Thursday, March 27, 2014

முதல் தேர்தல் அனுபவம்!

எனக்கு முதல் முதலில் வாக்களிக்கும் உரிமை கிடைத்த போது மிகச்சரியாக 18வயது ஆகியிருந்தது!! அப்போது 49 ஓ பற்றி தெரிந்திருந்ததால்.. ஓட்டுசாவடியில் வரிசையில் நின்று என் கையில் மைவைத்த உடன்.. மை வைத்த அதிகாரியிடம் சார் 49 ஓ ஃபாரம் வேண்டும் என்றேன்!!
“அப்டின்னா?” என்றார்!
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!! ஒரு தேர்தல் அதிகாரியே “அப்டின்னா” என்கிறார்! “ நீங்க தானே சார்! தேர்தல் அதிகாரி?” என்றேன்!! “ஆமாம் தம்பி..” என்றார் சிரித்துக்கொண்டே!!
49 ஓ என்பது யாருக்குமே வக்களிக்க விருப்பமில்லை என்று சொல்லும் ஒரு வாய்ப்பு.. தேர்தல் ஆணையம் வழங்குகிறது!! கையில் மை வைத்த உடன் அதிகாரியிடம் சொன்னால் ஃபார்ம் ஒன்று தருவார்கள்!! என்று அவருக்கு பாடம் எடுத்தேன்!!
“அப்டியா? எங்களுக்கு எதுவும் அப்டி சொல்லவில்லை! வேற எதாவது பூத்துல இருக்கும்! அதான் மை வச்சிட்டீங்கல்ல.. யாராவது ஒருத்தருக்கு ஓட்டு போட்டுட்டு போங்க தம்பி” என்றார்!
எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை! 49 ஓ.. இல்லையென்றால் எனக்கு பிடித்த வாக்காளர் ஒருவர் என்று தான் மனதில் முடிவெடுத்திருந்தேன்!! அதன் படி போட்டுவிட்டு வந்த போது “ உங்க காலம் வரும்போது செய்யுங்க தம்பி” என்றார்!! எனக்கு நிச்சயமாக தெரியும் அந்த அதிகாரிக்கு 49 ஓ பற்றி பயிற்சி அளித்திருப்பார்கள்!! அவர் வேண்டுமென்றே தான் என்னை ஏமாற்றியிருக்கிறார்!
எனக்கு இப்போது கூட கலைஞர் மீது கொஞ்சம் கூட கோவமே இல்லை!! அவர் ஒட்டுமொத்த அரசு கஜானாவையும் தன் பேங்க் அக்கவுண்டில் ட்ரான்ஸ்ஃபர் செய்துகொண்டால் கூட எனக்கு எந்த கோவமும் வராது!! ஜெயலலிதாவும் அப்படியே! ஆனால் இது போன்ற அதிகாரிகள் மீதான கோபம் ஒவ்வோரு தேர்தலின் போதும் வந்து வந்து போகிறது!!

No comments: