுவிடுவார்கள், உங்கள் அனுமதியில்லாமலே. ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால் நண்பர்களின் எண்ணிக்கையை விட நீங்கள் இணைந்திருக்கும் குரூப்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

5) நீங்கள் உங்களையும் அறியாமல் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி இருப்பீர்கள்

6)யார் யாரோ போடும் ஸ்டேட்டஸின் கீழ் இவர்கள் போடும் சண்டையில் உங்களை அழைத்து மத்தியஸ்தம் கூப்பிடுவார்கள்

7)எல்லா ஸ்டேட்டஸும் எல்லோரும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது.உங்கள் ஸ்டேட்டஸில் யாருக்காவது உடன்பாடு இல்லையென்றால் “என்ன பாஸ்இப்படி பண்ணிட்டீங்கஎன ஏதோ கொலைக்குத்தம் செய்தது போல விசாரிப்பார்கள்.

சரி நன்மைன்னு எதுவுமே சொல்ல மாட்டீங்களான்னு கேக்கறது தெரியுது?

ஏன் இல்லை.இருக்கிறதே.

பவர்ஸ்டார் – கோபிநாத் சண்டையில் எல்லோரும் யார் பக்கம் நின்றார்கள்.அதே.. உங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமே இருக்கும். எனவே கவலை வேண்டாம்.உங்களை பகைத்துகொண்டு எவனும் உயிரோடு ஊர் போய்விட முடியாது.

என்னைகேட்டால் ஃபேஸ்புக்கைப்போல் ஒரு சிறந்த எண்டர்டெயின் மெண்ட் இருக்கவே முடியாது.தினமும் எதாவதொரு பிரச்சினையை யாராவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். தினந்தோறும் யார் செய்யும் தவறுக்காவது தூக்குதண்டனை வழங்கப்படும். தீர்ப்பு எழுதப்படும். எதாவதொரு கட்சி ஆட்சியமைக்கும். ஒரு கட்சி மோசம் என முத்திரை குத்தப்படும்.யாருடைய டவுசராவது அவுக்கப்படும்.

நிறைய பேருக்கான அங்கீகாரத்தை ஃபேஸ்புக் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். இருக்கட்டும்..!!


(முகத்திரை விலகும்)

2 comments:

ilangovan balakirshnan said...

hahahahaa....nice one swara...:)

vasanthakumar said...

nice review