Saturday, December 27, 2014

PK திரைப்படம் விமர்சனம்

இன்று தான் PK திரைப்படம் பார்த்தேன். மதத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை என்பது தான் ஒன்லைன். அதை எவ்வளவு நேர்த்தியான கதை மூலம் சொல்லமுடியுமோ அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

வேற்றுகிரகத்திலிருந்து வருகிறார் அமீர்கான். அவருடைய கிரகத்தை தொடர்புகொள்ள ஒரு செயின் மாதிரி வைத்திருக்கிறார். அதை எவனோ திருடிவிடுகிறான். அதை எப்படி தேடிகண்டுபிடிப்பதென தெரியாமல் போலீஸை அணுகுகிறார்.

"யோவ் இவ்ளோ பெரிய சிட்டில யாரன்னு போய் தேடுவேன்.இதெல்லாம் கடவுள் தான் கண்டுபுடிச்சி தர முடியும்." என்கிறார். எல்லோரும் இதையே சொல்கிறார்கள். எனவே கடவுளை தேடி பயணத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு மதத்தினர் கோவிலுக்கும் செல்கிறார். சாமியாரிடம் செல்கிறார்.. அவர்களின் அபத்தமான பதில்களில் திருப்தி பெறாமல், எதிர்கேள்வி கேட்கிறார்..

உண்மையில் கடவுளை தேடி செல்லும் எல்லோருக்கும் இது போன்ற அபத்தமான பதில்களே வரும். கடைசியில் மொக்கையாக அன்பே கடவுள், நாம தான் கடவுள், எல்லோருமே கடவுள் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். அறிவியல் பூர்வமாக அணுகுவதென்றால் "கடவுள் துகள்" ( God particle or God Damn Particle) என்றெல்லாம் செல்லுவோம்.


உண்மையில் இரண்டு கடவுள் இருக்கிறார். ஒன்று கடவுள், இன்னொன்னு நீங்கள் உருவாக்கியவர். என்பதாக படம் முடிகிறது.

(குறிப்பு : கடவுளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பது போலவே எனக்கும் ஒரு ஒன்லைன் தோன்றியிருக்கிறது.. கம்யூனிசத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொடர்பில்லை என்பதே)

No comments: