Showing posts with label முகப்புத்தகத்தின் முகத்திரை. Show all posts
Showing posts with label முகப்புத்தகத்தின் முகத்திரை. Show all posts

Friday, June 29, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை (காதலில் விழுந்தேன்)


பல சந்தர்ப்பங்களில் ஆறுதலளிக்கும் ஃபேஸ்புக், சில சமயம் அதிர்ச்சியளிக்கவும் தயங்குவதில்லை.

ஃபேஸ்புக்கில் பெண்ணாசையால் வலையில் சிக்கிய ஆசாமி பற்றிய கதை..
சென்னையில் வீடெடுத்து தங்கி இருக்கும் ஒருவர்.பெயர் குமார் என வைத்துக்கொள்வோம்.அவர் ஏற்கனவே திருமணமானவர்.ஒரு குழந்தை வேறு இருக்கிறது.தினந்தோறும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட அவருக்கு ஒரு நாள் ஒரு பெண்ணிடமிருந்து ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் வந்திருக்கிறது.இவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார்.

அந்த பெண்மணியின் ப்ரொபைலை மேய்ந்த போது அந்த பெண்ணின் சில ஃபேட்டோக்கள் இருந்திருக்கின்றன.அந்த ஃபோட்டோவால் கவரப்பட்டதால் அந்த பெண்ணின் ரெக்வஸ்டை அக்செப்ட் செய்ததாக கூறுகிறார்.

அக்ஸெப்ட் செய்த சில நிமிடங்களில் அந்த பெண் சேட் செய்கிறார்.சாதாரணமாக துவங்கும் பேச்சு பின் சுவாரசியமாக நகர்கிறது.இவ்வாறு நாள் முழுதும் சேட்டுகிறார்கள்.
மறுநாளும் தொடர்கிறது.குமார் ஆபீஸில் இருக்கும் பொழுதெல்லாம் சேட்டுகிறார்.தன் நம்பரை பகிர்கிறார். இதுவரை ஃபேஸ்புக்கில் மட்டுமே நடந்த சேட் பின் கால் ஆகிறது. இருவரும் காதலர்கள் போலவே பேசிக்கொள்கிறார்கள்.குமார் தனக்கு திருமணமானதையும்,குழந்தை இருப்பதையும் மறந்து தன் அந்தரங்க விஷயங்களையும் கூட அந்த பெண்ணோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு நாள் குமாரின் வீட்டுக்கு வங்கியிலிருந்து கிரெடிட் கார்ட் ஆசாமிகள் வருகிறார்கள்.ஒரு வருடத்திற்கு முன் குமார் பிரதான வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருக்கிறார்.கணக்குவழக்கில்லாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்த குமார், வங்கியிலிருந்து வந்த ஸ்டேட்மெண்ட் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.75ஆயிரம் ரூபாய் பில் வந்திருக்கிறது.எப்படி கட்ட போகிறோம் என்று கையை பிசைந்துகொண்டிருந்தவரின் கழுத்தை வங்கிக்கார தடியர்கள் நெருக்குகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கட்டுவதாக ஒப்புக்கொள்கிறார் குமார்.ஆனால் சில பிரச்சினைகளின் காரணமாக குமார் வேலை செய்யும் நிறுவனத்தை இழுத்து மூடவே, வேறு வழியில்லாமல் பெட்டி படுக்கையோடு ஊருக்கு சென்று விடுகிறார். பழைய நம்பரை மாற்றிவிட்டு செட்டிலாகிவிட்ட குமார், கிரெடிட் கார்டு தொடர்பாக வங்கியிலிருந்து யாரும் தொடர்பு கொள்ளாததால் வங்கிக்கு நாமத்தை போட்டுவிட்டு குதூகலமாக இருந்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வேறு வேலை தேடி மீண்டும் சென்னை வந்து செட்டிலாகும் குமாருக்கு வந்தது டவுட் “இந்த பேங்க்காரய்ங்க.. இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் எப்படி கண்டுபிடிச்சாய்ங்கஎன்று தலையை பிய்த்துக்கொண்டார்.

எப்போதோ பேச்சுவாக்கில் வங்கி ஒன்றில் தான் பணிபுரிவதாக அந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.ஃபேஸ்புக்ல வந்த புள்ள காரணமா இருக்குமோ.. என்று யோசித்தவாறே அந்த பெண்ணுக்கு போன் அடித்த குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது வரை ரொமாண்டிக்காக பேசிய அந்த பெண், இப்போது அதிகார தொனியில் “உங்களோட எல்லா தகவலும் எங்ககிட்ட இருக்கு நீங்க தப்பிக்க முடியாதுஎன சினிமாவில் வரும் வில்லியாக அந்த பெண் பேசியது குமாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

நன்றி – விஜய் டிவி – நடந்த்து என்ன டீம்

வங்கி ஆசாமிகள் இது போல களம் இறங்கி இருப்பது சமீபகாலமாக அதிர்ச்சியளித்திருக்கிறது.கிரெடிட் கார்டில் பணம் வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் தலைமறைவான குமாரை இங்கே நியாயப்படுத்துவதற்கில்லை.ஆனால் வங்கி கணக்கு துவங்கவே இதை கொண்டுவா..அதை கொண்டுவா என சாதாரண மக்களை அலைகழிக்கும் வங்கிகள்.. கார்பரேட் ஆசாமிகளுக்கு நிறுவனத்திற்கே வந்து இலவசமாக சேலரி அக்கவுண்ட் வழங்கி விடுகின்றன. கூடவே கிரெடிட் கார்டு வேறு.ஒரு காலத்தில் லோன் வழங்குவதற்கான மொத்த அதிகாரமும் மேனேஜரின் கையில் தான் இருக்கும்.

இப்பொழுதோ லோனுக்கு ஆள்பிடிக்க ஒரு டீம், லோன் கட்டாதவனின் கழுத்தை பிடிக்க இன்னோரு டீம் என வேலை பிரிக்க பட்டிருப்பதில் தான் பிரச்சினை துவங்குகிறது.
லோன் கொடுக்கிற டீமுக்கு எப்படி கட்டுவான் என்ற கவலையெல்லாம் இல்லை.எவன் தலையிலாவது மிளகாய் அரைத்தால் டார்கெட்டை அடைந்துவிடலாம் என்ற நெருக்கடி, லோன் கட்டாதவனை சிபிஐ போல குறுக்குவழியில் பிடித்து தங்கள் டார்கெட்டை முடிக்க முயல்கிறது இன்னொரு டீம். வங்கியின் இந்த செயல்பாட்டை பற்றி மற்றொரு சமயம் பேசுவோம்.

ஃபேஸ்புக்கில் குமார் கோட்டை விட்ட இடங்களை அலசுவோம்.

1)       எப்பொழுதுமே பெண்களிடமிருந்து ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வரவே வராது.அப்படி வருகிறதென்றால் உள்ளே எதோ சங்கதி இருக்கிறதென்று அர்த்தம்.

2)       ப்ரொஃபைலை அலசி இருக்க வேண்டும்.படிப்பு மற்றும் ஊர் போன்ற தகவல்கள் இல்லையென்றால் அது ஃபேக் ஐடி என்று பொருள்.

3)       மியூச்சுவல் ஃப்ரெண்ட் யாரும் இருக்கிறார்களா என பார்த்திருக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் எப்படி என்னை தெரியும்? எப்படி என்னை கண்டுபிடித்தீர்கள் என்று விசாரித்திருக்க வேண்டும்.

4)       ஒரு கட்டம் வரைக்கும் தான் ஃபேஸ்புக்கில் சேட்டுவதும்,போனில் பேசுவதுமெல்லாம். ஒருவாரம் பேசியதுமே நேரில் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.அவர் உண்மையான ஆசாமிதானா..இது பெண்ணுக்கு மட்டுமல்ல.ஆணுக்கும் தான்.காரணம் பின்னால் எதாவது பிரச்சினை என்றால் போலீஸை அணுகும் போது ஆள் அடையாளம் சொன்னால் உதவும்.

Monday, June 4, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 5


யார் இந்த அல்டாப் ஆறுமுகங்கள்.அதை தெரிந்துகொள்ள நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அது ஒரு காலம்.அப்பொழுது அப்பாவியாக இவர்கள் ஃபேஸ்புக்கில் அடியெடுத்து வைத்திருப்பார்கள். ஃபேஸ்புக் என்றால் என்ன? ஸ்டேட்டஸ் என்றால் என்ன? ஏன் லைக் போடுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவே தெரியாது.
திக்குத்தெரியாத காட்டில் இலக்கின்றி பயணித்திருப்பார்கள்.இன்று இவர்கள் குட் நைட்என்று ஸ்டேட்டஸ் தட்டினால் கூட அதை இருபது கொசுக்கள் லைக்கும்.



ஆரம்பத்தில் இவர்களை உற்று பார்த்தால் ஒன்று நன்றாக விளங்கும். எல்லா ஸ்டேட்டஸுக்கும் லைக்கை போடுவார்கள். “யார்ரா அது நம்ம ஸ்டேட்டஸையும் மதிச்சி லைக் போடறதுஎன எல்லோரும் இவர்களை பார்த்து திரும்பி, உலகம் இவர்களது ஸ்டேட்டஸை லைக்கும். பிறகு இவர்கள் கமெண்டுவார்கள், அவர்கள் பதிலுக்கு கமெண்டுவார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுடைய ஸ்டேட்டஸுகள் பெரும்பாலோரால் கவனிக்கப்படும்போது நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் அதே ஃபார்முலாவை கடைபிடிப்பார்கள். “இவனை எல்லாம் எதுக்கு மதிக்கணும் என எவனையும் கண்டுகாமல் திரிவார்கள்கேட்டால் பிஸி.. “ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாக,அமெரிக்கால ஒபாமா கூப்டாக என உளருவார்கள்”.

இவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர்கள் அத்தனை பேரும் ஆக்டிவ் யூசர்கள். பெரும்பாலும் அல்டாப்புகளை நண்பர்கள் லிஸ்டில் வைத்துக்கொள்வதால் நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாக வெளியே தெரியுமே தவிர ஒரு புண்ணியமும் இல்லை. சாதா ஆசாமிகள் தான் நமக்கு லைக்கும் கமெண்டும் போடுவார்கள் என்பதால் இத்தகையவர்களை டார்கெட்டினாலே போதும் நாமும் பிரபலமாகி விடலாம்.

ஃபேஸ்புக்கில் பிரபலமாவது ரொம்ப சிம்பிள்.24 மணி நேர இணைய தொடர்பு. எல்லோருடைய ஸ்டேட்டஸுக்கும் லைக்,கமெண்ட், நமக்கு வரும் எல்லா நண்பர் அழைப்பையும் அக்ஸெப்டுதல், கொஞ்சம் காமெடி,கலாய்ப்புகள், குறிப்பாக எந்த கட்சியும் சாராமல் தனிப்பதிவுகளாக ஸ்டேட்டஸ் போட்டாலே போதும், அடுத்த ஆறே மாதத்தில் ஃபேஸ்புக் உங்களைத்திரும்பி பார்க்கும்.

ஆனால் பிரபலமான பின் ஒரு விலை கொடுத்தாக வேண்டும்.அது ரஜினியானாலும் சரி, நயன்தாராவானாலும் சரி,.. அது என்ன விலை. 

1) நீங்கள் வழக்கம் போல் எல்லோருடைய கமெண்டுக்கும் லைக், கமெண்ட் போடாவிடில் “அவனுக்கு தலைக்கணம் வந்துடிச்சி மச்சி”””’” என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

2) எப்பொழுதும் யாராவது செட்டில் வந்து தொல்லை கொடுப்பார்கள்.

3)கண்ட போட்டோக்களிலும் உங்களை டேக் செய்து வேடிக்கை பார்ப்பார்கள்

4)அவர்களுக்கு பிடித்த குருப்பில் உங்களை சேர்த்து விட்டுவிடுவார்கள், உங்கள் அனுமதியில்லாமலே. ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தால் நண்பர்களின் எண்ணிக்கையை விட நீங்கள் இணைந்திருக்கும் குரூப்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

5) நீங்கள் உங்களையும் அறியாமல் ஃபேஸ்புக்கிற்கு அடிமையாகி இருப்பீர்கள்

6)யார் யாரோ போடும் ஸ்டேட்டஸின் கீழ் இவர்கள் போடும் சண்டையில் உங்களை அழைத்து மத்தியஸ்தம் கூப்பிடுவார்கள்

7)எல்லா ஸ்டேட்டஸும் எல்லோரும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது.உங்கள் ஸ்டேட்டஸில் யாருக்காவது உடன்பாடு இல்லையென்றால் “என்ன பாஸ்இப்படி பண்ணிட்டீங்கஎன ஏதோ கொலைக்குத்தம் செய்தது போல விசாரிப்பார்கள்.

சரி நன்மைன்னு எதுவுமே சொல்ல மாட்டீங்களான்னு கேக்கறது தெரியுது?

ஏன் இல்லை.இருக்கிறதே.

பவர்ஸ்டார் – கோபிநாத் சண்டையில் எல்லோரும் யார் பக்கம் நின்றார்கள்.அதே.. உங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டமே இருக்கும். எனவே கவலை வேண்டாம்.உங்களை பகைத்துகொண்டு எவனும் உயிரோடு ஊர் போய்விட முடியாது.

என்னைகேட்டால் ஃபேஸ்புக்கைப்போல் ஒரு சிறந்த எண்டர்டெயின் மெண்ட் இருக்கவே முடியாது.தினமும் எதாவதொரு பிரச்சினையை யாராவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள். தினந்தோறும் யார் செய்யும் தவறுக்காவது தூக்குதண்டனை வழங்கப்படும். தீர்ப்பு எழுதப்படும். எதாவதொரு கட்சி ஆட்சியமைக்கும். ஒரு கட்சி மோசம் என முத்திரை குத்தப்படும்.யாருடைய டவுசராவது அவுக்கப்படும்.

நிறைய பேருக்கான அங்கீகாரத்தை ஃபேஸ்புக் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கிறது. இருக்கும். இருக்கட்டும்..!!


(முகத்திரை விலகும்)

Friday, May 18, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 4


போலி அசலையும் விஞ்சிவிடும்” – வைரமுத்து.

ஃபேஸ்புக்கில் உலா வருபவர்களில் யார் போலி,யார் உண்மை என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.

சொந்த பெயரில் உலா வராதவர்கள் போலிகள் என்றொரு பொது அபிப்ராயம் உள்ளது. அது தவறு. பெயரை வைத்து போலி என அடையாளம் காண்பது எளிது என்பதால் இந்த நம்பிக்கை.

ஒரு போலியை உதாரணமாக எடுத்துகொள்வோம்.. என் நண்பன்.. பெயர் மட்டும் தான் உண்மை. பிறந்த நாளை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டாம். சொந்த ஊர் சென்னையாம்.(அவன் சொந்த ஊர் பக்கா கிராமம்). படித்தது எஸ்.எஸ்.என் கல்லூரியாம். போட்டோ போலி. ஏண்டா இப்படின்னு கேட்டா.. “நாம நிறையா பேருக்கு(பொண்ணுங்களுக்கு) தினமும் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் குடுக்கறோம். அவங்க நம்ம ஃப்ரொஃபைலை பார்த்தா கேவலமா இருக்க கூடாது பாருஎன்கிறான்.

போலிகள் மூன்று விதமாக உருவாகிறார்கள்.

தங்கள் சொந்த தகவல் கொடுத்தால் மற்றவர்களால் எதாவது பிரச்சினை வந்து விடலாம், தொல்லை கொடுக்கக்கூடும். தங்கள் கருத்து சுதந்திரம் பறிபோய்விடும் என்பதாக எண்ணுபவர்கள் இந்த வரிசையில் வருவார்கள்.(பெண்கள் இந்த வரிசையில் அதிகமாக வருகிறார்கள்). பாதுகாப்பு காரணமாக போலியானவர்கள் தான் அதிகம்.

இரண்டாவது வகையினர் ரெகக்னைசன் எனப்படும் பாராட்டுதலுக்காக அரிதாரம் பூசுபவர்கள்.  நடிகர் நடிகை போட்டோவை வைத்துக்கொண்டு “ கருப்பு எம்.ஜி.ஆர்” என்பது போன்ற வித்தியாசமான பெயரை வைத்துக்கொண்டால் அதிக லைக் கமெண்ட் வாங்கி இணையத்தில் பாப்புலராக உலாவலாம் என்ற பொது அபிப்ராயம் இத்தகையவர்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

மூன்றாவது ஆசாமிகள் ஜகஜ்ஜால கில்லாடிகள். நம்மை கில்மாவான போட்டோவில் டேக் செய்வது தொடங்கி, பெண்கள் லாகின் செய்ததுமே ”ஹாய் ஸ்வீட்டி” என திரையில் தோன்றுவது,பெண் வேடமிட்டு நம்மை வசியப்படுத்தி நம்பர் வாங்கி ஜில்பான்ஸேவாக பேசி பணம் கரந்துவிடுவது வரை பக்கா அயோக்கியத்தனங்களின் கூடாரம், சாட்சாத் இவர்களே.

முதலாவது வகையினர் நமக்கு எந்த தொந்திரவும் செய்யப்போவதில்லை என நம்புவோம். 

இரண்டாவது வகையினர் ரொம்ப காலம் மார்கெட்டில் இருக்க முடியாது. ரஜினி போலவே மெமிக்ரி செய்பவரை யாரும் எந்திரன் படத்திற்கு நடிக்க கூப்பிடமாட்டார்கள்.


மூன்றாவது ஆசாமிகளை நாம் அடையாளம் காண்பதே கடினம். தெரியாத்தனமாக இவர்களை நம் நண்பர்களாக இணைத்துக்கொண்ட பின்னரே இவர்களின் பசுந்தோல் விலகும். இந்த ரிஸ்க்கை விரும்பாதவர்கள் இவர்களை வாசலிலேயே விசாரித்து வழியனுப்புவது நல்லது. 

தவறி வீட்டுக்குள் அனுமதிக்கிறவர்கள் தகுந்த இழப்பீடுகளை சந்திக்க நேரிடும். ஃப்ரிரெண்ட் ரெக்வஸ்ட் வரும்போதே சம்பத்தபட்ட நபரின் முகப்பை சிப்பி.பிப்பி.ஐ கண் கொண்டு அலசுங்கள்.
என்னைப் பொறுத்தவரை நம் முழு தகவலையும் பதியும் முன் நம் தைரியத்தை சிடி ஸ்கேனில் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை போலிகளால் நமக்கு ஆபத்து வரும் போது அதை தாங்கும் மன தைரியம் இருந்தால் தைரியமாக நம் போன் நம்பர் என்ன.. வீட்டு அட்ரஸே கொடுக்கலாம்.
ஆனால் போலிகளுக்கு தான் இங்கே முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

“எல்லா மேனேஜரும் நல்லவர்களல்ல” என நான் ஸ்டேட்டஸ் போடுகிறேன் என வைத்துக்கொள்வோம். “அப்ப உங்க மேனேஜர் அயோக்கியனா பாஸ்” என்பதாக எவனாவது கமெண்ட்டிவிட்டு அதை என் மேனேஜர் பார்த்தால் வாழ் நாளுக்கும் எனக்கு ப்ரொமோசனே கிடைக்காது. அப்ரைசல் மனசாட்சியே இல்லாமல் 300 ரூபாய் போடப்படும்.

இது போன்ற தலைவலிகள் போலிகளுக்கு இல்லை. போலிகளால் மற்றவர்களுக்குத்தான் தொல்லையே தவிர அவர்களுக்கல்ல. அவர்கள் யாரையாவது பூடகமாக தாக்கி எழுதினால் ”யாரை மச்சி சொல்லற” என யாரும் போன் போட்டு கேட்கமாட்டார்கள். “என்ன பாஸ் நீங்க போய் இது மாதிரி எழுதிருக்கீங்க” என எவனும் விசாரிக்க மாட்டான்.

அவர்கள் பாட்டுக்கு பத்தவைத்துவிட்டு பதுசாக போய்க்கொண்டே இருப்பார்கள். மூன்றாம் உலகப்போரே நடந்தாலும் மூக்கை பிடிக்க சாப்பிட்டுவிட்டு ஸப்பாடா என இருப்பார்கள்.
போலிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அவர்களின் பதில்  ”உங்களை பாதுகாத்துகொள்ள அஸ்திரமும் கேடயமும் கொடுக்கபட்டிருக்கும்போது அதை கையாள தகுந்த பயிற்சியோடு உலாவ வேண்டியது உங்கள் கடமை.

காரணம்..

ஃபேஸ்புக்கில் உண்மையான தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.
(அடுத்த பதிவில் அல்டாப்பு ஆறுமுகங்கள்)
(முகத்திரை விலகும்)

Thursday, May 10, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 3


ஃபேஸ்புக்கில் பொண்ணு பிடிக்கும் ஆசாமிகளின் கதை படு சுவாரசியமானது. ஆரம்பத்தில் பயங்கர டெடிக்கேட்டடாக பெண் தேடுவார்கள்.

எப்படி தேடுகிறார்கள்?

முதலில் ரம்யா, நித்யா என்பன போன்ற பெயராக ஃபேஸ்புக் சேர்ச் பாக்சில் தேடி தேடி ரெக்வஸ்ட் கொடுப்பார்கள்.தேடப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ப்ரொஃபைல் போட்டோவே இருக்காது.

(தங்கள் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளுகிற துணிச்சல் இல்லையோ என்னவோ..ஒருவேளை அவர்கள் காட்டிவிடும் பட்சத்தில் அதை பார்க்க நமக்கு துணிச்சல் தேவைப்படலாம்).

சில பெண்கள் நடிகைகளின் முகமும் பொம்மை முகமும் வைத்து ஏமாற்றுவார்கள். நம்மவர்கள் அந்த முகத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். அந்த ஆராய்ச்சிகளில் பின்வருவன இடம் பெறும்(வயது,கல்லூரி, நிறுவனம், பெயர்,எந்த ஊர்,இத்யாதி,இத்யாதி).

வயது ரொம்ப முக்கியம்..(காரணம் தெரியாதவர்கள் சுட்டி டிவி பார்க்கவும்)


பெரிய கல்லூரியை சேர்ந்தவர்கள் செம ஃபிகர் என்ற அணுமானம் அடிப்படையிலேயே உண்டு.(பொதுவாக கிராமத்து ஆசாமிகள் இதில் அதிகம் பாதிக்கபட்டிருக்கிறார்கள்)

ஊரில் - - சென்னை,கோவை,கேரளாவுக்கு முன்னுரிமை அளிக்கபடும்.(லிஸ்டில் மதுரை,திருநெல்வேலியை விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்,ஆனால் அங்கே ஃபேஸ்புக் அவ்வளவு பிரபலமா என்பது சந்தேகமே)

ஐடி நிறுவனம் என்றால் ராஜ உபசாரம் உண்டு (காரணம் பல ஐடி நிறுவன நண்பர்கள் ஏற்கனவே கதை கதையாக விட்டு கடுப்பேற்றிய வரலாற்று பாதிப்புகள்)

இப்படியான முயற்சிக்களை பட்டி டிங்கரிங் செய்து பிறகு, நண்பர்களின் நண்பர்களாக தேடத்துவங்குவார்கள். அப்படி சிக்கும் பெண்கள் இவர்களை பாராமுகமாக நடத்துவார்கள். அப்படியே செட்டாகும் முகங்கள் கூட பார்க்கவியலா முகமாக நேரில் நடந்த கொடுமைகள் எல்லாம் உண்டு.

இவர்களின் தேடுதல் வேட்டை இப்படி இருக்க.. நிலைமை வேறு என்பது தான் கூத்தே..

பசங்களை விட பெண்கள் படு விவரமானவர்கள் என்ற உண்மையை நம் பச்சை மண்ணுங்கலால் ஜீரணித்து கொள்ளவே முடிவதில்லை.

நான் என்னுடன் நேரில் பழகாத பசங்க ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தால் அக்சப்ட் பண்ணுவதே இல்லைஎன்பதே அவர்களின் பதில்.

பெண்களை பற்றி பசங்க சில மதிப்பீடுகளை கொண்டிருப்பதைப்போலவே பெண்களும் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக பசங்க ஓவர் ஜொல்லு பார்ட்டியாக இருக்கிறார்கள்.ஆன்லைனுக்கு வந்ததுமேஹாய்என்று ஒரே நேரத்தில் பத்து பேர் திரையில் பயமுறுத்துகிறார்கள். நாங்கள் ஃபேஸ்புக் காதலை என்கரேஜ் செய்வதே இல்லை என்பதே அவர்கள் தரப்பு வாதம்

சரி யாருக்கு தான் ஃபிகர்கள் உஷாராகிறார்கள்?

காரணம் ரொம்ப சிம்பிள். நாம் படிக்கும் கல்லூரியின் நண்பர்களின் தோழிகள்,அவர்களின் தோழிகள், நிறுவனத்தில் பணி புரியும் நண்பர்களின் நண்பர்கள் என வட்டம் நீழும். இந்த சர்க்கிலில் யாராவது சிக்கினால் உண்டு. மற்றபடி கஷ்டம் தான்.

(குறிப்பு : சில கில்லாடிகள் பெண்களை மிகத்திறமையாக கவர்ந்துப்பின் பணம் பறிப்பதும் தொடர்கிறது.பெண்களிலும் சிலர் இப்படி உண்டு.அவர்கள் பற்றி அப்புறமா…)

(உபதகவல் : தமிழில் எழுதும் ஆசாமிகளுக்கு ஃபிகர்கள் சிக்க வாய்ப்புகள் குறைவு)

ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, மொபைலில் நீண்டுடுடுடு.. நட்பாகி, காதலாகி பின் கடற்கரையில் சங்கமித்து நாசமாய் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இத்தகைய காதல்கள் ஸ்திரத்தன்மை அற்றவை என்பவை பலரது அனுமானம்.ஆனால் அது காதலிக்கும் ஆசாமிகளை பொறுத்தது.இரண்டு முழு யோக்கியர்கள் காதலிக்கும் போது காதலில் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல. தரம்,மணம் சுவை,திடம் என சன்ரைஸ் விளம்பரத்தில் வரும் எல்லாமே சரியாக அமையும் என்பதை நினைவு படுத்திவிடுகிறேன்.

அவை இல்லாத பட்சத்தில் கல்யாண் புரட்சி போராட்டம் தான்.

ஃபிகரை பிக்கப் பண்ணும் நோக்கத்தோடு ஃபேஸ்புக்கில் வலம் வந்த ஆரம்பகால முகப்புத்தக வாசிகள் பின் தடுமாறி, தடம் மாறி, பல புதிய முயற்சிகள் செய்து தங்களை வேறு வகைகளில் வெளிப்படுத்தி பாப்புலராகிப்பின் செட்டாகும் ஃபிகர்களையும் தோழர் ஆக்கிக்கொண்டு ஆரோக்கியமான நட்பாக பல போராட்டங்களில் வெற்றிகரமாக பங்கு பெற்ற வரலாற்று சுவாரசியங்கள் உண்டு.

ஆனால் ஃபிகர்களைமட்டுமே உசார் பண்ண வருகிறவர்களுக்கான நீதி ஒன்று தான்.

கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பி தீர விசாரிக்க களம் இறங்க வேண்டாம் என்பதே

(போலிமுகத்திருடர்கள் பற்றி அடுத்த பதிவில்)

(முகத்திரை விலகும்)




Tuesday, May 8, 2012

முகப்புத்தகத்தின் முகத்திரை – 2


நீங்கள் தின்நதோறும் எவ்வளவு  நேரம் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தே ஃபேஸ்புக்கில் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்க முடியும்.

என் புருசனும் கச்சேரியும் :
தினமும் ஃபேஸ்புக்கில் லாகின் செய்கிறீர்கள், யாராவது ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்களா என செக் செய்து,அதை அக்சப்டோ ரிஜெக்டோ செய்கிறீர்கள்.பின் நோட்டிஃபிகேசன் பாத்துவிட்டு துக்கடாவென வெளியேறிவிடுகிறீர்கள்.இவர்கள் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என்ற ரகம்.பாத்துக்கோ நானும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருக்கேன்என போகிற வருகிறவர்களிடமெல்லாம் சவுண்டு விடுவார்கள்.இவர்களை நாம் பெரிதாக சட்டை செய்ய வேண்டியதில்லை.


ஆக்டிவ் யூசர்கள்
ஃபேஸ்புக்கில் இவர்கள் வைத்தது தான் சட்டம்.இவர்கள் ஆதரிப்பவர்கள் தான் ஃபேஸ்புக்கில் ஆட்சிஅமைக்கமுடியும்.(வருங்காலத்தில் இவர்களைக்கொண்டே அரசியல் நகர்வுகள் இருக்கலாம்..சோ அரசியல்வாதிகள் கவனிக்க)

எதுக்கு இவ்வளவு பில்டப் என சொல்லிவிடுகிறேன்.அதற்கு முன்.யார் இவர்கள்?

பெறும்பாலும் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருப்பார்கள்.அந்த நிறுவனத்தில் ஃபேஸ்புக்கிற்கு தடை இல்லாமல் இருக்கும்.காலை அன்றாட பணியோடு சேர்த்தே ஃபேஸ்புக்கையும் துவங்குவார்கள்.மாலை வேலைக்கு முழுக்கு போடுவதோடு ஃபேஸ்புக்குக்கும் சேர்த்தே கும்பிடு.சனிக்கிழமையும் அலுவலகம் உண்டு.ஞாயிறு தடா..

அவ்வப்போது வேலைக்கு நடுவே லைக்கு கமெண்டு போடுவது.இவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் எவன் தலையாவது உருளப்போகிறது என்று அர்த்தம்.இவர்கள் ஆதரவு இல்லாத சண்டை தோற்று போகும்.

பொழுதுபோக்கு ஆசாமி:
இவர்கள் தினமும் காலையும் மாலையும் சும்மா தலையை மட்டும் காட்டிவிட்டு போவார்கள். நண்பர்கள் போடும் ஸ்டேட்டஸ்,படங்களுக்கு விழும் லைக்குகள் இவர்கள் உபயம்.கம்மெண்ட் உட்பட.
இவர்களுக்கு பூச்செண்டு கொடுத்தே ஆக வேண்டும்.தான் உண்டு தன் வேலை உண்டுஎன்றே இருப்பார்கள்(பெரும்பாலும்).
ஆனால் இவர்கள் காலப்போக்கில் முன்னிரண்டு வகையில் சேராவிடில் ஃபேஸ்புக்கிற்கு தலைமுழுக்கு போட நேரிடும்.


மாப்பிள்ளைகள்:
இவர்கள் பெரும்பாலும் பொண்ணு பார்க்க வருவார்கள்.பச்சையாக சொல்வதென்றால் ஃபிகர் உசார் பண்ணுதல்இவர்கள் தொழில்.பெண்களுக்கு மட்டுமே ரெக்வஸ்ட் கொடுத்தல் இவர்களின் உபதொழில்.
இவ்வகை ஆசாமிகள் ஃபிகர்கள் யாரும் செட் ஆகாமல் தோற்று போவார்கள்.
  
(காரணம் அடுத்த பதிவில் –  நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கட்சி அடிதடி பற்றியும்)
(முகத்திரை விலகும்)