ஆலந்தூரில் இடைத்தேர்தல் நடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை!! ரொம்ப டல்! ஆதிமுக வேட்பாளர் வெங்கட்ராமனோடு ஒப்பிடும்போது திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது!
3 மாதங்கள் திட்டமிட்டு உழைத்தால் கூட ஜெயிக்க முடியாத ஒரு தொகுதியில் 20 நாள் பிரச்சாரம் செய்தால் மூன்றாவது இடத்தை கூட பிடிக்க முடியுமா தெரியவில்லை! மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது ஆம்ஆத்மிக்கு பிரச்சார படை பெரிய அளவில் இல்லை! எல்லோரும் டீம் கேப்டன் ஞாநியையே நம்பி கொண்டிருக்கிறார்கள்!!
கம்யூனிஸ்டுகள் ஞாநியை ஆதரிக்கிறார்கள்!! ஆனால் அவர்கள் ஞாநிக்காக இறங்கி வேலை செய்வார்களா என்பதை பொறுத்தே மூன்றாவது இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும்! திமுக வேட்பாளர் ஆர்.எஸ் பாரதி முந்துகிறார்! ஒரு வேளை ஆதிமுக ஜெயித்தால் கூட மிகச்சில வாக்குகள் வித்தியாசமே இருக்கும்!
No comments:
Post a Comment