Wednesday, February 5, 2014

ஐசிஐசிஐ வங்கியில் ஏடிஎம்மிலேயே பணம் செலுத்தும் வசதி

இன்று வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றிருந்தேன்.பணம் கட்ட வரிசை எங்கே என தேடிய போது ஏ.டி.எம் போல இருக்கும் ஒரு மெசினை காட்டினார்கள்! 

“ப்ரோ இது எப்போ வந்துச்சு? சொல்லவேயில்ல” என்றேன் அங்கே நின்ற பணியாளர் ஒருவரிடம்! 

“வந்து ஆறு மாசம் ஆச்சு” என்றார்!! (வங்கிக்கு போய் ஆறுமாசம் ஆச்சா  ரைட்டு)

அந்த மெசினில் 12 இலக்க அக்கவுண்ட் எண்ணை அழுத்திய உடன் கீழே ஒரு ட்ரே திறக்கிறது! அதில் பணத்தை வைத்தால் அதுவே எண்ணி, “3000” தானே? என கேட்கிறது.. ஆமாம் என அழுத்தினால் “வைத்தீஸ்வரன்” தானே? என்கிறது.. ஆமாம் என்றால் ரெசிப்டு ஒன்று வெளியே வந்துவிடுகிறது!! இனி 24 மணி நேரமும் பணம் போட்டு எடுக்கலாம்! அருமை!!

இன்னும் எங்கூர் ஐஓபியில் முக்கால் மணி நேரம் நிற்க வேண்டியிருப்பதை நினைத்துக்கொண்டேன்.. அம்மா பாவம் 

மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஐசிஐசிஐ வங்கியில் ஒரு செல்லான் பூர்த்தி செய்து கவர் ஒன்றில் பணம் போட்டு ஏடிஎம்மில் இருக்கும் பாக்ஸில் பணம் போட்டுவிட்டால் மறுநாள் காலை 11 மணிக்கு பணம் அக்கவுண்டில் ஏறிவிடும் ஒரு சர்வீஸ் வைத்திருந்தார்கள்! அப்போது 12வது படித்துக்கொண்டிருந்தேன்! அந்த சேவையை எப்போது மூடினார்கள் தெரியவில்லை!!

No comments: