Thursday, March 27, 2014

காதல் பற்றி ஃபேஸ்புக் கமெண்டில் அடியேன்

மொதல்ல காதலுக்கும் அன்புக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்!! காதல் என்பது உணர்வு!! இன விருத்திக்காக ஆண் பெண் இடையே தோற்றுவிக்கப்படும் ஒரு ரசவாதம்!! (விக்ரமன் பட பாணி ஆசாமிகள் இந்த கமெண்டை தவிர்க்கவும்)
காதலின் வெற்றி தோல்வி என்பது திருமணத்தால் அளக்கப்படுகிறது!! காதல் தோல்வி என்பது இரண்டு வகையில் அணுகப்படுகிறது!! ஒன்று காதலை சொல்லவே பயந்து தொடை நடுங்கி விட்டுவிடுதல் (அல்லது) சொல்லி அந்த பெண்/பையன் ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல்!
அந்த தோல்வியை இரண்டு விதமாக நம்மாட்கள் கடக்கிறார்கள்!! Just like that திரிஷா இல்லன்னா திவ்யா மெதேட்! இல்லை பூவே உனக்காக டைப் ஒரு செடில ஒரு பூ தான் மொளைக்கும் பாணி!!
இன்னொரு வகையான காதல் தோல்வி என்பது கொஞ்ச நாள் காதலித்து பின் போரடித்ததும் சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் கேவலப்படுத்தி பிரிந்துவிடுதல்!! அல்லது பெட்டரா ஒரு ஆள் கிடைத்ததும் கழட்டிவிடுதல்!! அல்லது நல்ல மாப்பிள்ளையா பார்த்ததும் கண்ல ஜலத்த வச்சுண்டு நல்லவன் மாறியே ஆக்டு குடுத்து நம்பவைத்து ரெண்டு பேரும் சோகத்தை வைத்துக்கொண்டு பிரிதல்!!
சினிமாவில் காட்டப்படும் காதல் முழுக்க முழுக்க ஆணால் உருவாக்கப்படுவது( exception இருக்கலாம்) ஆம்!! உண்மையில் காதல் ஒரு முதலீடு!! பச்சையாக சொல்வதென்றால் அவசர அவசரமாக பேருந்தில் ஓடி போய் எல்லோருக்கும் முன்னாடி சீட்டு போட்டு வைப்போமே! அதே!!
அன்பு, பாசம்,புரிந்துகொள்ளல் விட்டுக்கொடுத்தல் தான் காதலை சங்கர் சிமெண்ட் மாதிரி க்ரிப்பாக வைத்திருக்க உதவுகிறது!! அவ்வளவே!! மற்றபடி காதல் என்பது கடவுள்... அன்பு,, அடிவயித்தில் பந்து உருளுதல் போன்ற வார்த்தைகளால் வர்ணித்தால் ரெண்டு லைக் எக்ஸ்ட்ராவாக விழலாம் அவ்வளவே!!

No comments: