Sunday, July 3, 2011

ரஜினியை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை..

முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.நான் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகனும் அல்ல.படமே அதிகம் பார்க்க மாட்டேன் கார்பரேட் உலகுக்குள் வந்த பிறகு தான் அதிக படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.என்னுடைய ஒரே நோக்கம் அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டி காட்டுபவர்கள் தங்கள் முதுகுக்கு சோப்பு காட்ட வேண்டும் என்பதே.

நான் நீண்ட மௌனத்திற்கு பிறகு வாய் திறக்கிறேன்.வேறு வழி எனக்கு தெரியவில்லை.அதிஷாவின் "ரஜினி என்னும் அசுரன்" பதிவிற்கு சிலர் அடித்த கமெண்ட்கள் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி தான் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சிகரெட் அறிமுக படுத்தி வைத்ததை போல் என் நண்பர்கள் பேசும் போதெல்லாம் நான் சென்ட்ரல் ஜெயிலுக்கு போய் விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் ஏற்படுகிறது.

அவர்களுக்கெல்லாம் என் பதில் ஒன்று தான் "சமீப காலமாக ரஜினி எந்த திரைப்படத்திலும் சிகரெட் குடிப்பதில்லை.ஆனால் கடந்த  5 வருடங்களில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை முன்னை காட்டிலும் உயர்ந்து விட்டதாகவே சர்வேக்கள் சொல்கின்றன".

சரி அதை விடுங்கள்..ரஜினி ஏன் அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டுகிறார்.. தைரியம் இருந்தால் வர வேண்டியது தானே .. என்கிறார்கள்..நீங்கள் உங்கள் ஊர் கவுன்சிலர் எலெக்சன்னுக்காவது நின்னுருகீன்களா? இல்லைல.. காரணம் பயம்..தோத்து போய்டுவோமோ என்கிற பயம்.அது ரஜினிக்கும் உண்டு..

ரஜினி கர்நாடகாவை எதிர்த்து பேசி பிறகு எதற்காக உடனே மாற்றி பேச வேண்டும்? இதற்கு பதில் ஒன்று தான்..ரஜினிக்கு தன் படம் ஓடாததை பற்றி எந்த கவலையும் இல்லை..ஏன் என்றால் அவர் சம்பளம் அவருக்கு வந்து விடும்.. என்ன கொஞ்சம் அதில் குறையலாம் அதை அவரின் அடுத்த படம் சரி கட்டி விடும்..

ஆனால் அவருடைய படத்தை நம்பி வயிற்றை கழுவும் கூட்டம் இங்கே அதிகம்.அவர்களுக்காக வாவது தன்னுடைய ஈகோ வை இழக்க வேண்டும் என்பதே அவர் நிலை பாடு..

இவ்வளவு பேசறீங்களே..என்றாவது ஒரு நாள் "அநியாய கொள்ளை அடிக்கும் பள்ளி கூடத்துக்கு எதிராக சத்தம் போட்டு இருக்கிறீர்களா? உங்கள் கல்லூரியில் வகுப்புக்கு சரியான நேரத்திற்கு வராத ஆசிரியரை மடக்கி கேள்வி கேட்டிருக்கிறீர்களா? உங்கள் ஊர் கவுன்சிலரிடம் எதுக்கு ரோடு போடலனு கேட்டு இருக்கிறீர்களா?" இவை எல்லா வற்றுக்கும் உங்கள் பதில் "இல்லை" என்பதாகவே இருக்கும்..

காரணம் பள்ளி கூடம் கொள்ளை அடிப்பதை தட்டி கேட்டால் பையன் படிப்பு பாதிக்க படும்.கல்லூரி ஆசிரியரை மடக்கி கேட்டால் பிராக்டிகள் மார்க்கில் வெடி வைத்து விடுவார்கள். கவுன்சிலரிடம் கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும்..

என்ன சார் "உங்களுக்கு வந்தா ரத்தம்! அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?"

6 comments:

Anonymous said...

what said above is exactly true.. all those stupids who commented bad about Rajini are useless stupids.. i never mine those stupids gossip

Raguvaran said...

unnakku mattum enga da kedaikkuthu intha mathri matter ellam

vaitheetheboss said...

பத்திரிக்கையாளர் னா அப்படி தான் பாஸ்..

Anonymous said...

Thanks for being neutral critic. People forget that Mr. Rajini is the cause for so many good things happened across public. He is really a simple and humble man...

Anonymous said...

நடு நிலையோடு கருத்து சொன்னதற்கு நன்றி.........

Anonymous said...

Hi Vaithee...Nice post & accept some points. As manivannan said in mudalvan,People looking for good leader. Behind me, no one is here to support whereas rajini have huge fans which can be used to bring so many changes. Best example is anna hazare. Did anyone think will anna hazare get such public response. Thats power of public.