இயக்குனர் ராம் பேசி முடித்ததுமே விஜய் டிவி கொஞ்சம் மானே தேனே பொன் மானேவெல்லாம் போட்டு சமாதனம் சொல்லி “ராமுக்கு நன்றி” என்று சொன்னது எனக்கு தெரிந்து தமிழ் ஊடகத்திலேயே புதிது!
முன்பு கலைஞர் பாராட்டு விழா நடந்த போது அஜீத் பேசிய பேச்சு ஊடகங்களிலும் வெளிவட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பியபோது எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள்! விஜய் தொலைக்காட்சியும் அப்படியே செய்யும் என்று தான் பெரும்பாலானவர்கள் கணித்திருந்தார்கள்!
ஆனால் விஜய் டிவி இதை மிக லாவகமாக கையாண்டிருக்கிறது! இணைய மார்கெட்டிங்கில் இதை reputation management என்பார்கள்! ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் போஸ்ட் போட்டு எந்த brandஐ வேண்டுமானாலும் காலி செய்துவிடலாம் என்ற நிலை வந்த போது இந்த reputation management என்ற துறை உருவானது! கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த துறை அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது!
சோசியல் மீடியா இவ்வளவு பலம் பெறாத காலத்தில் இணையத்தில் யாரைப்பற்றியாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் எதாவது complaint forum தளத்தில் எழுதுவார்கள்! ”ஏர்டெல்காரன் என்கிட்ட காசு புடிங்கிட்டான்” என்பது மாதிரி எழுதினால் அதற்கு கீழே airtelன் நோடல் அதிகாரி யாராவது 24 மணி நேரத்தில் சரி செய்து தருகிறோம் என்று பதிலளித்திருப்பார்கள்! கஷ்டமர் கேர்கள் கை கொடுக்காத நேரத்தில் இது உதவும்.. ( நான் சில முறை முயற்சித்திருக்கிறேன்)
நிறுவனங்களில் இதற்கென ஒரு டீம் இருக்கும்.. அவர்கள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ நிறுவனம் பற்றி யாராவது தவறாக தகவல் பரப்புகிறார்களா என பார்த்துக்கொண்டே இருப்பார்கள்! அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எழுதுகிறார்களா என பார்ப்பார்கள்! (இதற்கு சில டூல்கள் இருக்கிறது)
அவதூறு என்றால் சம்பந்தப்பட்ட நபரையோ தளத்தையோ அணுகி நீக்க சொல்வார்கள்! பாதிக்கப்பட்டவர் என்றால் பாதிக்கப்பட்டவரை அணுகி பாதிப்பை சரிகட்டுவார்கள்! சரி செய்த பிறகு அதையே ஒரு போஸ்டாக போட சொல்லி விளம்பரமாக மாற்றும் உத்தியும் உண்டு :) விஜய் டிவி செய்தது இதில் ஒரு வகை!
முன்பு கலைஞர் பாராட்டு விழா நடந்த போது அஜீத் பேசிய பேச்சு ஊடகங்களிலும் வெளிவட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டாலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பியபோது எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள்! விஜய் தொலைக்காட்சியும் அப்படியே செய்யும் என்று தான் பெரும்பாலானவர்கள் கணித்திருந்தார்கள்!
ஆனால் விஜய் டிவி இதை மிக லாவகமாக கையாண்டிருக்கிறது! இணைய மார்கெட்டிங்கில் இதை reputation management என்பார்கள்! ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் போஸ்ட் போட்டு எந்த brandஐ வேண்டுமானாலும் காலி செய்துவிடலாம் என்ற நிலை வந்த போது இந்த reputation management என்ற துறை உருவானது! கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த துறை அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது!
சோசியல் மீடியா இவ்வளவு பலம் பெறாத காலத்தில் இணையத்தில் யாரைப்பற்றியாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் எதாவது complaint forum தளத்தில் எழுதுவார்கள்! ”ஏர்டெல்காரன் என்கிட்ட காசு புடிங்கிட்டான்” என்பது மாதிரி எழுதினால் அதற்கு கீழே airtelன் நோடல் அதிகாரி யாராவது 24 மணி நேரத்தில் சரி செய்து தருகிறோம் என்று பதிலளித்திருப்பார்கள்! கஷ்டமர் கேர்கள் கை கொடுக்காத நேரத்தில் இது உதவும்.. ( நான் சில முறை முயற்சித்திருக்கிறேன்)
நிறுவனங்களில் இதற்கென ஒரு டீம் இருக்கும்.. அவர்கள் ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ நிறுவனம் பற்றி யாராவது தவறாக தகவல் பரப்புகிறார்களா என பார்த்துக்கொண்டே இருப்பார்கள்! அல்லது பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எழுதுகிறார்களா என பார்ப்பார்கள்! (இதற்கு சில டூல்கள் இருக்கிறது)
அவதூறு என்றால் சம்பந்தப்பட்ட நபரையோ தளத்தையோ அணுகி நீக்க சொல்வார்கள்! பாதிக்கப்பட்டவர் என்றால் பாதிக்கப்பட்டவரை அணுகி பாதிப்பை சரிகட்டுவார்கள்! சரி செய்த பிறகு அதையே ஒரு போஸ்டாக போட சொல்லி விளம்பரமாக மாற்றும் உத்தியும் உண்டு :) விஜய் டிவி செய்தது இதில் ஒரு வகை!
2 comments:
சிறந்த பகிர்வு
தொடருங்கள்15071
அருமை. இப்படிப்பட்ட தகவல்களை அதிகம் பகிருங்கள். நல்ல எழுத்து நடை.
Post a Comment