Monday, February 10, 2014

ஜாப் டைப்பிங்க்

அப்போது கல்லூரி மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டலில் என் ரூமுக்கு பக்கத்தில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் ரூம் இருந்தது! எனக்கு பொழுது போகலைன்னா அவர்களிடமும் போய் சில நிமிடம் மொக்கை போட்டுவிட்டு வருவேன் 

அதற்கு காரணம் இருந்தது.. மற்றவர்களோடு பேசினால் தமிழில் பேச வேண்டி வரும்.அவர்களோடு பேசினால் ஆங்கிலத்திலே தான் பேசியாக வேண்டும். ஆங்கிலத்திறன் வளர்க்க அது ஒரு உத்தியாக இருந்தது! 

ஒரு ஞாயிற்றுக்கிழமை.. பக்கத்து அறை அண்ணன் என் அறைக்கு வந்து..

”உங்க ரூம்ல யாருக்காவது டைப்பிங்க் தெரியுமா?” என்றார்

“எனக்கே தெரியும்.எதுக்கு கேக்கறீங்க?”

“இல்ல.. அர்ஜண்டா 20 பக்கம் டைப் பண்ணனும்.. நாளைக்குள்ள சம்மிட் பண்ணனும்.. நாமக்கல் போய் கேட்டாலும் நாளைக்குள்ள தருவாங்களான்னு தெரில.. நான் வேணா ஒரு பக்கத்துக்கு 5ரூ தரேன்” என்றார்! நல்ல ஆஃபராக படவே.. மூன்று மணி நேரத்தில் 20 பக்கம் அடித்துகொடுத்தேன்!! செலவுக்கு ஆச்சு!

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ப்ராஜக்ட் டைப்பிங்கை எதற்காக வெளியே கொடுக்கணும்? டைப்பிங்க் தெரிஞ்ச பசங்களுக்கே கொடுத்த என்ன? அவங்களுக்கும் செலவுக்கு ஆச்சுல்ல!

No comments: