Tuesday, April 1, 2014

தேர்தலை முன்னிட்டு ஒரு பயணம்!

கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் தான் சொல்கின்றன! யாரும் உண்மை சொல்லவில்லை! ”பொட்டி வாங்கிட்டாங்க”! ”நீங்க வேண்ணா பாருங்க மோடி தான் ஜெயிப்பாரு”
அம்மா பிரதமராவாரா? திமுக எத்தனை தொகுதி ஜெயிக்கும்? ஈழ பிரச்சினை இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? காங்கிரஸ் நிக்கற ஒரு தொகுதில கூட ஜெயிக்காதாம்மே?
ஆம் ஆத்மி பத்தி எல்லோருமா தெரிஞ்சி வச்சிருக்காங்க? இப்படி எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன! உங்களுக்கும் இருக்கும்!
எத்தனை நாள் தான் கேள்விகளோடே வாழ்வது! பதில்களை எப்போது தான் தெரிந்துகொள்வதாம்? பதிலை தேடி நானும் நண்பர் Bharathi Kannanனும் தமிழகம் முழுக்க சொல்கிறோம்!
40 தொகுதிகளும் செல்ல முடியுமா தெரியவில்லை! ஆனால் முடிந்த வரை எல்லா தொகுதிக்கும் செல்வோம்! இன்று வடசென்னை தொகுதியில் உ.வாசுகி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கிறார்! அங்கிருந்து தான் எங்கள் பயணம் துவங்குகிறது!! கன்னியாகுமரி வரை செல்வோம்!
அவ்வப்போது பதிவுகள் வரும்! இந்த பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன்!

No comments: