Thursday, July 28, 2011

சந்திர மண்டலத்தில் சரவணகுமார்

எனக்கு மூணாப்பு படிக்கும் போதுலேர்ந்தே சந்திரமண்டலம் மேல் அளவு கடந்த ஆர்வம்..ஏன்..வெறி..பாட்டி சுட்ட கதை கேட்ட போதிலிருந்தே என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் அங்கே நாய் இருக்குமே..அது என்னை துரத்துமே..அதை பற்றி எந்த கவலையும் இல்லை.என்னிடம் பிஸ்டல் இருக்கு..
இந்தியன் ஒருவன் சந்திரமண்டலம் செல்வது இது தான் முதல் முறை.அதுவும் அயோக்கியபுரத்தை சேர்ந்தவன் செல்வது வரலாற்றிலேயே முதல் முறை என இந்திய மீடியாக்கள் கொக்கரித்தன.

போதாததுக்கு எங்க அம்மா வேற.பக்கத்து வீட்டு பத்மாவிடம் பலதும் சொல்லி இருந்தார்.அவர் என்கிட்டே என்னனவோ கேட்டார்.. “எய்யா உனக்கு சம்பளம் எவ்வளவு குடுப்பாங்க? உனக்கு எல்லாமே பிரியாமே..அப்படியா? அப்ப வாங்கற சம்பளத்த எல்லாம் பாங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்ப தானே..சொர்க்க வாழ்க்கையா உனக்கு” என்றார்..

நாளை காலை நாசாவில் வண்டி ஏறணும்.. வேற என்ன ராகேட் தான்..எனக்கு எங்க அப்பா சைக்கிள் கூட வாங்கி தந்தது இல்ல..நான் சொந்தமாக சைக்கிள் கூட வைத்திருக்க வில்லை.ஆனால் இன்று ராக்கெட்டில் செல்ல போகிறேன் என்றால் அது சாதாரண சாதனை இல்லை..என எதோ ஒரு நாளிதழில் படித்ததாக நினைவு..

இந்த செய்தி எனக்கே இப்பொழுது தான் தெரியும்..இந்த பேப்பர் காரங்களே இப்படி தான்..அள்ளி விடுவானுங்க..
இதை படித்த எங்க அப்பாவே என்கிட்டே வந்து கேட்டார்..”எண்டா நம்ம தெருவுலே முதல் முதல்ல சைக்கிள் வாங்குனது நீ தான்டா.வாங்கி தந்தது யார் தெரியுமா?  சாட்சாத் நானே தான்..மூனுக்கு போற திமுருல ஆடாத டா”.என்று கடுப்பேத்தினார்..

நான் அவர் பேச்ச என்னிக்குமே கேட்டது இல்ல.அவர் பேச்ச கேட்டுருந்தேன்னா இந்நேரம் நம்ம  ஊர் ரயில்வேல எனக்கு கணக்கு எழுதற வேல கிடைச்சிருக்கும்.
அய்யயோ போன் அடிச்சத கவனிக்கவே இல்லையே. அச்சச்சோ எட்டு மிச்சுடு கால். வேற யாரா இருக்கும்.சமந்தா தான்..

சமந்தா ரொம்ப சமத்து.எனக்கு ஏழாவது படிக்கும் போதுலேர்ந்து அவள தெரியும்.அப்பலாம் அவ அவ்வளவு அழகு இல்ல.நாங்க ரெண்டு பெரும் காலேஜ் ஜாயின் பண்ணும் போது அவ செகப்பு கலர் சூடில இருந்த அழகு.அவ கல்யாணத்தன்னிக்கி கூட இல்லன்னா பாத்துக்கோங்க.
எஸ்..அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.ஏன் குழந்த கூட இருக்கு.இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. அதெல்லாம் வேற கதை.(அதை இங்கே பிரசுரிக்க இயலாது.ஏனெனில் அன்று பார்க்கில் நடந்த பலதும் இங்கே பகிர வேண்டி வரும்.வேணாமே ப்ளீஸ்..)

இன்னும் சிலமணி நேரங்களில் flight புறப்பட போகிறது.என் மொபைலை ஆப் பண்ணினேன்.இனி இந்தியாவுக்கு எப்போது வருவேன் என தெரியாது. ஏன் வராமலே கூட போகலாம்.

எனக்கு ஏனோ அழுகையா வந்துது. நான் முதல் முதல்ல ஸ்கூல்க்கு போகும் போது கூட இவ்வளவு அழுதது இல்ல.”சார் வாட் ஹப்ப்ஸ்…ஹவ் யு  எனி ப்ரோப்லேம்.” என்றார் ஏர் ஹோஸ்டஸ்.. பரவால்ல உண்மைலேயே அவங்க அழகு தான்.
கட்டுனா இது மாறி புள்ளயா கட்டனும்..சீ.. என்னனமோ தோணுது.
நான் போய் workout  பண்ணனும்.பாடி செக் பண்ணனும்.
நரையா பேர் வாழ்த்துக்கள் சொன்னார்கள்.சந்தோசமா தான் இருக்கு.நான் இப்படி வருவேன்னு நினைக்க கூட இல்ல. நான் சமந்தாவ பிரிஞ்சதும் எவ்வளவோ நடந்துடுச்சி.
ச்சி அத சொல்ல மாட்டேன். யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்னு நான் அவளுக்கு சத்தியம்  பண்ணிருக்கேன்.

flight தரை இறங்கி விட்டது.இன்னும் சில மணி நேரங்களில் ராக்கெட்டில் போக போகிறேன்.அதுக்குள்ள trainer கூப்டு மொக்க போடுவாரு..அவருக்கு தான்  நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னை தேர்ந்தெடுத்ததற்காக..
சரி நான் உடை மாற்ற புறப்படுகிறேன்..உடை மாற்றும் அறையில் இருக்கும் ஒவ்வொருத்தவனும் ஒவ்வொரு மூட்ல இருப்பானுங்க..அவனுங்க குடுக்கற சேட்ட தாங்க முடியாது..

அமெரிக்க அதிபர் எங்களிடம் பேச வேண்டுமாம்..என்ன பேசிவிட போகிறார்.”இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது.அமெரிக்கனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்”..அவர் வாயை திறந்தாலே அமெரிக்க புகழ் தான் பாடுவார்.

இன்னும் சில நிமிடங்களில் ராக்கெட் புறப்பட போகிறது. நான் மேலே போக போகிறேன்.”வழியில் தேவர்கள், பிரம்மா விஷ்ணு எல்லாம் இருப்பாங்க..கன்னத்துல போட்டுக்கோடா.ஜென்ம சாபல்யம் அடைஞ்சுடலாம்.”..பல்லு போன என் பாட்டியின் பரிந்துரை தான் இது.. இவனுங்க எப்ப தான் திருந்தா போறானுங்களோ!!..

ராக்கெட் புறப்பட்டு விட்டது..கண் மூடி திறப்பதற்குள் பூமியை விட்டு பல மையில் தொலைவு கடந்து விட்டது. மிக நீண்ட உயரத்தை நான் அடைந்து விட்டேன். ஐ மீன் ராகேட் ரொம்ப தூரம் மேல வந்துடுச்சி..

உடம்பெல்லாம் ஒரே அசதி..ஆனாலும் தூங்க போவது இல்லை..வெளியில் வேடிக்கை பார்க்க வேண்டும்..சீன பெருஞ்சுவர் தெரியுமாம். இந்தியா தெரியும்..அதுல இமய மலை தெரியும்..அதன்மேல் தாடி வைத்த சாமியார் தெரியுவார்
என்றெல்லாம் அள்ளி விட்டானுங்க..ஒன்னும் தெரியல..ஒரு மண்ணும்..
எனக்கு ஒரு தம் பத்த வைக்கலாம் போல இருக்கு.ஆனா கிடைக்காதே..பசித்தாலும் சாப்பிட எதுவும் கிடைக்காது.ஒரு மாத்திரை தான்..
“உடம்பு வீனா போய்ட போகுது பா..”அம்மா சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது..எப்பொழுது தூங்கினேன் என எனக்கே தெரிய வில்லை..

நின்னுக்கிட்டே தான் தூங்கினேன்.சொல்ல போனால் பறந்துகிட்டே தூங்குனேன்.சூப்பர்மென்  மாதிரி.
சந்திரனை அடைந்து விட்டிருந்தோம்..
 
(சில நாட்கள் கழித்து)





நான் சந்திரன் வந்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. எனக்கு சந்திரன் பிடிக்க வில்லை..இங்கே தண்ணீர் இருந்தாலும் மனிதன் வாழ முடியாது. ஏனெனில் ஒரு டீகடை கூட இல்லை.ஒரு பஜ்ஜி போண்டாவுக்கு கூட வழி இல்லை.

டீக்கடையும்,பஜ்ஜி போண்டாவும் இல்லாத இடத்தில் சைட் மட்டும் அடிக்கவா முடியும்..
இங்கே ஒரு வேளை தண்ணீர் இருந்தாலும் அதை மனிதன் வேறு யாருக்கும் தர மாட்டான் .. கர்நாடகா  மாதிரி பிரச்சன பண்ணுவான்.


ஒருவேளை சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த சந்திரனுமே அமெரிக்காவுக்கு தான் சொந்தம் என அமெரிக்கன் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுவான். பத்தாதுக்கு சீனா காரனும் போட்டிக்கு வந்துவிடுவான்.
“நான் இருபது வருடம் முன்பே கூறினேன் சந்திரனில் தண்ணி இருக்கு,,மனுஷன் வாழலாம் னு” என்று நம்ம ஊர்ல ஏதாவது ஜோசியக்காரன் மீடியா கவனம் ஈர்க்க புளுகுவான்..
சொல்ல போனால் சந்திரன் வந்தது வேஸ்ட்..இதனால் யாருக்கும் நயாபைசா புரியோஜனம் இல்ல..இன்னமும் இரவு உணவு உண்ணாமல் உலகம் முழுவதும் எத்தனையோ சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த பணத்தை செலவிட எந்த அமெரிக்கனுக்கும் மனம் வராது.

No comments: