Thursday, April 3, 2014

தேர்தல் உலா - சென்னை தேர்தல் நிலவரம்

தேர்தல் களையிழந்து இருப்பதாக தோன்றுகிறது! முன்பெல்லாம் எந்த தொகுதிக்கு சென்றாலும் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்.. பார்க்கிற பக்கமெல்லாம் கரை வேட்டிகள்!! அங்கங்கே “அன்பார்ந்த வாக்காள பெருமக்களே” என்று கூவிக்கொண்டே செல்லும் ஆட்டோக்கள் என்றெல்லாம் பார்த்து பார்த்தே பழக்கப்பட்ட எனக்கு இந்த இரண்டு நாள் கள நிலவரம் அவ்வளவு திருப்தியாக இல்லை!!

அரசியல்வாதிகளால் முன்பு அளவுக்கு பெரும் பணத்தை உள்ளே இறக்க முடியவில்லை போல தெரிகிறது!! இன்னும் 20 நாள் தான் இருக்கிறது!! சென்னையில் எல்லாரும் பொழப்ப பாக்க போயிட்டாங்க போல.. மற்ற ஊரில் வெறித்தனமாக இருப்பார்கள் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!!

-----------------------

இந்த இரண்டு நாள் சுற்றியதிலிருந்து ஒன்று தெரிகிறது!! திமுகவை சென்னை மக்கள் புறக்கணிக்க தயாராக இல்லை!! கணிசமான வாக்குகள் அப்படியே தான் இருக்கிறது!! 

ஸ்பெக்ட்ரம் ஊழல், தமிழிழீம் போன்றவை பற்றி கவலைப்பட யாரும் தயாராக இல்லை!! ”என்ன தான் கலைஞர் கொள்ளையடிச்சாலும் எங்களுக்கு செய்ய வேண்டியத செஞ்சுட்டாரு” என்று தான் சொல்கிறார்கள்!!

எதோ ஃபேஸ்புக்கில் எல்லோரும் எதிர்க்கிறார்கள்..அதனால் திமுக மண்ணை கவ்வும் என்பதெல்லாம் மாயை! ஊடகங்கள் திட்டமிட்டு பொய் செய்தி பரப்புவது போல தான் தெரிகிறது!! சென்னை இன்னும் திமுக கோட்டையாக தான் இருக்கிறது!! சென்னையில் கணிசமான எம்.பிக்கள் திமுகவுக்கு கிடைக்கலாம்!!!

சென்னையில் ஆதிமுகவினர் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது!!

- -- ---------------------------

No comments: