Friday, April 18, 2014

தெனாலிராமன் திரைப்படம் விமர்சனம்

தெனாலிராமன் கதைகள் புத்தகத்திலிருந்து நான்கைந்து கதைகளை எடுத்து, இடையிடையே ரெண்டு மூணு காதல் காட்சிகள் பாடல் எல்லாம் வைத்தால் தெனாலிராமன் படம் வந்துவிடும். இது 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக எடுத்திருக்கிறார்கள்.. புலிகேசியாக கிருஷ்ணதேவராயர். புரட்சியாளனாக தெனாலிராமன்! ஆங்கிலேயர் இருந்த இடத்தில் சீன வியாபாரிகள்! கிருஷ்ண தேவராயர் அவையில் இருக்கும் மற்ற அமைச்சர்கள் அத்தனை பேரும் அயோக்கியர்கள்!
முழுக்க முழுக்க தெனாலிராமன் கதைகள் புத்தகத்தை மட்டுமே வைத்து எழுதபட்ட கதையாக இருக்கலாம்! கிருஷ்ண தேவராயர் என்ன புலிகேசி மன்னனைபோல் டம்மி பீசா? வட இந்தியாவில் அக்பர் எப்படியோ.. அதே அளவு புகழோடும் வீரத்தோடும் திகழ்ந்தவர் கிருஷ்ணதேவராயர் என்பது வரலாறு. அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.
தெனாலிராமனை உயர்வாக கூறுகிறேன் பேர்வழி என கிருஷ்ணதேவராயரை டம்மியாக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் போகட்டும். “டும்”. ஐந்து பாட்டும் மொக்கை! ஒரு பாட்டு எதோ சுமார். ரெண்டு மூணு தடவை கேட்டால் பிடிக்கலாம்.அரண்மனையை கிராபிக்ஸில் செய்துகாட்டி படச்செலவை குறைத்திருக்கிறார்கள்!
உண்மையில் தெனாலிராமன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.இதெல்லாம் ஒரு படம்னு போனபாரு என என்னைபார்த்தே கண்ணாடியில் சிரிக்கவும்.. 120 ரூபாய் போச்சோ! என சிந்திக்கவும் வைக்கிறார். தேர்தல் நேரம் என்பதால் வடிவேலுவின் காமெடி எடுபடவில்லை.

No comments: