Friday, May 4, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை


ஏனோ தெரியலை. முகநூலில் ஆர்வம் குறைந்து வருகிறது. ஸ்டேடஸ் போடுவது, கமெண்ட் போடுவது போன்றவற்றில் ஆர்வம் குறைந்து வருகிறது. 
உருப்பட்டு விடுவேனோ?
--- பெருமாள் கருணாகரன்

சார் ஒரு உதாரணம் தான்!!


பேஸ்புக்கின் பிரபல பதிவர்கள் பலரின் சமீபகால ஸ்டேட்டஸ் இது தான். காரணம் என்ன?

ஏன் ஃபேஸ்புக்கை சிலர் வெறுக்கத்துவங்கி விட்டார்கள்.
இதன் காரணங்கள் தெரிய வேண்டுமென்றால் நாம் ஃபேஸ்புக்கின் பாலபாடம் பற்றி தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.

அதற்கு முன்..

பின்வரும் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசிக்கத்துவங்குங்கள்.

1)    தினமும் எவ்வளவு மணி நேரங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள்
2)    ஏன் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள்
3)    ஃபேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸில் முக்கியப்பங்காற்றும் செய்தி என்ன?(உதாரணம் – அரசியல்,கவிதை,அனுபவம்..எக்ஸட்ரா)

இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன.அவற்றை பின்னால் பார்ப்போம்.

ஆரம்பக்காலங்களில் ஆர்வமாக ஃபேஸ்புக் வந்தவர்கள் பலரும் சமீப காலங்களில் ஃபேஸ்புக்கை தலையை சுற்றி தூக்கி எறியக்காரணங்கள் பல..

ஆனால் ஃபேஸ்புக்கினுள் தலை நுழைப்பதற்கான காரணங்களாக சிலர் சொல்லவதெல்லாம் மூன்று தான்.

1)    பொழுதுபோக்கு
2)    புதிய நண்பர்கள் தேட (அதாவது ஒத்த கருத்துடைய நண்பர்களை பிடிக்க)
3)    புதிய செய்திகள் கிடைக்கும்.

இந்த மூன்றும் அல்லாத நான்காவது ஒன்று இருக்கிறது.அது ப்ராண்டிங்.(Branding) பெரிய ஆசாமிகள் இந்த கேட்டகிரியில் வருவார்கள். இவர்களின் நோக்கம் தங்கள் தொழிலை மேம்படுத்துவது.

(உதாரணம் வக்கீல் ஒருவரை எடுத்துக்கொள்வோம்..யாராவது ஒருவர் தன் ஸ்டேட்டஸில் “இதை எல்லாம் கேட்க ஆளே இல்லையா என்பது போல போட்டிருந்தால் “ஏன் இல்லை.ஈபிகோ 235இல் மூன்றாம் பத்தியில் குறிப்பிட்டது போல சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்என எதையாவது அவ்வப்போது கூறிக்கொண்டே இருப்பார்.

நாளா வட்டத்தில் அவருடைய நண்பர் வட்டத்தில் இருப்பவருக்கு இவரது பதில்களை பார்க்கும் போது “ஒருவேள மிகச்சிறந்த வக்கீலா இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு அவர் சட்டத்திறமை மீதும் வாதத்திறமை மீதும் அசாத்திய நம்பிக்கை வந்துவிடும்.பிறகென்ன நண்பருக்கு சட்ட ரீதியாக ஏதாவது உதவி தேவைப்படும் போது நம்ம வக்கீல் நினைவே வந்து தொலைக்கும்.இது தான் ப்ரண்டிங்.அந்த வக்கீல் தன்னை தொடர்ந்து ஃபேஸ்புக் மூலமாக மார்க்கெட் செய்து வந்ததன் வெற்றி தான் இது.அவர் மட்டுமல்ல சமீபத்தில் நிறைய பேர் இவ்வாறு முயற்சி செய்து வருவதை தொடர்ந்து கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும்.குறிப்பாக பெரு நிறுவனங்கள் இதை Social Marketing என தொடர்ந்து செய்கிறார்கள்)

ஃபேஸ்புக் தெளிவர்கள்:
ஃபேஸ்புக்கை சிலர் மிகத்தெளிவாக கையாண்டுவருவதை நான் பார்த்திருக்கிறேன்.அவர்கள் பற்றி முதலில் விரிவாக பார்த்து விடலாம்.
இவர்களின் தெளிவு நம்மை புல்லரிக்கவைக்கும்.இவர்கள் பொழுதன்னிக்கும் ஃபேஸ்புக்கில் இருப்பது போல தான் தோன்றும் ஆனால் உண்மை அப்படியல்ல.

தினமும் காலை பத்து மணிக்கு வருவார்கள்.ஒரு ஸ்டேட்டஸை போடுவார்கள்.முக்கியமானவர்களின் பக்கத்தை பார்வையிடுவார்கள்.லைக்கையோ கமெண்டையோ தட்டுவர்கள்.அடுத்தவேளையை பார்க்க போய் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் போட்ட ஸ்டேட்டஸுக்கு கீழ் இரண்டு பேர் சட்டை கிழித்து சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அது பற்றி டோண்ட் வொர்ரி பி ஹேப்பியாக இருப்பார்கள்.இவர்களுடைய தலை எங்காவது உருண்டால் மட்டும், உடனே அங்கே சென்று பக்காவான மறுப்பை தெரிவித்துவிட்டு பதுசாக நகர்ந்துவிடுவார்கள்.

குறிப்பாக இந்த வகை ஆசாமிகள் எப்பொழுதும் ஆஃப்லைனில் தான் இருப்பார்கள்.தீவிரவாதிபோல எப்பொழுது வருகிறார்கள்,எப்பொழுது போகிறார்கள், எப்பொழுது வெடி வைப்பார்கள் என எவனும் கணித்துவிட முடியாது.அதே சமயத்தில் இவர்கள் பணி செய்யும் இடத்திலும் வேலையில் தீயாக இருப்பார்கள்.மேனேஜரே அசந்துவிடுவார்.(பொழுதுபோக்குகாக தான் ஃபேஸ்புக் என்பவர்கள் இதை கவனிக்க)

சரி நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில்கள், நாம் நாசுக்காக கையாள் வேண்டியவர்கள்,பொழுதுபோக்குக்காக தான் ஃபேஸ்புக் என்றால் நாம் செய்ய வேண்டியது என்ன, செய்யகூடாதது என்ன? மற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன? என அடுத்து விலாவரியாக பார்ப்போம்.

துவக்கத்தில் கருணா சாரின் ஸ்டேட்டஸுக்கான காரணம் recognizationனோடு தொடர்புடையது.குறிப்பாக சமீபகாலங்களில் பத்திரிக்கைகாக ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு அது பத்திரிக்கையில் வெளியானவுடன் அதை விளம்பரப்படுத்தி சீன் போட்டதன் தொடர் விளைவின் பாதிப்பே இது.இதை பற்றியும் விரிவாக அலசுவோம்
(முகத்திரை விலகும்)

1 comment:

Eddie Idiot said...

thalaiva ungaludaya ovuoru variyum unmai... chumma sethukurukinga ..! idhu ellam epdi ungalala mudiyudhu??? enakum konjam blog eludha, use pana solli thangalen...!!!