Saturday, November 9, 2013

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரலாமா?

நேற்று அவசர அவசரமாக ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காட்சி பார்த்தேன்.. ஒரு சின்ன குழந்தை (7 வயதுக்குள் இருக்கும்) கடையில் எதையோ காட்டி “அது வேணும்” என்பதாக அடம் பிடித்துக்கொண்டிருந்தது!! 

அந்தப்பா அந்த குழந்தைக்கு எதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த குழந்தை எதையுமே கேட்கத்தயாராகயில்லை.. அந்தப்பாவுக்கு அந்த பொருளை வாங்கித்தருவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. 


ந்த பொருள் அவரது வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவே இருந்தது.. ஆனால் அவர் அந்த குழந்தைக்கு சொன்ன சமாதானம் “அது நமக்கு வேணாம்டா செல்லம்.. நீ ரெண்டு நாள் அத வெச்சி வெளாடிட்டு அப்பறம் தூக்கி போட்டுடுவ.. போன தடவை இப்டி தான் ஒண்ணு வாங்கி தந்தேன்.. அத இப்போ என்ன பண்ண?”


“அது ஒடஞ்சி போச்சிப்பா” இப்படியாக நீண்ட உரையாடல் போய்க்கொண்டிருந்தது.. நான் பேருந்து வந்துவிடவே ஏறிக்கொண்டுவிட்டேன்.. பேருந்தில் எனக்கு இந்த சம்பவம் பற்றி நீண்ட சிந்தனை போய்க்கொண்டே இருந்தது!!

அந்த குழந்தை ஆசையாக கேட்கிறது.. (டெக்னிகலாக want என்பார்கள்) அவர் அது அவசியமா தேவையா என தர்க்கம் செய்கிறார் (டெக்னிகலாக need என்பார்கள்).. குழந்தைகளுக்கு need பற்றி யோசிக்கிற அளவுக்கு அனுபவ அறிவு போதாது.. அவர்களுக்கு அப்போதைக்கு எது தோன்றுகிறதோ, எதன்மீது உடனடி ஆசையோ அது வேண்டும்.

அந்த குழந்தையை தப்பு சொல்ல முடியாது.காரணம் நமக்கு ஒவ்வொரு வயதிலும் ஒரு ஆசை வரும்.. குழந்தையாக இருக்கும்போது சாக்லேட் நிறைய சாப்பிடலாம் போல தோன்றும். ஆனால் அதுவே பெரியவனாக ஆனபிறகு நமக்கு யாராவது சாக்லேட் கொடுத்தாலும், அதை அலட்சியமாக வாங்கி பேக்கெட்டில் போட்டுவிட்டு பிறகு யாருக்காவது தூக்கிக்கொடுத்துவிடுவோம்..

ஆனால் குழந்தைக்கு அந்த வயதில் பூர்த்தியாகாத அந்த ஆசை பின் எப்போது கிடைத்தாலும் அதில் பெரிய ஆர்வம் இருக்கப்போவதில்லை!! ஆனால் அந்த அப்பா அதே பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும்!! அதற்காக குழந்தை செல்போன் கேட்கிறது என்றால் வாங்கித்தர முடியாது!! அது need வரிசையில் வந்து விடும்!!

குழந்தை வளர்ப்பு புத்தகம் இந்த பிரச்சினையை இப்படி ஹேண்டில் செய்யச்சொல்கிறது!! தினம்தோறும் அந்த குழந்தைகென குறிப்பிட்ட தொகை ஒதுக்கி அதன் கையில் கொடுத்து விடுங்கள்!! 5ரூ என வைத்துக்கொள்வோம்!! அது அந்த காசை எதற்கு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளட்டும்.. end of the day அதை என்ன செய்தாய் என்று மட்டும் அந்த குழந்தையிடம் கேட்டுவிட்டு விட்டுவிடுங்கள்..

ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த 5 ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட அனுமதியில்லை என்பதில் தீர்மானமாக இருங்கள்.. உதாரணமாக குழந்தை ஆசைப்படும் பொருள் விலை ரூ50 என்றால், தனக்கு கிடைக்கும் 5ரூபாயை பத்து நாள் சேர்த்து வைத்து அந்த பொருளை வாங்க பழக்குங்கள்..

இதன் மூலம் அந்த குழந்தைக்கு சேமிக்கும் பழக்கம் வரும்.. பணம் கையாளும் திறன் வரும்.. எந்த பொருளையும் சேமிப்பதன் மூலம் வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கை வரும். ஒரு வேளை வாங்கிய பொருள் வேஸ்ட் என்றால் அடுத்த பொருள் வாங்க இதே போல காத்திருந்து வாங்க வேண்டி வரும் என்பது புரியும்!! அதனால் அனாவசியமான பொருள்களை காலப்போக்கில் குழந்தைகளே தவிர்க்க ஆரம்பிப்பார்கள்!!

No comments: