Thursday, January 16, 2014

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள் 

1) பதிப்பாளர் மேல கை வைக்க கூடாது - பதிப்பாளரை பத்தி எந்த சூழ்நிலையிலும் வாய திறக்கவோ கருத்து தெரிவிக்கவோ கூடாது.. காரணம் அவங்க தான் நம்ம புக்கை வெளியிடறாங்க..அதனால நோ அட்டாக் நோ ஸ்டேட்டஸ்

புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்
புத்தகம் எழுத நினைப்பவர்களுக்கான ஐந்து விதிகள்
2) கவிதை எழுத கூடாது - கவிதை புக்கெல்லாம் விக்கறதேயில்லங்கறதால பதிப்பாளர்களெல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்க.. அதனால நோ கவிதை

3) கில்மா - முடிஞ்ச வரைக்கும் கில்மாவா எதாவது எழுத முடியுமான்னு பாக்கணும்.. காலம் காலமா கருத்து பேர்வழிகளோட புக்க படிச்சு எல்லாரும் தெளிவா இருக்காங்க

4) நோ பிடி.எஃப் - புக்கு நெனச்ச சமயத்தில வெளியானாலும் வெளியாகாட்டியும் ராயல்டி குடுத்தாலும் குடுக்காட்டியும் நம்ம புக்க எக்காரணம் முன்னிட்டும் pdfஆக்கி நெட்டுல போட்டுட கூடாது. அப்பறம் உன்னையாரு பிடிஎஃப் அப்லோட் பன்ண சொன்னதுன்னு நம்மள அட்டாக் பண்ணுவாங்க..அதனால நோ வன்முறை!

5) குறிப்பா ராயல்டி கேக்க கூடாது - மொதல்ல நம்ம புக்கு விக்குமா விக்காதான்னே தெரியாது.. அதனால ராயல்டி கேட்டா புக்கு விக்கலன்னு சொல்லிடுவாங்க..புக்கா போட்டதே பெரிய விசயம்னு நினைச்சி அவங்களா குடுத்தா வாங்கிக்கணும்!

No comments: