Sunday, December 7, 2014

போபால் பயணத்துளிகள் - 2

போபால் மக்கள் எளிமையாக இருக்கிறார்கள். குறிப்பாக உணவுப்பொருள்களெல்லாம் நல்ல தரத்தோடும், விலை மலிவாகவும் கிடைக்கிறது. டீ எல்லா கடையிலும் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நம்மூர் டீகளில் தான் கலப்படம் செய்துவிடுகிறார்கள். பாலில் தண்ணியை வாரி கொட்டி விடுகிறார்கள். அங்கே டீ வெறும் 5 அல்லது 6 ரூபாய்க்கு கிடைக்கிறது.

போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் பகிர்ந்த அனுபவம்.

* வெளியில் ஒரு கடைக்கு 5 பேர் சகிதம் சாப்பிட சென்றிருக்கிறார்கள். மொத்தமாக 175 ரூபாய் ஆகி இருக்கிறது. என்னண்ணே மொத்தமா இவ்ளோ பேர் சாப்பிட்டிருக்கோம், தள்ளுபடி எதுவும் இல்லையா? என்றிருக்கிறார்கள். அப்ப 170 ரூபாய் குடுங்க போதும் என்றிருக்கிறார்.

* ஒருவர் வாழைப்பழம் ஒரு சீப்பு வாங்கியிருக்கிறார். கடைக்காரர் 40ரூபாய் விலை சொல்லியிருக்கிறார். என்னண்ணே அநியாய விலையா இருக்கு. என்றவுடன் அப்ப 30 ரூபா குடுங்க போதும் என்றிருக்கிறார். திடீரென எதோ யோசித்தவர் அந்த சீப்பு பழத்தோடு நாலு பழம் எக்ஸ்ட்ரா கொடுத்து இப்ப 40 ரூபாய் கொடுங்கள் என்றிருக்கிறார்.

* ஒரு கடையில் சப்பாத்தி சாப்பிட்டோம். வெறும் 3 ரூபாய் தான். softஆக பஞ்சு மாதிரி இருந்தது. சிக்கன் சன்னா வைத்தார்கள். நான்கு பீஸ். ஒவ்வொரு பீஸையும் கடித்தால் பஞ்சு மாதிரி இருக்கிறது. நல்ல பதமாக வேக வைத்ததாக இருந்தது. 5 பேர் வயிறு நிறைய சாப்பிட்டும் 130 ரூபாய் தான் ஆனது

* அங்கிருந்த போது நியூ மார்கெட் பகுதியில் இருந்த தியேட்டருக்கு நண்பரோடு சென்றோடு சென்றேன். zid திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சென்னை தேவி தியேட்டர் போல மிகப்பெரியதாக இருந்தது. நாங்கள் வியாழக்கிழமை சென்றோம். இரவுக்காட்சி. வெறும் 40 பேர் தான் இருந்தார்கள். நம்மூர் போலவே பேன்ட் பாக்கெட்டையும் சட்டை பாக்கெட்டையும் அமுக்கி பார்த்து தான் உள்ளே அனுப்புகிறார்கள் ( ஆண்களுக்கு மட்டும்) நண்பர் ஒருவரிடம் சிகரெட் வைத்திருக்கிறீர்களா என தீவிரமாக விசாரித்தே உள்ளே அனுப்பினார்கள்.

உள்ளே ஒரு குரூப் எல்லா சீட்டிலும் பான்பராக் துப்பி வைத்திருந்தார்கள். இரவு 9 மணிக்கு படம் போட்டு 11.30 மணிக்கெல்லாம் முடித்து விடுகிறார்கள். அந்த இரவிலும் எல்லோரும் சாதாரணமாக ரோட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மூர் போல 10 மணிக்கே இழுத்து போத்திக்கொண்டு பொண்டாட்டியை கட்டிபிடித்து தூங்குவதில்லை. குறிப்பாக யாரும் ட்ராபிக் ரூல்ஸை மதிப்பதே இல்லை. ட்ராபிக் போலீஸையும் மதிப்பதில்லை. ரோட்டில் எல்லோரும் கொலை வெறியோடு தான் பைக்கை செலுத்துகிறார்கள். 3 பேராக அசால்டாக செல்கிறார்கள்.

ரோடு க்ராஸ் பண்ணுபவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டே செல்ல வேண்டி இருக்கிறது!

1 comment:

Saravanan said...

foto இருந்தா போடலாம்ல?...