Thursday, March 27, 2014

நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்

 நமோ
நண்பர் ஒருவர் குஜராத்தில் இருக்கிறார்! நேற்று மாலை தான் பேசினேன்!! அவர் சொன்ன விசயங்களெல்லாம் ஆச்சரியமாக இருந்தது!! இப்படியும் ஒரு மாநிலம் இருக்க முடியுமா? இப்படியும் ஒரு முதல்வர் இருக்க முடியுமா என்று ஒரு நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்!! 

நண்பர் முதல் முதலாக சென்னையிலிருந்து குஜராத் சென்ற போது ரயில்வே ஸ்டேசனில் இறங்கி திரு திருவென விழித்திருக்கிறார்! மொழியும் தெரியவில்லை.. வழியும் தெரியவில்லை! குறிப்பாக அங்கே நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியவில்லை!

குஜராத்தில் நண்பருக்கு தெரிந்தவர்,, ஆங்கிலம் அறிந்தவர் மோடி ஒருவரே! நண்பர் மோடியை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார்! தன் பிரச்சினையை 140 வார்த்தைகுள் எழுதி மோடிக்கு ட்வீட் செய்கிறார்!! பதில் என்ன வருகிறதென்று தெரிந்துகொள்ள ஆசை! சில நிமிடங்கள் காத்திருக்கிறார்! அரை மணி நேரம் ஆகியும் ஏதும் நடக்கவில்லை!

”i am waiting outside the station" என்று மோடியிடமிருந்து ட்வீட் ரிப்ளே வருகிறது.. நண்பர் அரண்டு விட்டார்! எதோ ஃபேக் ஐடி தான் தன்னிடம் விளையாடுகிறது என்று நினைத்து ஸ்டேசன் வெளியே வந்தவருக்கு.. ஆச்சரியம்.. இன்னோவா காருக்கு வெளியே கை கட்டி நின்றவாறு மோடி!! ஒரு போலீஸ் கூட அவருக்கு பாதுகாப்பாக இல்லை!!

அக்கம் பக்கம் விசாரித்த போது.. மோடி அடிக்கடி சாதாரணமாகவே இது போல் வருவாராம்!! சமயங்களில் ரயில்வே ஸ்டேசனில் மக்களோடு மக்களாகவே படுத்துக்கொள்வாராம்!! நண்பருக்கு வீடு பார்த்துகொடுத்ததிலிருந்து,, பேப்பர்காரனுக்கு சொன்னது வரை எல்லாமே மோடி தான்!!

இப்போது சொல்லுங்கள்!! யார் இந்தியப்பிரதமர் ஆக வேண்டுமென்று!!

(குறிப்பு : இது உண்மையா பொய்யா என உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்)

No comments: