ஃபேஸ்புக்கில் பொண்ணு பிடிக்கும் ஆசாமிகளின் கதை படு சுவாரசியமானது. ஆரம்பத்தில் பயங்கர டெடிக்கேட்டடாக பெண் தேடுவார்கள்.
எப்படி தேடுகிறார்கள்?
முதலில் ரம்யா, நித்யா என்பன போன்ற பெயராக ஃபேஸ்புக் சேர்ச் பாக்சில் தேடி தேடி ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்.தேடப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ப்ரொஃபைல் போட்டோவே இருக்காது.
(தங்கள் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளுகிற துணிச்சல் இல்லையோ என்னவோ..ஒருவேளை அவர்கள் காட்டிவிடும் பட்சத்தில் அதை பார்க்க நமக்கு துணிச்சல் தேவைப்படலாம்).
சில பெண்கள் நடிகைகளின் முகமும் பொம்மை முகமும் வைத்து ஏமாற்றுவார்கள். நம்மவர்கள் அந்த முகத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். அந்த ஆராய்ச்சிகளில் பின்வருவன இடம் பெறும்(வயது,கல்லூரி, நிறுவனம், பெயர்,எந்த ஊர்,இத்யாதி,இத்யாதி).
வயது ரொம்ப முக்கியம்..(காரணம் தெரியாதவர்கள் சுட்டி டிவி பார்க்கவும்)
பெரிய கல்லூரியை சேர்ந்தவர்கள் செம ஃபிகர் என்ற அணுமானம் அடிப்படையிலேயே உண்டு.(பொதுவாக கிராமத்து ஆசாமிகள் இதில் அதிகம் பாதிக்கபட்டிருக்கிறார்கள்)
ஊரில் - - சென்னை,கோவை,கேரளாவுக்கு முன்னுரிமை அளிக்கபடும்.(லிஸ்டில் மதுரை,திருநெல்வேலியை விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்,ஆனால் அங்கே ஃபேஸ்புக் அவ்வளவு பிரபலமா என்பது சந்தேகமே)
ஐடி நிறுவனம் என்றால் ராஜ உபசாரம் உண்டு (காரணம் பல ஐடி நிறுவன நண்பர்கள் ஏற்கனவே கதை கதையாக விட்டு கடுப்பேற்றிய வரலாற்று பாதிப்புகள்)
இப்படியான முயற்சிக்களை பட்டி டிங்கரிங் செய்து பிறகு, நண்பர்களின் நண்பர்களாக தேடத்துவங்குவார்கள். அப்படி சிக்கும் பெண்கள் இவர்களை பாராமுகமாக நடத்துவார்கள். அப்படியே செட்டாகும் முகங்கள் கூட பார்க்கவியலா முகமாக நேரில் நடந்த கொடுமைகள் எல்லாம் உண்டு.
இவர்களின் தேடுதல் வேட்டை இப்படி இருக்க.. நிலைமை வேறு என்பது தான் கூத்தே..
பசங்களை விட பெண்கள் படு விவரமானவர்கள் என்ற உண்மையை நம் பச்சை மண்ணுங்கலால் ஜீரணித்து கொள்ளவே முடிவதில்லை.
“நான் என்னுடன் நேரில் பழகாத பசங்க ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தால் அக்சப்ட் பண்ணுவதே இல்லை” என்பதே அவர்களின் பதில்.
பெண்களை பற்றி பசங்க சில மதிப்பீடுகளை கொண்டிருப்பதைப்போலவே பெண்களும் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக பசங்க ஓவர் ஜொல்லு பார்ட்டியாக இருக்கிறார்கள்.ஆன்லைனுக்கு வந்ததுமே “ஹாய்” என்று ஒரே நேரத்தில் பத்து பேர் திரையில் பயமுறுத்துகிறார்கள். நாங்கள் ஃபேஸ்புக் காதலை என்கரேஜ் செய்வதே இல்லை என்பதே அவர்கள் தரப்பு வாதம்
சரி யாருக்கு தான் ஃபிகர்கள் உஷாராகிறார்கள்?
காரணம் ரொம்ப சிம்பிள். நாம் படிக்கும் கல்லூரியின் நண்பர்களின் தோழிகள்,அவர்களின் தோழிகள், நிறுவனத்தில் பணி புரியும் நண்பர்களின் நண்பர்கள் என வட்டம் நீழும். இந்த சர்க்கிலில் யாராவது சிக்கினால் உண்டு. மற்றபடி கஷ்டம் தான்.
(குறிப்பு : சில கில்லாடிகள் பெண்களை மிகத்திறமையாக கவர்ந்துப்பின் பணம் பறிப்பதும் தொடர்கிறது.பெண்களிலும் சிலர் இப்படி உண்டு.அவர்கள் பற்றி அப்புறமா…)
(உபதகவல் : தமிழில் எழுதும் ஆசாமிகளுக்கு ஃபிகர்கள் சிக்க வாய்ப்புகள் குறைவு)
ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, மொபைலில் நீண்டுடுடுடு.. நட்பாகி, காதலாகி பின் கடற்கரையில் சங்கமித்து நாசமாய் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இத்தகைய காதல்கள் ஸ்திரத்தன்மை அற்றவை என்பவை பலரது அனுமானம்.ஆனால் அது காதலிக்கும் ஆசாமிகளை பொறுத்தது.இரண்டு முழு யோக்கியர்கள் காதலிக்கும் போது காதலில் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல. தரம்,மணம் சுவை,திடம் என சன்ரைஸ் விளம்பரத்தில் வரும் எல்லாமே சரியாக அமையும் என்பதை நினைவு படுத்திவிடுகிறேன்.
அவை இல்லாத பட்சத்தில் கல்யாண் புரட்சி போராட்டம் தான்.
ஃபிகரை பிக்கப் பண்ணும் நோக்கத்தோடு ஃபேஸ்புக்கில் வலம் வந்த ஆரம்பகால முகப்புத்தக வாசிகள் பின் தடுமாறி, தடம் மாறி, பல புதிய முயற்சிகள் செய்து தங்களை வேறு வகைகளில் வெளிப்படுத்தி பாப்புலராகிப்பின் செட்டாகும் ஃபிகர்களையும் தோழர் ஆக்கிக்கொண்டு ஆரோக்கியமான நட்பாக பல போராட்டங்களில் வெற்றிகரமாக பங்கு பெற்ற வரலாற்று சுவாரசியங்கள் உண்டு.
ஆனால் ஃபிகர்களைமட்டுமே உசார் பண்ண வருகிறவர்களுக்கான நீதி ஒன்று தான்.
“கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பி தீர விசாரிக்க களம் இறங்க வேண்டாம் என்பதே”
(போலிமுகத்திருடர்கள் பற்றி அடுத்த பதிவில்)
(முகத்திரை விலகும்)
5 comments:
உங்களுக்கு கிடைசுசுதா இல்லையா
Vaithee Romba Feel Panni Ezhuthiruka pola:P
தனிப்படை அமைச்சி தேடிகிட்டு இருக்கேன்!!கிடைத்ததும் மேள தாளம் முழங்க தெரிவிக்கப்படும்
டாய் பப்லிக்ல அப்படிலாம் பேச குடாது டா
ha haa. . Experience talks here :p
Post a Comment