Monday, August 10, 2015

கூகிளின் புதிய CEO ஒரு தமிழன் - சுந்தர் பிச்சை

கூகிளின் புதிய CEOவாக சுந்தர் பிச்சையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஜவஹர் வித்யாலயாவில் படித்தவர். பின் ஐஐடி காரக்பூரில் பொறீயியல் முடித்து பின் ஸ்டான்ஃபோர்டில் எம்.எஸ் படித்தார்!

முன்பு மைக்ரோசாஃப்ட் CEO போட்டியில் சத்யாவோடு மோதினார். கூகிளில் 2004ல் வேலைக்கு சேர்ந்தார். கூகிள் க்ரோம் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.

”2008 சமயத்தில் ஒரு alternative browser எல்லோருக்கும் தேவைப்பட்டது. அப்போது google chrome ஐ மிகச்சிறப்பாக வடிவமைத்து. இன்று ஒரு மில்லியன் பயனாளர்களுக்கும் மேல் பயன்படுத்துவதற்கு முக்கியக்காரணம் சுந்தர் தான்” என கூகிளின் முந்தைய CEOவான லேர்ரி பேஜ் இவரை பற்றி தன் வலைதளத்தில் குறிப்பிடுகிறார்!

2011ல் டிவிட்டர் இவரை உற்று நோக்கி எங்க கம்பெனிக்கு வைஸ் பிரெசிடெண்டா வர்றீங்களா என கேட்டுக்கொண்டது.. ஆனால் அப்போது கூகிளிலேயே இருக்கப்போவதாக தெரிவித்தார். அது மிகச்சிறப்பான முடிவு. அதனால் தான் இன்று CEO அளவுக்கு உயர்ந்திருக்கிறார்!

தமிழன் ஒருவன் உலகின் தலைசிறந்த தேடுபொறி நிறுவனத்தில் CEO ஆகியிருப்பது தமிழர்களுக்கு பெருமை.. அவருக்கு வாழ்த்துக்கள்! 

No comments: