Thursday, February 13, 2014

சேகர் செத்தான்

காதலர் தினம் நெருங்க நெருங்க சேகருக்கு கையும் காலும் துரு துரு என்றாகிவிட்டது!! கடந்த காதலர் தினம் போலவே இந்த காதலர் தினமும் கழிந்துவிடுமோ என்ற பயம் அடி வயிற்றை எதோ செய்தது!!

பேசாமல் ரோட்டில் போற எதாவது பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து சரண்டர் ஆகிவிடலாமா என்று கேவலமாக கூட யோசிப்பான்.. ஆனால் கெடச்சத லவ் பண்றத விட.. புடிச்சத லவ் பண்ணாதான் லவ்ல ஒரு கிக்கிருக்கும் என்ற அவனது எண்ணம் அவனை தடுத்தது!!

மற்றவர்களைப் பொறுத்த வரை எப்படியோ தெரியாது. சேகரைப்பொறுத்த வரை அவன் அழகு! கண்ணாடியில் பார்க்கும் போது அவன் முகம் அவனுக்கே அழகாக தெரியும்.அதனால் அவனுக்கு ஃபேர் அண்ட் ஹேன்ஸம் தேவைப்படவில்லை.சைட் அடிப்பதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையேயில்லை. ”அதெல்லாம் டைம் வேஸ்ட் மச்சி” என்பான்.

“போனோமா.. பூ குடுத்தோமா.. பைக்ல இட்டுன்னு போய்.. எங்கயாவது கூட்டின்னு சுத்னோமா.முடிஞ்சிது! வேலை பொழப்பு இல்லாதவன் தான் பாத்துன்னே சுத்தின்னு இருப்பான்” என்பான்! ஆனாலும் சேகருக்கு காதல் ”தேவைப்பட்டது”! “எனக்கே எனக்கா ஒரு காதலி இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்” என அவ்வப்போது யோசித்துக்கொள்வான்!

காலம் உருண்டோடியது..

காதல் யாரைத்தான் விட்டது? சேகருக்கு இது முதல் காதல்!! இதற்கு முன்பே இரண்டு மூன்று இருந்திருந்தாலும் இப்போதைக்கு இது முதல் காதல்! கண்டுக்காதீங்க!

ஆம் அது காதல் தான்! கன்ஃபார்மே செய்துவிட்டான்! காரணம் இது தான்!! புது நம்பர் ஒன்றிலிருந்து “Hi sweety" என்று ஒரு மெசேஜ் வந்திருந்தது!!

இவனையும் ஒருவர் ஸ்வீட்டி என்று அழைக்கிறாரென்றால் அது காதலாக தான் இருந்தாக வேண்டும்!! சேகருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை!! மாடியிலிருந்து குதிக்க வேண்டும் போல இருந்தது!

அந்த நம்பருக்கு போன் செய்து உடனடியாக “ஐ லவ் யூ” சொல்லிவிடலாமா என்று யோசித்தான்!! சேகர் சரியான அவசரக்குடுக்கை..
(சேகர் சாவான்)

No comments: