ராவணன் ஃபிளாப்புக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்போடு மணிரத்னம் படம் பார்க்கப்போனேன். போதாக்குறைக்கு கார்த்திக் மகன் கௌதம் ஹீரோ, ராதா மகள் துளசி ஹீரோயின், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி, அர்ஜூன் நடிப்பு, ஏ.ஆர் ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் உச்சமாக பின் நவீனத்துவ புகழ் ஜெயமோகனின் கதை,திரைக்கதை(மணிரத்னமும் கூட இருக்கார்) என எதிர்பார்ப்பின் உச்சத்தோடு திரையரங்குக்குள் நுழைந்தேன்.
படத்தின் துவக்கமே இரண்டு பாதிரியார்களைப்பற்றியது. ஒருவர் நல்லவர்(அரவிந்த்சாமி). இன்னொருவர் கெட்டவர்(அர்ஜூன்).இருவரின் நோக்கமே ஃபாதர் ஆவது. அரவிந்தசாமி ஆர்தோடெக்ஸ் வகையை சேர்ந்தவர். அர்ஜூன் அதில் பெரிய ஆர்வமில்லாமல், எதோ வயிற்றுப்பாட்டுக்காக இந்த பக்கம் கரை ஒதுங்கியவர். இந்த வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டுமென நினைத்து எனோதானோவென வாழ்பவர்.
ராத்திரி நேரத்தில் மெஸ்ஸில் வேலைபார்க்கும் அம்மணி ஒருவரோடு அரசல்புரசலாக இருந்து அரவிந்தசாமியிடம் கையும் களவுமாக சிக்கி மடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வழக்கமான தமிழ்சினிமா வில்லன் போல “உன்னை பழிவாங்குனா தான் என் ஆத்மா சாந்தி அடையும்” என சொல்லிவிட்டு கதையிலிருந்து தலைமறைவாகிவிடுகிறார்.
ஹீரோவை காட்டுகிறார்கள், அவர் அம்மாவை இழப்பது, அயோக்கிய அப்பன் வேறு ஒரு பெண்ணோடு வாழ, வீட்டைவிட்டு துரத்தப்பட்டு தெருப்பொறுக்கியாகி, அரவிந்தசாமி ஃபாதரோடு ஐக்கியமாகி மீன்பிடி வாழ்க்கைக்குள் தஞ்சம்புகுகிறார். திடீரென ஒரே பாடலில் வளர்ந்து, ஹீரோயினை ஒரு பக்கம் எதேச்சையாக பார்த்து, பரவசமாகி, லவ்வாகி எல்லோரையும் போல நாசமாக போகிறார். அப்புறம் அர்ஜூன் எண்ட்ரியாகிறார். யாராலோ சுடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவரை அரவிந்த்சாமி காப்பாற்றி சோறு போட்டால், உடல் குணமாகியதும் தலைமறைவாகி, அர்ஜூனின் கீப்போடு அரவிந்தசாமி கிசுகிசுக்கப்பட்டு, நடுவில் கசமுசாவாகி means அதிரடி திருப்பமாகி கொலைகேசில் நான்கு ஆண்டுகள் உள்ளே தள்ளப்படுகிறார்.
அர்ஜூன் நம்ம ஹீரோவை மைண்ட்வாஷ் பண்ணி, தப்புதண்டாவுக்குள் தள்ளி அராஜக ஆசாமியாக்கி என கதையானது, சென்னைக்குள் புதிதாக நுழைந்து வழிதெரியாமல் அட்ரஸ் தேடி அலையும் ஆசாமி போல பயணித்து புதுப்புது தடங்களில் அதிரடியாக நுழைந்து திடீரென “ச்சீ.. இந்த வீடுதானா” என நம்மை செல்ல வைத்துவிடுகிறது. படத்தின் முதல் 30 நிமிடங்கள் உலக சினிமா ரேஞ்சுக்கு நம்மை மிரட்டுகின்றன. போகப்போக உள்ளூர் சினிமாவிடமே தோற்று தலை தொங்கி “மிடில” என சரண்டர் ஆனது வேறு கதை. ஏஆர் ரஹ்மான் பின்னி எடுத்திருக்கிறார். மனிதர் கையில் நாலைந்து ஆஸ்காரைத்திணித்தால் தான் அமைதியாவார் போல. ராஜீவ் மேனனின் கேமரா நம் கண்களுக்கு இதமளிக்கிறது. வழக்கமாக ஹீரோயின் தான் ஊறுகாயாக பயன்படுத்தப்படுவார், இந்த படத்தில் ஹீரோவும். ஹீரோயின் மனவளர்ச்சி குன்றியவர் என்று சொல்லி நம்மை பைத்தியமாக்குகிறார்கள். படம் முடியும் போது உண்மையான ஹீரோவே அரவிந்தசாமி தான் என்பது போல தோன்றுகிறது.
படம் கன்யாக்குமரி பகுதிகளிலுள்ள மீனவ கிருத்துவ மக்கள் பற்றியது என்பதால், பாடல்களில் சர்ச் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. ஏமாத்திட்டீங்களே மணி.
No comments:
Post a Comment